நல்விருந்து - பைலார்க்கஸ்

தேவதேவன் தமிழ் விக்கி பக்கம்
அடிக்கடி பயன்படுத்தும் பொருட்கள் குறித்து எனக்கு ஒரு மயக்கம் உண்டு. அவற்றின் இருப்பில், பயன்படும் இசைவில் என பல்வேறு விஷயங்களை முன்னிட்டு அவை எனக்காக பெரும் தொண்டாற்றி வருவது போலொரு நினைப்பு. நான் பெருவிருப்புடன் அணிந்துவந்த ஒரு சட்டைமீதும் அப்படியொரு பற்று உண்டு. தேவதேவனிடமும் அப்படி ஒரு சட்டை இருக்கிறது.

சட்டை


என்னிடம் கையிருப்பதால்
அதுவும் கை வைத்திருந்தது
என் கழுத்துக்காக அது கழுத்து வைத்திருந்தது
என் உடம்புக்காகவே அது உடம்பு வைத்திருந்தது
(நான் அதற்காக ஏதாவது வைத்திருந்தேனா?)
ஆனாலும்
என்னைத் ’தேவதேவன்’ என்றல்ல,
ஒரு மனித உடல்
என்று மட்டுமே அது எடுத்துக்கொண்டிருந்தது
ஆகவே மனித உடல் எதையுமே
அது ஏற்றுக்கொண்டது
(இதன் பெயர்தான் மனிதாபிமானமா?)

எனக்காக அது பாக்கெட் வைத்திருந்தது
என் பணத்தை அது பாதுகாத்தது
என் உடம்பை அது கவனித்துக்கொண்டது

நான் அதற்காக
ஏதாவது செய்யணுமே எனத் துவங்கி
அதை சோப்புப் போட்டு சுத்தமாக்கினேன்
அதுவும் எனக்காக இருந்ததில் சோர்ந்து போனேன்

தனக்கென ஏதும் கேட்காத சட்டையுடன்
எங்ஙனம் வாழ்வேன்?

அதன் கைகளுக்காகவே என் கைகள்
எனக் கூறிச் சந்தோஷப்பட்டேன்
அதன் கழுத்துக்காகவே நான் என் தலையை
வைத்திருக்கத் துணிந்தேன்
அதன் உடம்புக்காகவே என் உடம்பு
அதைச் சுமந்து செல்லவே என் கால்கள்
இல்லாத அதன் உயிருக்காக
என் உயிர்

 (பூமியை உதறியெழுந்த மேகங்கள், 1990)

 
தேவதேவனே கூறும் ஒரு நிகழ்ச்சியின் வழியாக இந்தக் கவிதையின் உள்ளனுபவத்தை வாசகரும் நெருங்கலாம். தேவதேவன் வீட்டில் ஒரு ஜன்னல் கதவு காற்றில் அசைந்து க்ரீச்சிட்டுக்கொண்டிருந்தது. அவர் அந்தக் கதவின் சட்டத்தை இழைத்து, எண்ணெய் இட்டு இரண்டு மணிநேரம் போராடி, க்ரீச்சிடல் இல்லாமல் இயங்க வைத்திருக்கிறார். ஜன்னல் அமைதியாக இயங்கத் தொடங்கிய அத்தருணம் அவரை நெகிழச்செய்கிறது. வீட்டில் அனைவரிடமும் அந்த அற்புதத்தைப் பகிர்ந்துகொள்கிறார். மனிதர்களுக்கான பொருட்கள் என்ற இடத்திலிருந்து எழுந்த ஒருவன் தன்னை பொருட்களுக்கான மனிதனாக உணரும் தருணத்தைத் சொல்லும் கவிதை இது.


***

இது தேவதேவனின் பிற்காலக் கவிதைகளில் ஒன்று. ஒவ்வொரு நாளையும் 'வாழ்வென்னும் கோயிலின் பெரிய திருவிழா'வாகக் காணும் கவிஞனின் வாழ்வை அழகாகச் சித்தரித்த தேவதேவனின் தனித்துவமான கவிதை. கவிதை பற்றியும் கவிஞன் பற்றியும் தேவதேவன் எழுதியிருக்கும் பல கவிதைகளில் இக்கவிதைக்கு முக்கியமான இடத்தை வழங்கவேண்டும். அவரது 'காவியம்' என்ற கவிதையில் வரும்


'திக்குகளதிரத் தாண்டவமாடும் மூர்த்தீ
நான் எதற்காகக் காத்திருக்கிறேன்?'

என்ற தவிப்பு இந்தக் கவிதையில் ஓர் தரிசனமாக வளர்ந்திருக்கிறது.

குன்றாத காதலுடன்


கோடையின் முடிவில்
குளிர்தரு சோலையில் நின்றுகொண்டு
மந்தமாருதத்தை எதிர் நோக்கிக்கொண்டிருந்தான்,

மந்த மாருதத்தின்
இறுதித் தேன்இரவில் நின்றுகொண்டு
கார்மேக விண்ணழகையும்,
மழையையும் எதிர் நோக்கிக்கொண்டிருந்தான்,

மழையின் முடிவில்
பசுமை அலை வீசும் வயல்வெளிகளில் நின்றுகொண்டு
மார்கழியை எதிர்நோக்கிக்கொண்டிருந்தான்,

மார்கழியின் முடிவில்
பிரியமனமில்லாததோர் வைகறையில் நின்றுகொண்டு
வசந்த கோடையினை எதிர்நோக்கிக்கொண்டிருந்தான்,

"செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு."

(அமுதம் மாத்திரமே வெளிப்பட்டது, 2017)

இக்கவிதையில் பருவங்களின் சுழற்சிக்குள் அந்தக் கவி மட்டும் எப்போதும் அப்படியே நின்றுகொண்டிருக்கிறான். அவன் நின்றிருப்பது ஓர் உன்னதமான உயர்ந்த இடத்தில். ஒவ்வொரு பருவத்தின் வனப்பிலும் லயத்திருக்கும் அவன் குன்றாத காதலுடன் வரும் ஒவ்வொரு பருவத்தையும் எதிர்நோக்கியபடியும் இருக்கிறான். இக்கவிதையின் உச்சம் முடிவில் வரும் குறளில்தான் அமைகிறது. தன் கவிமனத்தால் செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருக்கிறான் கவிஞன். ஒவ்வொரு பருவத்திலும் நல்விருந்து வானத்தவர்க்கு.

*** 

தேவதேவன் தமிழ் விக்கி பக்கம் 

தன்னறம் தேவதேவன் கவிதைகள் முழுத்தொகுப்பு 

வம்சி தேவதேவன் கவிதைகள் முழுத்தொகுப்பு

Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

ஆகாய மிட்டாய் - கல்பற்றா நாராயணன் கவிதை

ஆகாய மிட்டாய் ந ண்பனின் மகளின் பெயர் மழை என்று தெரிந்தபோது மனம் தெளிந்தது சாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம் சற்று பிந்தியானால...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive