பெரு விஷ்ணுகுமார் கவிதைகள் - விக்னேஷ் ஹரிஹரன்

 திரையை மொய்க்கும் ஈக்கள்

நம் காலத்தின் தனித்துவமான அடையாளமாகவே முன்வைக்கப்படக்கூடியவை கண்காணிப்பு கேமராக்கள். அனைத்தையும் பார்க்கும் விழிகள் ஆனால் எதிலும் நேராக பங்குகொள்ளாதவை. இதுவே காலத்தின் இயல்பாகவும் கருதப்படலாம். நம் கைபேசிகளின், கணினிகளின் மின் திரைகளின் வழியே நாம் காணும் காட்சிகளின் அளவு மனித வரலாற்றில் சாத்தியப்படாதது. ஆனால் அக்காட்சிகளில் நேரடியாக பங்குபெறுவதற்கான சாத்தியம் நம்மிடம் இல்லை. அனைத்தும் காணும் தொலைவில் இருப்பதே நம் காலத்தின் பெரும் துயரம் என்றே கூறலாம். கண்காணிப்பு கேமராவின் வழியே காட்சிகளை காணும் காவலர் ஒரு விதத்தில் கோடி கண்களால் உலகை கண்டும் அதில் பங்குபெறாத இறைவனே. அவரை துவந்தத்திற்கு அழைக்கிறோம். அவரோ தொலைவில் வரும் நம் மரணத்தை கண்டும் நம்மிடம் பேசமுடியாது தன் கண்களின் பளிங்கு மாளிகையில் சிறைபட்டிருக்கிறார். ரத்தம் தெறித்த மின்திரையில் மொய்க்க முயலும் ஈயும், பளிங்கு மாளிகையில் இருந்து கத்தும் நம் காவலரும், நாமும் இன்று ஒன்றுதான் என்று உணர்த்தும் வரிகள் அற்புதமானவை. உலகின் அனைத்தையும் நம் அறிதல்களுக்கு உட்பட்ட காட்சிகளின் வழியே முழுமையாக அறிய முற்படும் நாம், சந்தேகமின்றி மின்திரையை மொய்க்கும் ஈக்களே.

***

பளிங்கு மண்டபம்

சாலையோரத்தில் நின்று நின்று

கருவளையம் கூடிப்போனவொரு கண்காணிப்புக் 

கேமரா

அதன்முன்னே தள்ளாடியபடி வந்து நிற்பவன்

CCTV ன் உள்ளிருந்து கண்காணிக்கும் காவலரை 

முறைத்த

துவந்தம் புரிய அழைக்கின்றான

ஆபாச வசனம் வீசி கருவியை உடைக்க 

முயல்கின்றான்

பிறகு சாலையிலிறங்கி நடக்கத் துவங்க

அதற்குள் தூரத்தில் வரும் வாகனத்தைப் 

பார்த்துவிட்ட காவலர்

அறிந்துகொண்ட அவனின் எதிர்காலத்தை 

அவனிடம் எப்படி தெரிவிப்பதெனத் தெரியாமல்

தான் இருக்குமிடம் ஒரு பளிங்கு மண்டபம் 

என்பதையே மறந்துபோய்

பெருங்குரலெடுத்தார் – ஒரு பயனுமில்லை

கண்ணுக்கெட்டும் தொலைவில்தான் எல்லாமும் 

நடக்கிறது

 

குருதி வெள்ளத்தில் அவன் சாலையில் கிடக்கும் 

கோரமான காட்சி

ஒளிபரப்பும் மின்திரையை

ஈக்கள் மொய்க்கின்றன

***

நவீன தமிழ் கவிதையின் வளர்ச்சியில் காலாதீதமான மெய்யியல் தேடல்களுக்கு நிகராகவே, கால மாற்றங்களும் அம்மாற்றங்களின் காரணமாக ஏற்படும் அறச்சிக்கல்களும் முக்கியப் பங்காற்றியிருக்கின்றன. காலம்தோறும் ஏற்படும் சமூக, அரசியல், வாழ்வியல் மாற்றங்களே கவிதைக்கான புதிய களங்களையும், படிமங்களையும், மொழியையும் உருவாக்கியிருக்கின்றன. அவ்வாறாக நம் காலத்தின் மாற்றங்களும் அதனால் ஏற்படும் அறச்சிக்கல்களுமே பெரு விஷ்ணுகுமாரின் கவிதைகளாகின்றன. அவரது இன்று இறப்பது அவ்வளவு விசேசம் கவிதை நம் காலத்தின் அலட்சியத்தையும் பொருளின்மையையும் முன்வைக்கிறது. இங்கு வெளிப்படும் பொருளின்மை என்பது காலத்தின் முன்பு பொருளற்று போகும் இருத்தலியலின் பொருளின்மை அல்ல. இங்கு காலமே பொருளற்றுப்போகிறது. நேற்றும் இன்றும் எந்த வித்தியாசமும் இன்றி பிரித்தறிய முடியாதபடி கலந்துவிட்ட வாழ்வில் வாழ்வும் மரணமும் பொருளற்று போகின்றன. கவிதையில் நேற்றும் இன்றும் ஒன்றெனக் கலக்கையிலேயே நீயும் நானும் ஒன்றெனக் கலந்துவிடுகின்றன. எந்த மரணமும் எந்த சலனத்தையும் ஏற்படுத்தாத வாழ்வில் மரணிப்பது நீயாக இருந்தாலும் நானாக இருந்தாலும் வேறொருவனாக இருந்தாலும் ஒன்றுதானே. எந்த சகமனிதனின் மரணமும் அலட்சியப்படுத்தப்படும் சூழலில் நாம் அடையும் வெறுமையில் எந்த காலத்தில் நிகழும் எந்த மரணமும் பொருளிழந்துவிடுகிறது. நேற்றும் இன்றும் நீயும் நானும் பொருளிழந்துவிட்ட சூழலில் எந்த நேரமும் மரணத்திற்கு விசேசமான நேரம்தான்.


***

இன்று இறப்பது அவ்வளவு விசேசம்


1.


வீடுதிரும்ப நேரமாகிவிட்டதால்

வீட்டிற்குள் நுழையும் போதே

எல்லோரின் முகமும் பதற்றமாக இருந்தது

 

என்னைக் கண்டதும்

நெருங்கிவந்து ஆரத்தழுவிக்கொண்ட அப்பா

‘போனவருடம் நடந்த

சாலைவிபத்தில்

நீ அடிபட்டுவிட்டதாகச் சொன்னார்கள்’,

அப்பாடா

பத்திரமாக வந்துவிட்டாயே

சரி நீ இங்கேயே இரு

எதற்கும் நான் வெளியேசென்று

உன்னைத் தேடிவிட்டு வருகிறேன்’

 

என்று கூறிவிட்டு பதற்றத்துடனேயே

கிளம்பிப்போனார்

 

ஒருவேளை அவர் கூறுவது

உண்மையாகவும் இருக்கலாமென்று

நானும் தேடுவதற்கு உடன் சென்றேன்


2.

வெகுநாளைக்குப்பின்பு

இன்று சாலையில் ஒரு நல்ல விபத்து

சிறிய லாரிதான்

லேசாக நசுக்கியதற்கே

அனைத்து பற்களும் நொறுங்கிப்போய்

அடையாளம் தெரியாதளவு அவர்முகம்

சிதைந்து போயிருந்தது

 

‘எனக்கோ இதெல்லாம் பழகிவிட்டது’

 

போனவருடம் இதேபோல் இறந்துபோன

என் நண்பனை ஒப்பிடும்போது,

இதெதெல்லாம் ஒன்றுமேயில்லை

 

நினைவு நாளென்பது யாரையும் பாதிக்காமல்

இறந்துபோதலோ

 

என் நண்பா

பேசாமல் ‘நீயும்

இன்றே இறந்துபோயிருக்கலாம்’

***

முதுகலை இயற்பியல் பட்டதாரியான பெரு விஷ்ணுகுமார் பழனியைச் சார்ந்தவர்.

முதல் கவிதை தொகுப்பான “ழ என்ற பாதையில் நடப்பவன்” 2018 லும், இரண்டாவது கவிதை தொகுப்பான "அசகவ தாளம்"  2021 லும் வெளிவந்தன. தொடர்ந்து அச்சு இதழ்களிலும், இணைய இதழ்களிலும் கவிதை, கதை, கட்டுரை மற்றும் மொழிபெயர்ப்பிலும் ஈடுபட்டு வருகிறார்.

***

கவிதை தேர்வு மற்றும் குறிப்பு: விக்னேஷ் ஹரிஹரன் 

அசகவ தாளம் வாங்க

பெரு விஷ்ணுகுமார் தமிழ்.விக்கி பக்கம்

Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

ஆகாய மிட்டாய் - கல்பற்றா நாராயணன் கவிதை

ஆகாய மிட்டாய் ந ண்பனின் மகளின் பெயர் மழை என்று தெரிந்தபோது மனம் தெளிந்தது சாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம் சற்று பிந்தியானால...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive