கவிதையை வேண்டும் கவிதை - மதார்

கவிதை எழுதாதபோது அல்லது கவிதை தோன்றாதபோது கவிஞர்கள் என்ன செய்துகொண்டிருப்பார்கள்?

  • கவிதை எழுதிக் கொண்டிருப்பார்கள்
  • புலம்பிக் கொண்டிருப்பார்கள்

"இறைவனின் கூலி எப்போது கிடைக்கும் என்று சலித்துக் கொள்ளாதீர்கள். பொறுமையுடனும், நம்பிக்கையுடனும் காத்திருங்கள். நீங்கள் சலிப்பதற்கு முந்தைய கணம் வரை அது உங்களை நெருங்கிக் கொண்டுதான் இருந்தது. உங்களது சலிப்பினாலும், பொறுமையின்மையாலும் அது உங்களை வந்தடையாது நின்றுவிடலாம். ஆகவே, பொறுமையுடனும், நம்பிக்கையுடனும் காத்திருங்கள்"
என்று குரானில் சொல்லப்பட்டுள்ள விஷயம் கவிதைக்கும் பொருந்தும்.
தூண்டிலுடனும், நம்பிக்கையுடனும், பொறுமையுடனும் மீனுக்குக் காத்திருக்கும் பொழுதுகள் அவை. ஆக மீனும், கவிதையும் கிடைப்பது உறுதி பொறுமையையும், நம்பிக்கையையும் இழக்காத வரை.
    பெரும்பாலும் இந்த 'கவிதையை வேண்டும் கவிதைகளை' தமிழில் பெரும்பாலான கவிஞர்கள் எழுதியிருக்கிறார்கள். விக்ரமாதித்தனின் கவிதையில் உலகியலையும், கவி வாழ்வையும் இணைத்துச் செல்லும் சரடாக துன்பம் எழுதப்பட்டிருக்கும். அதே அவரது கவிதைகளிலேயே அந்தச் சரடு 'ஒளி'யாகவும் இருக்கும். தேவதேவனின் கவிதைகளில் வரும் கவிதை தேவதேவன் தான். தேவதச்சனுக்கு ஹோல்ட்ரில் பல்பை மாட்டும் எதார்த்த அதிசயம். பாரதியில் இதனை வெடிப்பாகக் காணலாம்.பிரமிள், ஞானக்கூத்தன், சுகுமாரன் என்று யாருமே இதற்கு விதிவிலக்கல்ல. கவிதையை வேண்டும் கவிதை பிச்சைப்பாத்திரத்தை பிச்சை கேட்டு அந்த பிச்சை பாத்திரத்தில் பிச்சை பாத்திரத்தை பிச்சை கேட்பது போல் தான். இன்றைய இளம் கவிஞர்களிலும் பெரும்பாலும் எல்லோருமே கவிதையை வேண்டும் கவிதைகளை எழுதியிருப்பவர்களாகவே உள்ளனர். கவிஞர் றாம் சந்தோஷின் முதல் தொகுப்பான சொல்வெளித் தவளைகளின் துவக்கமே கவிதை கவிதை என்று சில முறை எழுதவும் என்று கவிதையை வேண்டும் ஒரு மந்திரமாகத்தான் துவங்குகிறது. ஒரு கவிஞன் கவிதையை, வாழ்வை எப்படி புரிந்து கொள்கிறான், எப்படி பார்க்கிறான் என்று அறிந்து கொள்ள அவனது தொகுப்பில் இருக்கும் கவிதையை வேண்டும் கவிதையே போதுமானது என்று நினைக்கிறேன். அதுவே அவனை முழுமையாக காட்டிவிடும். தாகூரின் நிறைய கவிதைகளில் கவிதை என்று வருகிற இடத்திலெல்லாம் தெய்வம் என்று போட்டு வாசித்தாலும் அது அப்படியே கவிதையோடு பொருந்தி போவதை பார்க்கலாம். அதுவே அவனை அவனது கவிதையை முழுமையாகத் திறந்து காட்டிவிட போதுமானது.

கவிதைகளின்
உள்ளிருக்கும்
துடிப்புகளைக் கேள்

அவை விரும்பும் இடத்திற்கு
உன்னை அழைத்துச்
செல்லட்டும்

உனக்கென விடுக்கும்
சமிக்ஞைகளை
தொடர்ந்து கொண்டே இரு

அதன் அருகாமையை
நழுவவிடாதே
ஒரு போதும்.

- ரூமி


சமீபத்தில் வெளிவந்த கவிஞர் ஸ்ரீநேசனின் 'மூன்று பாட்டிகள்' தொகுப்பில் ஒரு கவிதையை வேண்டும் கவிதை. அது மிகச்சரியாக ஸ்ரீநேசனின் கவிதை உலகை அடையாளம் காட்டிவிடுகிறது.


கல்

- ஸ்ரீநேசன்

கடவுள் அவ்வப்போது என்மேல் கல்லெறிகிறார்
அதுவும் அருளே என ஏற்றுக்கொள்கிறேன்
எறிகிற கல் எனை அடைகையில் சொல்லாகி விடுகிறது
அற்புதம்தான்
எனக்காக உருமாறிய கடவுளின் சொற்கள்
சும்மா வைத்துக் கொள்ள முடியாது
உடனே எழுதத் தூண்டும் பிரத்யேகச் சொற்கள்
படைக்கத் தொடங்கி விட்டேன்
கவிதையிலடங்கிய சொற்கள்
அவர் சொற்களுக்கடங்காப் பொருள்கள்
கொஞ்சம் மமதைதான்
கடவுள் கவனித்திருக்க வேண்டும்
அதனாலோ என்னவோ கல்லெறிவதை நிறுத்தி விட்டார்
அவர் விட்டதுபோல் கவிதை என்னை விடவில்லை
அவரிடமே விண்ணப்பம் செய்தேன்
அது ஆலயம்வரை இட்டுச் சென்றது
ஆங்கே
மணம் வீசும் சொற்களை மாலையாய்ச் சூட்டி
வெளிச்சமான சொல்லால் ஒரு சுடரை ஏற்றி
வணங்கி நின்றேன்
சுடரின் வெளிச்சத்தில் கடவுள் சொல்லென நின்றார்
பொருளும் பொருளின்மையும் முயங்கிய ஒருநிலை
என்மீது எறிந்த கல் உருவாக நிற்கும் அருஞ்சொல்.
கடவுள் படைப்பும் கவிதைப் படைப்பும் பொருள்பட ஒன்றென
அக்கண அமைதியில் உணர்ந்தேன்
அப்போதும் உள்ளேயிருந்து ஒரு குரல் இன்னும்
கல்
சொல்
எனக் கூறிக் கொண்டிருந்தது.

***

Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

ஆகாய மிட்டாய் - கல்பற்றா நாராயணன் கவிதை

ஆகாய மிட்டாய் ந ண்பனின் மகளின் பெயர் மழை என்று தெரிந்தபோது மனம் தெளிந்தது சாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம் சற்று பிந்தியானால...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive