குழந்தைமையும் வீடும் - விக்னேஷ் ஹரிஹரன்

ஆனந்த் குமாரின் கவிதைகளுள் வெளிப்படும் குழந்தைமை என்பது ஒரு விதத்தில் உலகின் ஒழுக்கங்களுக்கு எதிரான ஒரு எதிர்வினையே. வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் தொடர்ந்து தன் விருப்பத்திற்கேற்ப வளைத்துக்கொண்டே இருக்கும் சமூகத்திற்கான எதிர்வினையாகவே அவரது கவிதைகளின் குழந்தைமையை கருதலாம். ஆனால் ஒரு துளியும் கசப்பில்லாத எதிர்வினை அது. ஒழுக்க விதிகளை கேள்விக்குள்ளாக்கி முஷ்டி உயர்த்தியோ, விரக்தி அடைந்தோ எதிர்வினையாற்றாமல் கொஞ்சம் தலையை சாய்த்து உலகத்தை ஒரு புதிய கோணத்தில் பார்ப்பதன் வழியே உலகின் ஒழுக்கங்களில் இருக்கும் கோணல்களைக் கண்டு சிரிக்கும் எதிர்வினையே ஆனந்த் குமாரின் கவிதைகள். அப்படி தலை சாய்த்து பார்க்கும்பொழுது மட்டுமே தெரியும் உலகமே வளைந்து கோணலாக நடக்கும் ஒரு கோமாலித்தனம்தான் என்று. இந்த கோணல் உலகத்தை குழந்தைமையால் மட்டுமே நேராக நிறுத்த முடியும்.

***

இந்த உலகம்
வளைந்திருக்கிறது
இந்த உலகின்
ஒவ்வொரு துளியிலும்
ஒரு வளைவிருக்கிறது
இதில் நேராக
நாம் ஒன்றை வைக்கிறோம்
அது நேராக நிற்க
கொஞ்சம் வளைந்திருக்க வேண்டியிருக்கிறது
நேராக பிறந்துவிட்ட
ஒரு சாப்பாட்டு மேஜை
இப்போது
தள்ளாடுகிறது இந்த
வளைந்த உலகின் மீது
ஒருபக்கம் காலைவைத்து
ஒற்றை அழுத்து
சாப்பிட்டு முடியும் வரை
இந்த உலகை நான்
நிமிர்த்திப் பிடித்தேன் 

***

நவீன தமிழ் கவிதையில் கடலுக்கு நிகராக பயன்படுத்தப்பட்ட மற்றொரு படிமம் வீடு. மனித மனமாக, சிறையாக, உலகமாக நவீன கவிதையின் ஒவ்வொரு காலகட்டத்திலும் வீடு மருவரையரை செய்யப்பட்டுக்கொண்டே இருந்திருக்கிறது. சென்ற நூற்றாண்டு வரை பெரும்பாலும் வீட்டை விட்டு வெளியேறுவதும், முடிந்தால் சிறகடித்துப் பறந்துவிடுவதுமே கவிதையின் நோக்கமாக இருந்திருக்கிறது. அல்லது வெளியுலகத்திற்கு நிகரான ஒரு தனியுலகமாக வீடு செயல்பட்டுக்கொண்டிருந்திருக்கிறது. ஆனால் கவிஞர் ஆனந்த் குமாரின் இக்கவிதையில் வீடு என்னும் படிமம் மேற்கூறப்பட்ட எந்த வகையில் பயன்படுத்தப்பட்டாலும் ஒரு தலைவலி மருந்தின் வாசனையை சுமந்து வரும் சிறு தென்றலின் ஆசுவாசத்தில் அது மலை மீது பறக்கத் தொடங்கிவிடுகிறது. ஆனந்த் குமாரின் கவிதைகளில் இருக்கும் குழந்தைமையும் எடையின்மையும் வாசிக்கும் எவரும் உணரக்கூடியதே. அந்த குழந்தைமை உயர் கவித்துவமாக மாறுவது இத்தகைய தருணங்களில்தான். வீட்டைவிட்டு பறந்துசெல்லும் கவிதைகளின் வெளியில் வீட்டை பறக்க அழைக்கும் குழந்தைமை அளிக்கும் ஆசுவாசம் அலாதியானது. தலைவலி மருந்தின் வாசனையிலும், வெக்கைக்கு நடுவே வீசும் சிறு தென்றலிலும் வீட்டை விட்டு ஒரு நொடியில் இறகு போல் பறக்க முயல்வது நம் அனைவருக்கும் இயல்புதான். ஆனால் ஒரு குழந்தை மட்டுமே அந்த எடையின்மையை தன் மொத்த வீட்டிற்கும் அளித்துவிட முயற்சிக்கும். அக்குழந்தைமையின் முன் பௌதீக உலகத்தின் காலமும், இடமும், சூழலும் பணிவதுதானே இயல்பு.

***

மலைமேல் பறக்கும் வீடு
அம்மாவின் தலைவலி மருந்தை
இந்த மதியத்தில் யாரோ
திறந்துவிட்டார்கள்
வெக்கையின் காதில் கேட்கிறது
யூக்காலிப்டஸ் மந்திரம்
வியர்த்துக்கிடக்கும்
முதுகில் குளிரேற்றுகிறது
வெறுந்தரை
ஒரு சிறிய காற்றுக்கு
மலைமேலேன உயர்ந்துவிட்டது
என் வீடு

***

ஆனந்த்குமார் தமிழ்.விக்கி பக்கம்

Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

ஆகாய மிட்டாய் - கல்பற்றா நாராயணன் கவிதை

ஆகாய மிட்டாய் ந ண்பனின் மகளின் பெயர் மழை என்று தெரிந்தபோது மனம் தெளிந்தது சாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம் சற்று பிந்தியானால...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive