துரத்தப்படுவதன் இன்பம் - நிக்கிதா

குன்வர் நாராயண்
சிறு வயது முதல் எனக்கு பிடித்தமான விளையாட்டு ஓடி பிடித்து விளையாடுவது. சிலரை எத்தனை வேகமாக பின் தொடர்ந்தாலும் தொட்டுவிட முடியாது என தெரிந்தும் துரத்துவேன், பலரை கை எக்கி தொட்டுவிடுவேன், அதில் ஓரிருவருக்கு மட்டும் யூகங்கள் வகுத்து, திட்டமிட்டு தொட முயற்சிப்பேன். தொட்டுவிடுவதன் பலன் அல்லது லாபம் நாம் துரத்தப்படுவோம் என்பதை தவிர வேறேதும் இல்லை என்றதறிந்தும், துரத்தப்படுவதன் இன்பத்திற்காக ஓடுவேன். ஆம்,  இப்பொழுது அந்நினைவுகள் இன்பமாக மனதில் எழுகிறது. துரத்தப்படுவதன் இன்பம், துரத்துவதையும் இன்பமாகிவிடுகிறது. நான் உன்னை பின் தொடர்வேன், நீயும் என்னை பின் தொடர் அல்லது என்னை நோக்கி வா என்ற ஒப்பந்தம் விளையாடுபவர்கள் தாண்டி, பிடித்தமான விஷயங்கள், அடையவேண்டியவை, அன்பு, லட்சியம் என வளர்கிறது. இது அடுத்ததாகத் தன்னை தானே பின் தொடர வைக்கிறது. பிறகு ஒப்பந்தங்கள் நீங்கி வெறும் பின் தொடர்தலாக ஆகிறது. 

இந்தி கவிஞர் குன்வர் நாராயணின் கவிதை ஒன்றின் தலைப்பு "காலி பீச்சா" வெறுமென பின்தொடர்வது. பின் தொடர்வதற்காக ஓடும் பாவனை, துரத்தப்படுகிறோமா என்ற நோட்டம், துரத்துவதற்கான எத்தனிப்பு அனைத்தும் தீரா ஓடி விளையாட்டாக, ஒத்திசைவாக, பெரும் ஆடலாக, லீலையாக பேருரு கொண்டு ப்ரபஞ்சத்தை இயக்கிக்கொண்டிருப்பது இவரின் இக்கவிதையில் திதிலியின் ஆடலில் பிரதிபலிக்கிறது. 

பட்டாம்பூச்சிகளின் பூமியில்

முன்னொருமுறை எனக்கொரு கற்பனை 

பட்டாம்பூச்சிகளின் பூமியை சென்றடைந்த என்னை 

பட்டாம்பூச்சியொன்று துரத்துவதாக. 

நான் நின்றேன் 

ஆகவே அதுவும் நின்றுவிட்டது 

பின்னல் திரும்பி பார்த்தேன் 

ஆகவே அதுவும் தனக்குப் பின்னால் திரும்பிப் பார்த்தது 

அதைத் துரத்திக்கொண்டு நான் போகத் துடங்கியதும் 

அதுவும் தன்னைத் தானே துரத்தத் துடங்கிற்று 

உண்மையில் என்னைப்போன்றே 

அதுவும் ஒரு கற்பனையில் ஆழ்ந்திருந்தது 

பட்டாம்பூச்சிகளின் உலகத்தில் இருப்பதாகவும் 

யாரோ ஒருவர் அதைத் துரத்துவதாகவும்.

கவிதைகளில் நான் எப்போதும் வியக்கும் விஷயம் ஒன்றுண்டு. அதற்குள் ஒளிந்திருக்கும் தரிசனம் வாசகருக்கு திறந்துகொள்ளும் தருணம். தர்க்கப்பூர்வமாக எத்தனை முட்டினாலும் பிடி கிடைக்காத கவிதை, மனதை லேசாக்கி கவிதையின் வடிவில், சொல்லில் தியானித்தால் அந்த தரிசனம் வாசகரின் அக கண்ணில் நிகழ்வதை உணரமுடியும். அப்படிப்பட்ட தருணங்கள் அற்புதமானவை, கவிதை நேரடியாக ஏதோ நம் ஆழத்தில் இருக்கும் ஜோதியை பற்றவைத்தது போல் தோன்றும். எப்படி அது நிகழ்ந்தது என்று யோசித்தால், அந்த சொற்களின் மூலமாகவா என்று பார்த்தால், வெறும் சொற்களிலிருந்து இல்லை, அதை தாண்டி கவிதைகளில் வாழும் அருளால் என்றே தோன்றும். குன்வர் நாராயணனின் இந்த கவிதை அத்தகைய அனுபவத்தை எனக்களித்தது.

 சொல்

இது அதே சொல்தான்

 

இந்த ஜென்மத்துக்கு முன்பு

எங்கே நான் ஜென்மமெடுத்திருக்க கூடுமோ

இது அதே இடம்தான்

 

இந்த காதலுக்கு முன்பு

எந்தப் பருவத்தில் நான் காதலித்திருக்கக்கூடுமோ

இது அதே பருவம்தான்.

 

இந்த காலத்துக்கு முன்பு

எந்த சமயத்தை நான் கழித்திருக்கக்கூடுமோ

இது அதே காலம்தான்

 

மீண்டும் சந்திப்போம் என

எங்கே நான் வாக்களித்திருந்தேனோ

அங்கேயே ஏதேனுமொரு இடத்தில

தங்கிப்போய்விட்டது

ஒரு கவிதை.

 

இந்த வாழ்விற்கு முன்பு

முடியாத வாழ்வை எப்போதோ வாழ்ந்திருக்கக்கூடுமோ

இது அதே சொல்தான்.

மீண்டும் சந்திப்போம் என

எங்கே நான் வாக்களித்திருந்தேனோ

அங்கேயே ஏதேனுமொரு இடத்தில

தங்கிப்போய்விட்டது

ஒரு கவிதை.

கனவில் ஒரு நொடியில் இந்த கவிதை முழுமையாக விரிய துவங்கியது. கூகிள் மேப்ஸில் சாட்டிலைட், ட்ராபிக், டெர்ரன், ஸ்ட்ரீட் என பல விதங்களில் நாம் வழியை காண முடியும். அப்படி 3D ஆக 6D ஆக இடம், காலம், நேரம், மனிதர்கள், தருணங்கள் எல்லாம் விரிந்து கொண்டே சென்றது. ஹாரிஸாண்டிலாக (கிடைமட்டமாக) பல ஜென்மங்களுக்கு நீண்டு,  இவை அனைத்தையும் ஒன்றாக கோர்த்திருந்த நூல் அந்த சொல்லென உணர்ந்தேன். இக்கவிதையில் மற்றும் ஒரு தரிசனம் கடைசி வரிகளில் நிகழ்கிறது. அந்த சொல்லை அந்த இடத்தில் நிலைநாட்டும் சக்தி கவிதை வடிவில் சொற்களை வெளி அனுப்பி அனைத்தையும் இணைந்திருக்கிறது. பறந்து விரிந்த வெளியிலும், ஆழத்தின் ஆழத்திலும் சொல் நிறைந்திருக்கிறது, சொல் இணைக்கிறது, சொல் சாட்சியாய் நிற்கிறது.

***

குன்வர் நாராயணன் (1927-2017) உத்திர பிரதேசம், பைசாபாத்தில் பிறந்தவர். லக்னோ பல்கலைக்கழகத்தில் பயின்று முதுகலை ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றார்.

முதல் கவிதை தொகுப்பு 'சக்ரவ்யூஹம்' 1956ம் ஆண்டு வெளியானது. யுக சேத்னா, நயா பிரதீக், சயநாத் ஆகிய இலக்கிய இதழ்களின் இணை ஆசிரியர். 1995ல் 'கோயி தூஸ்ரா நஹின்' தொகுப்புக்காக சாகித்திய அகாதமி விருதும் 2005ம் ஆண்டு ஞானபீட விருதும் 2009ம் ஆண்டில் பத்மபூஷன் விருதும் பெற்றவர். எட்டு கவிதைத் தொகுதிகள், இரண்டு காவியங்கள், சிறுகதைகள், விமர்சனங்கள் என எல்லாத் துறையிலும் பங்களித்திருக்கிறார். குறிப்பிடத்தக்கக் கவிதை தொகுதிகள் சக்ரவ்யூஹம், தீஷ்ரா சப்தக், அப்னே சாம்னே, கோயி தூஸ்ரா நஹின்.

***

Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

ஆகாய மிட்டாய் - கல்பற்றா நாராயணன் கவிதை

ஆகாய மிட்டாய் ந ண்பனின் மகளின் பெயர் மழை என்று தெரிந்தபோது மனம் தெளிந்தது சாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம் சற்று பிந்தியானால...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive