கவிஞனின் வேலை - கவிஞர் மதார்

உயிர் வாழ கவிஞனுக்கு ஒரு வேலை தேவை. அது அவனுக்கு பிடித்ததாகவும் சமயங்களில் பிடிக்காததாகவும் அமையக் கூட வாய்ப்பு உண்டு. தமிழ் கவிஞர்களில் தாங்கள் செய்யும் வேலையை கவிதைக்குள் கொண்டு வந்து எழுதிய கவிஞர்கள் குறைவுதான். பெரும்பாலான கவிஞர்கள் கவிதையை புற வாழ்வின் விடுதலையாக கருதியதால் அதை எழுத விரும்பவில்லை. சில கவிஞர்கள் எழுதியும் இருக்கிறார்கள். விக்ரமாதித்தனின் கவிதைகள் நாடோடி கூறுகளுடன் அவரது பயணத்தையும் கூறுபவை.

ரத்தத்தில்
கை நனைத்ததில்லை நான்
எனினும்
ரத்தம் சிந்தவைப்பவர்களின் நிழலில்
தங்க நேர்கிறது எனக்கு
 
திருடிப் பிழைத்ததில்லை நான்
எனினும்
திருடிப் பிழைப்பவர்களிடம்
யாசகம் வாங்கி வாழ நேர்கிறது எனக்கு
 
கூட்டிக்
கொடுத்ததில்லை நான்
எனினும்
கூட்டிக் கொடுப்பவர்களின்
கூடத் திரிய நேர்கிறது எனக்கு.

தேவதேவன் பள்ளி ஆசிரியராக இருந்து கொண்டு அதை கவிதைகளிலும் எழுதியிருக்கிறார். லக்‌ஷ்மி மணிவண்ணன் தனது கடைக்கு வாடகைப்பணம் செலுத்தும்போது இவர்களுக்கும் சேர்த்தே செலுத்துகிறார்.


நானொரு கடை நடத்திக் கொண்டிருக்கிறேன்
காலையில் பொருட்களையெல்லாம்
எடுத்து திண்ணையில்
வைப்பேன்
வருவதற்கு முன்பாக
சில மூப்புகள்
அமர்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள்
வம்பு
பால்யம்
நேற்று இன்று
எல்லாம்

மாலையில் விற்றதுபோக
விற்காததுபோக
அனைத்தையும்
உள்ளே
வைத்து விடுவேன்

அதன்பின்னர்
நான்கைந்து நாய்கள்
அந்த திண்ணையை
எடுத்துக் கொள்வார்கள்
அந்த கடை அவர்களுடையது
என்றுதான் அவர்கள்
நினைக்கிறார்கள்

நாய்கள் வராதவொரு நாளில்
ஒரு குரங்கு
வந்திருந்தது என கேள்விப்பட்டேன்
விருந்தினராக
வந்தது அது

எல்லாவற்றுக்கும் சேர்த்துத்தான்
நான் வாடகை
செலுத்திக் கொண்டிருக்கிறேன்

இரவில் சில பறவைகள்
கூரையில் வந்தமர்ந்து செல்லுமாயின்
நான் தருகிற வாடகைக்கு
கணக்கு சரியாக
இருக்கும்


இதுபோல சில உதாரணங்களைச் சொல்லலாம். கவிஞன் என்றாலே நல்லவனாகத்தான் இருக்கவேண்டும் என்றில்லை என்பதை சுகுமாரன் தன் கவிதைகளில் எழுதியபோது நான் ஆசுவாசமடைந்தேன் என இசை ஒரு உரையில் குறிப்பிடுகிறார். ஆக இன்றுள்ள கவிஞர்கள் அதை எழுதவும் செய்கிறார்கள். 

கவிஞர் ஆனந்த் குமார் புகைப்படக்காரர். அவரது புற வாழ்வு - விடுபட, விடுதலையடைய என எந்தச் சிக்கலும் அற்றது. எனவே அவர் தனது பாதையை கவிதைகளில் திறந்து வைக்கிறார். அவரது பெரும்பாலான கவிதைகளில் 'நகருதல்' மேல் அவருக்கு உள்ள ஈடுபாடு தெரிகிறது. இது புகைப்பட கலையில் அவர் கற்றதாகவே இருக்க வேண்டும். அகிரா குரசோவின் படங்களில் நகரும் பொருட்களே கதை சொல்லும் என்பார்கள். அசையும் தீ, ஓடும் நதி, குதிக்கும் மனிதன், காற்றிலாடும் புல் என அசைதலுக்கு சாத்தியங்கள் பல. ஆனந்த் குமாரின் டிப் டிப் டிப் தொகுப்பில் குளத்தை தூக்கிக் கொண்டு ஊர் நகர்கிறது. குதிரை வீரன் நகர முற்படுகிறான். ஓடும் நதியில் ஒரு துளி துள்ளும் இடம் என நிறைய இடங்களைக் கூறலாம். ஆனால் அவர் கவிதைகளில் வெறுமனே புகைப்படங்கள் எடுத்தல் என்பதை தாண்டி கவிதை செல்லக் கூடிய, அடையக்கூடிய பாதையையும் அவர் அடைகிறார்.



வழி


அறிந்திருந்த ஒருவரின் இறுதிச்சடங்கிற்கு அறியாத ஊருக்கு கிளம்பிச்சென்றேன்.

நான் வந்திறங்கியபோது உடல் கிளம்பிவிட்டதைச் சொன்னது பாதை மறித்துக்கிடந்த மலர்கள்

சுடுகாட்டிற்கு எப்படி வழி கேட்பதெனத் தயங்கி ஒளிரும் மஞ்சள் பூக்களை பின்தொடர்ந்தேன்

நடுவேயொரு
கோவிலின் வாசலுக்கு மட்டும்
இடைவெளி விட்டு
தொடர்ந்தது பூக்களின் வழித்தடம்

குறுகிய தெருக்களுள் சென்ற பூக்களின் வண்ணம் மாறிற்று இப்போது அரளி இதழ்கள் என்னை
அழைத்துச் சென்றன

அமைதி தவழும் ஒரு தோட்டத்துள்
இறங்கிச் சென்றது
பூவிரிப்பு
அதன் ஒழுக்கில் இறங்கி
திரும்பிக் கண்டேன்

எரிந்தணைந்து நீர்தெளித்து குளிரத்துவங்கியிருந்த அவர் வீட்டை

கவிஞனின் வேலை அவனது புறவாழ்வு அவனது கவிதைகளில் ஆற்றும் பங்கை ஆனந்த் குமாரின் கவிதைகள் நமக்கு காட்டுகின்றன.

*** 

ஆனந்த்குமார் தமிழ்.விக்கி பக்கம்

Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

ஆகாய மிட்டாய் - கல்பற்றா நாராயணன் கவிதை

ஆகாய மிட்டாய் ந ண்பனின் மகளின் பெயர் மழை என்று தெரிந்தபோது மனம் தெளிந்தது சாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம் சற்று பிந்தியானால...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive