இளங்கோ கிருஷ்ணன் கவிதைகள்

வியனுலகு வதியும் பெருமலர் தொகுப்பிலுள்ள இளங்கோ கிருஷ்ணனின் கவிதை - பயணம். 

இதில் மரணத்தை நோக்கிச் செல்லும் உடலின் பயணத்திற்கு ஒப்பாக கூறப்பட்டிருப்பது அடிவாரம் நோக்கிச் செல்லும் மலையில் உருட்டி விடப்பட்ட கல். உடலின் பயணம் டிக் டிக்கென நகரும் கடிகாரம் - அதன் வேகம் நமக்கு தெரியும். மலையில் விழும் கல் - அதன் வேகம் நாம் அறிவோம். 

இரண்டும் ஒன்றென ஆகும் அற்புதமே இந்தக் கவிதை. கவியும், புத்தனும் ஒரு தொன்மச் சிறப்பாக இந்தக் கவிதையில் மிளிர்கிறார்கள். டிக் டிக்கென நகன்று குழி நோக்கி செல்லும் உடல் எவ்வளவு பெரிய மலையில் இருந்து உருண்டு கொண்டிருக்கிறதோ?!

- மதார்

***

பயணம்

மரணத்துக்குக் கண்ணீர் உண்டு

கண்ணில்லை என்கிறான் கவி

மலையில் உருட்டிவிட்ட கல்

அடிவாரம் போய்ச் சேரும் தீவிரம்

கவனித்திருக்கிறாயா நண்ப

இந்த உடல் அவ்வளவு தீவிரமானது

மனம் எங்கு செல்கிறதென

பின் தொடர்கிறான் போதிச் சத்துவன்

காலம் எங்கு செல்கிறதென 

கவனித்துக் கொண்டிருக்கிறான் புத்தன் 

நாம் சொல்லலாம்

நான் இங்கு செல்கிறேன்

அங்கு செல்கிறேனென

நீ எங்கு சென்றாலும்

டிக் டிக் டிக்கென உடல்

குழி நோக்கி

சென்றுகொண்டே இருப்பதைப் பார்

- இளங்கோ கிருஷ்ணன்

***

'வெளிச்சத்தின் எடை 

வெப்பமாய் இருக்கிறது' 

என்கிற முதல் வரியிலேயே இந்தக் கவிதை திறக்க ஆரம்பித்து விடுகிறது. 'ஆழ்கடல் மீன் - மொத்தக் கடலையும் சுமந்தலைவது' கவிதையின் உச்சம். 

அன்றாடம் என் தெருவில் நடக்கும் பைத்தியக்காரனின் கோணியில் சுமையே இருக்காது. சுமை அவன் பாவனையில் இருக்கும். எனக்கு இந்தக் கவிதையில் வரும் பூவும், மீனும் அவனைத்தான் ஞாபகப்படுத்துகிறது. உண்மையில் அவன் கோணி சுமப்பதென்ன? 

பிரபஞ்சத்தின் பிரதிநிதியான காற்றாக இருக்குமோ?

இந்தக் கவிதையில் பாவனை பாவனையா? அல்லது அதைத் தாண்டியதா?

- மதார்

***

ஆழ்கடல் மீன்கள்

வெளிச்சத்தின் எடை

வெப்பமாய் இருக்கிறது 

விடிகாலையில்

மேற்புறக் கடலில் நீந்தும் மீன்கள்

வெளிச்சத்தை தொட்டுத் திறக்கின்றன

ஆழ்கடலின் குருட்டு மீன்கள் வெளிச்சத்தை உணர்வது 

இருட்டின் பாரமின்மையாலா பாரத்தாலா 

ஆழ்கடலின் ஒரு மீன்

மொத்தக் கடலையும் சுமந்து கொண்டிருப்பது

ஒரு பாவனையா

ஒரு பூ

மொத்த பிரபஞ்சத்தையும் சுமப்பது போல

- இளங்கோ கிருஷ்ணன்

***

வியனுலகு வதியும் பெருமலர் தொகுப்பு வாங்க


Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

ஆகாய மிட்டாய் - கல்பற்றா நாராயணன் கவிதை

ஆகாய மிட்டாய் ந ண்பனின் மகளின் பெயர் மழை என்று தெரிந்தபோது மனம் தெளிந்தது சாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம் சற்று பிந்தியானால...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive