தேவதேவன் கணங்கள் - தமிழ்மணி

தேவதேவன் தமிழ் விக்கி பக்கம்
தேவதேவனின் உலகில் வாழ்வின் அத்துணை தருணங்களும் இருக்கின்றன. பறவைகள், மலர்கள், மலைகள், கடல், சூரியன் என்று ஆகப்பெரிய அம்சங்கள் அவரின் விரல் நுனியில் குடியிருக்கின்றன. மென்னுணர்வின் பொருட்டு மேலெழும் அழகியல் நிரம்பிய கவிதைகள் மட்டுமே அவரால் படைக்க முடியும் என்கிற பொதுப்புத்தி பலரிடத்தில் உண்டு. அழகியலுக்குள் அமைந்த அரசியல் கவிதையும் அவரால் எழுத முடியும். அப்படி ஒரு கவிதை உண்டு.

மானுடத்தின் மீது நம்பிக்கையிழக்கும் போதெல்லாம் அங்கொரு உயிரற்ற மற்றும் உயிருள்ள ஏதோ ஒன்றின் இருப்பு நம்மை நிலைநிறுத்தி வைக்கும். தாழ்த்தப்பட்டு, ஒடுக்கப்பட்டு  உலகில் எதுவுமே சொந்தமில்லாமல் சமூக கூட்டிலிருந்து தூக்கியெறியப்படும் ஒரு மனிதன் தனக்கு நேர்ந்த இடர்களை எப்படிக் கடக்க முடியும்?

ஒரு பூவின் மலர்ச்சி அவனின் பின்னிருந்து முன் நகர்த்தும்; அந்தப் பூதான் அவனது நிலம்; அவனது வானம்; அவனது உடைமை. இனத்தேசியம், மொழித்தேசியம் கடந்து உலவுகின்ற வாய்ப்பினை ஒரு சிறு மலரின் மலர்ச்சியில் அடையை முடியும் என்கிறது இக்கவிதை.

***

சின்னஞ் சிறிய மலர்

குத்தவைத்து
குனிந்து பார்க்கவைத்தது அவனை
இத்துணை அழகிய பூமியையும்
இத்துணை பெரிய வானத்தையும்
சொந்தமாக்கிக் கொண்ட புன்னகையுடன்
புல்லில் ஒரு சின்னஞ் சிறிய மலர்
பெண்ணின் மூக்குத்தி அளவேயானது.

அவனோ தனது சக மனிதர்களாலேயே
தாழ்த்தப்பட்ட ஒருவன்
எல்லையற்ற துகள்களும்
வலிகளுமானவன்
அவனுக்குத் தன் ஊரும் சொந்தமில்லை
இந்த பூமியும் சொந்தமில்லை
இந்த வானமும் சொந்தமில்லை

எல்லாம் ஒரு கணம் முன்புதான்.

***

நாம் இந்த உலகின் மையத்தை நோக்கி நகரவேண்டும் அல்லது பால்வெளியை நோக்கி. என்னைப் பொறுத்தவரை நாம் அனைவருமே இந்தப் பிரபஞ்சத்தின் சிறுதுகள் தான். " மௌனத்தின் முகத்தில் வீசப்பட்ட பேச்சே வாழ்வு" என்கிறார் ஜோசப்  பிராட்ஸ்கி. இங்கு வாழ்வே கணங்களால் கட்டமைக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புதான்.  ஒவ்வொரு கதவிற்கு பின்னும் நம்மை வியப்பூட்டுகிற, எதிர்பார்க்காத கணங்கள் ஒளிந்திருக்கும். நம் மனம் பல வேறாக கணங்களைப் பொருத்தி இயங்கும். சிலபொழுது மீனாக, சிலபொழுது பறவையாக, சிலபொழுது பொழுதுகளாக, பாறையாக, ஆகாசமாக என சுழன்றடிக்கும். மரிப்பதற்கு முன்பு வரை நாம் கொண்டிருக்கும் அடையாளங்களை நாமே உருவாக்கியிருப்போம். மரித்த பின் வந்து ஒட்டும் அடையாளங்களோ ஜனரஞ்சகம் அவர்களின் தலையிலேயே ஏற்றிக் கொள்வது ஆகும். அதுவே காலகாலத்திற்கு நம் ஆன்மாவைத் தொடரும்.

துள்ளல்


நீரின் மேற்பரப்பில் ஒரு மீன்.
துள்ளி விழுகையில் கண்டது சுடும்பாறை.
மீண்டும் துள்ளியதில் பறவையின் கொடுங்கால்.
மேலும் ஒரு துள்ளலில் மரணம்.
மரித்த கணமே பறவை.



இந்தக் கவிதையில் இறப்பெய்திய மீனின் ஆன்மா பறவைக்குள் சென்றுவிட்டது அல்லது இறகு முளைத்து பறந்துவிட்டது. மரிப்பதற்கு முன்னும் பின்னும் இருந்த கணங்கள் வேறு வேறு. ஆனால் கணங்களே வாழ்வின் நகர்வை நிச்சயிக்கின்றன, தேவதேவனும்தான்.

***

தேவதேவன் தமிழ் விக்கி பக்கம் 

தன்னறம் தேவதேவன் கவிதைகள் முழுத்தொகுப்பு 

வம்சி தேவதேவன் கவிதைகள் முழுத்தொகுப்பு



Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

ஆகாய மிட்டாய் - கல்பற்றா நாராயணன் கவிதை

ஆகாய மிட்டாய் ந ண்பனின் மகளின் பெயர் மழை என்று தெரிந்தபோது மனம் தெளிந்தது சாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம் சற்று பிந்தியானால...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive