இசை கவிதைகள்

நோய் வந்ததும் மனிதன் குழந்தையாகி விடுகிறான். நோய்மை ஒரு ஊஞ்சல். காய்ச்சலில் ஒருவன் எங்கு தலை வைத்து படுத்தாலும் அது தாயின் மடிதான் என்கிற இசையின் இந்த வரிகள் அசாதாரணமானவை. 'என்னைக் குணமாக்க நீ படுக்க வைத்தால் அதை நோய் என நான் இகழ மாட்டேன்' என்றார் தேவதேவன். 

இதிலும் இசை காய்ச்சலை சின்ன ஞானம் என்கிறார். காய்ச்சல் பாட்டு என்கிற இந்தக் கவிதை ஒரு தாலாட்டு தான். ஒரு மழை நேரத்தில் இந்தக் கவிதையை படித்தேன். மழைக்கு ஒதுங்குவது என்பது காய்ச்சலுக்கு பயப்படுதலே. இந்தக் கவிதை காய்ச்சலினூடாக  மழையையும் பேசுகிறது.

- மதார்

***

காய்ச்சல் என்பது

கொஞ்சமாக மரணிப்பது

இல்லாது போவதின் ஆசுவாசம்


காய்ச்சல் என்பது

சின்ன ஞானம் 

போதும் போதும் என்று

போர்வையைத் தவிர

யாவற்றையும் மறுப்பது


காய்ச்சல் வந்தவுடன்

அம்மா வந்துவிடுகிறாள்

இப்போது 

நீ எங்கு தலை வைத்தாலும்

அது

தாய்மடிதான்


அனத்துதல் என்பது காய்ச்சல் பாட்டு

அது காய்ச்சலைத் தாலாட்டுவது


தூரத்திலிருக்கும் இதயத்தை அழைக்க

ஆகச்சிறந்த பாட்டொன்று உண்டெனில்

அது காய்ச்சல் பாட்டுதான்.

- இசை

***

உயிர்மை - 200 ஆவது இதழில் வெளிவந்த இந்த கவிதை - "பூதத்தை விழுங்கியவள்". ஒத்திகைகளில் சிறப்பாக நடனம் ஆடும் சிறுமிக்கு நிகழ்ச்சியில் பயம் வந்து விடுகிறது. பார்வையாளர் வரிசையில் ஒரு பூதம் சிறுமியை தொந்தரவு செய்கிறது. பூதத்தை வெல்ல சிறுமி எடுக்கும் முடிவு இதில் அழகான கவிதையாகிறது. 

ஒரு நுட்பமான இடத்தில் கவிதை பறக்கிறது. சிறுமியும் நடனத்திலிருந்து ஜாலத்திற்கு மாறுகிறாள். ஒரு மேஜிக் நிபுணன் வெள்ளைக் காகிதத்திலிருந்து இதழ் இதழாக வண்ண மலர்களை உருவுவது போல இசை இந்தக் கவிதையை சாத்தியப்படுத்துகிறார்.

- மதார்

***

ஒத்திகையில் 

சுழன்று சுழன்று ஆடும் அவளுக்கு

நிகழ்ச்சியில் என்னவோ ஆகிவிடுகிறது


ஊணுறக்கம் துறந்தாள்

பயிற்சிகளைக் கடுமையாக்கினாள்.

தனிமையில் நொந்து நொந்து அழுதாள்.


தனக்குத்தானே எவ்வளவு புகட்டியும்

சரியான தருணத்தில்

அவளால் அதை அருந்தக் கூடவில்லை.


ஒத்திகைகளில் ஜொலிக்கும் அவளை

எப்போதும்

விழுங்கக் காத்திருந்தது

மேடைக்கு கீழே ஒரு பூதம்


இளஞ்செடியில் முதல் பூப் போல அவள் ஒரு 

முடிவெடுத்தாள்...

“இனி ஒத்திகைகளில் மட்டுமே ஆடுவது”


ஒத்திகையே நிகழ்ச்சி

என்றானபின்

அவள்

நடனத்திலிருந்து ஜாலத்திற்கு

பறக்கத் துவங்கினாள்.

- இசை

***

Share:

1 comment:

  1. நன்றி மதார். நீங்கள் எழுதிய குறிப்பு, கவிதையை நேருக்குமாக உணர செய்தது. இந்த தளம் ஒரு அருமையான முயற்சி, வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Powered by Blogger.

ஆகாய மிட்டாய் - கல்பற்றா நாராயணன் கவிதை

ஆகாய மிட்டாய் ந ண்பனின் மகளின் பெயர் மழை என்று தெரிந்தபோது மனம் தெளிந்தது சாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம் சற்று பிந்தியானால...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive