தாயுமானவர் - க.நா.சு

நமக்கெல்லாம் வேதாந்தம் நன்றாகவே வரும் என்பது உண்மைதான். ஆனால் வேதாந்தம் என்றால் ஓடி ஒளிந்து கொள்கிறவர்கள் நினைப்பதுபோல் வேதாந்தத்தைத் தவிர வேறு ஒன்றும் வராது என்பதில்லை என்பதும் நாடறிந்த உண்மைதான். வாழ்க்கை வழிகளிலே, தத்துவ மத சமய நெறிகளிலே முன்னேறியது போலவும், தமிழர்கள் பல ஞான, விஞ்ஞானத் துறைகளிலும் முன்னேறினார்கள் என்பதும், அலுவலகங்களில் அடிமைப்பட்டு வேலை பார்ப்பது முதற்கொண்டு சுதந்திரமாக இயங்கிச் செயலாற்றுவது வரையிலும் எல்லாத் துறைகளிலும் ஈடுபட்டுப் பெயர் பெற்றவர்கள்தான் தமிழர்கள் என்பதும் இந்த இருநாற்றைம்பது வருஷத்திய சமீபகால சரித்திரத்தை நோக்கும்போது நமக்குத் தெரியவரும். வேதாந்தம் செயல்படுவதற்கும் உதவ முடியும் என்பதை வேதாந்தத்தைக் குறை கூறுபவர்கள் கவனிப்பதில்லை.

தாயுமானவர் வேதாந்தி. துறவியும் ஆனவர். ஆனால் தானே ஈடுபட்ட துறையில் வெற்றி கண்டவர் என்றுதான் சரித்திரம் சொல்கிறது. மதுரையில் ராணியாக ஆண்ட மீனாக்ஷி தன்னையே அர்ப்பணித்துக்கொள்ள முன்வந்தபோது, தாயுமானவரின் வேதாந்தம் வெற்றி பெற்றது. வேதாந்தி யல்லாத வேறு ஒருவனாக இருந்தால் ராணியின் காதலுக்கு வசப்பட்டு, சில மாதங்களோ, சில வருஷங்களோ, அல்லது சில நாட்களோ சுகமாக வாழ்ந்துவிட்டுச் செத்து மடிந்திருப்பான். அழகான ராணி எதிர்ப்பட்டு “என்னை ஏற்றுக்கொள்” என்று சொல்லும்போது, “வேண்டாம்” என்று சொல்லிவிட்டு, ஊரைவிட்டே ஓடிப் போகத் துணிகிற துணிச்சல் ஒரு வேதாந்திக்குத்தான் வரும். தாயுமானவர் என்கிற வேதாந்திக்கு அது நன்கு கைவந்தது என்றும், அவர் கவியாக உருவாக இச் சம்பவம் உதவியது என்பதும் வெளிப்படை. மீனாக்ஷியின் சரித்திரத்தை அறிந்தவர்களுக்குத் தாயுமானவர் செய்ததுதான் சரியான காரியம். இல்லாவிட்டால் தாயுமானவர் என்கிற பெயரே தமிழ்நாட்டில் இருந்திராது என்பதும் நன்றாகவே புரியும்.

இப்படித் துணிந்து செயலாற்ற ஒரு வேதாந்திக்கு உதவிய ஒரு தத்துவத்தை நாம் சற்றேறக்குறைய நூறு வருஷங்களாகவே ஏதோ குறை கூறிக்கொண்டு, சிறுமைப்படுத்தி நம்முடைய விஞ்ஞான லோகாயத வளர்ச்சியைப் பற்றிப் பெருமை பாராட்டிக்கொண்டு வருகிறோம். விஞ்ஞானமும், லோகாயதமும் எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை வேதாந்தமும் என்கிற தத்துவத்தை நாம் உணருவதில்லை. உண்மை வேதாந்தமே அதைத்தான் வற்புறுத்துகிறது. போலி வேதாந்திகளுக்கெல்லாம் பதில் சொல்லுகிற மாதிரித்தான் தாயுமானவரின் கவிதைகள் அமைந்திருக்கின்றன. இந்த இருநூற்றைம்பது வருஷங்களில் பழகு தமிழில் உள்ள எந்தக் கவியையும் விடத் தாயுமானவரின் கவிதைகள் தமிழர்களின் மனத்தை அதிகமாகக் கவர்ந்திருப்பதாக நாம் நினைத்தால் அது தவறேயாகாது. ஒரு வார்த்தைக்குள்ளும் அகப்படாத ஒரு தத்துவத்தைப் பல வார்த்தைகளில் திணிக்க முயன்ற தாயுமானவரைப் புதுத் தமிழ் இலக்கியத்துக்கு அடிகோலித் தந்த தமிழ்ப் பெரியார்களில் ஒருவராக நாம் கணித்துப் பார்ப்பதில் தவறில்லை என்றே சொல்ல வேண்டும்.

தாயுமான சுவாமிகளின் வாழ்க்கைக்கும் பத்தொன்பதாம் நூற்றண்டின் இறுதியிலே வாழ்ந்து தன் ஒரு நாவலால் தமிழுக்கு வளம் தந்த ராஜமையரின் வாழ்க்கைக்கும் பலவிதங்களிலும் ஒற்றுமையுண்டு. தாயுமானவரும் அல்பாயுசில் மாண்டு போனவர்தான். 1706ல் பிறந்தவர். 85 வயதுவரை உயிருடன் இருந்தார் என்று சொல்லப்படுகிறது. ஒரு சிலர் அவர் 88வது வயதுவரை இருந்ததாகக் கொள்கிறார்கள். அவர் 17ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். 1659ல் இறந்தார் என்றும் ஒரு வரலாறு உண்டு. கல்வி கேள்விகளில் அவரும் ராஜமையரைப் போலவே நவீன வாழ்வுக்கேற்ற வசதிகளெல்லாம் படைத்தவர்தான். விஜயரகுநாத சொக்கலிங்க நாயக்கரின் கணக்குப்பிள்ளையாகத் திருச்சிராப்பள்ளியில் வாழ்ந்தவர் அவர் தகப்பனார். ராணி மீனாக்ஷியைப் பற்றிய கதையைச் சாதாரணமாக உண்மை யெனத்தான் கொள்வது வழக்கம். மீனாக்ஷியைப் புறக்கணித்துவிட்டு ராமேசுவரம் போன தாயுமானவர் பின்னர் திருமணம் செய்துகொண்டு. சிறிது காலம் இல்லறம் நடத்திவிட்டுப் பிறகு துணிந்து துறவறம் பூண்டதாகத் தெரிகிறது. தமது வேதாந்த முடிவுகளைத் தாயுமானவர் கவிதையாக எழுதினார். ராஜமையர் ஆங்கிலத்தில் வசனமாக எழுதினார். வேதாந்தமாகப் பார்க்காமல் இலக்கியமாகப் பார்க்கும்போது என்னைப் பற்றிய வரையில் தாயுமானவருக்கு ஒரு முக்கியமுண்டு என்பதும், அதேபோல் ராஜமையருக்கும் ஒரு முக்கியமுண்டு என்பதும் தெரிகிறது.

வியாக்கியான கர்த்தாக்களையும் சங்கேதப் பதங்களையும் தகர்த்தெறிந்து கவிதை செய்யத் துணிந்தவர் என்று தாயுமானவரைக் கொள்வதில் தவறில்லை. அவரையும் வியாக்கியானம் செய்து, அவருடைய சாதாரணப் பதங்களையும் சங்கேதப் பதங்களாக மாற்றிவிட்டார்கள் என்பதும் தமிழ்ப் பண்டிதர்களின் பெருமை. ஆனால் எந்தவிதமான உதவியுமில்லாமல் தாயுமானவர் பாடல்களைப் பாடல்களாகப் படித்து நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது என்பதை எல்லோரும் ஒப்புக்கொள்வார்கள். இப்படிப் புரியும்படியான கவியாக இருந்ததனால், மற்ற எல்லாத் தமிழ்க் கவிகளையும் விடத் தாயுமானவருடைய கவிதை வேகம் தமிழர்களுக்கு இந்த இருநாறு வருஷங்களும் உகந்ததாக இருந்திருக்கிறது என்பது மட்டும் அல்ல; நேரடியாகவும் இலக்கிய ரீதியிலே பிரயோசனப்பட்டிருக்கிறது என்றும் சொல்ல வேண்டும். பதிப்புகளைக் கணக்கெடுத்துப் பார்த்தால் தாயுமானவர் பாடல்கள் மட்டும், அச்சுப் புஸ்தகங்கள் தமிழ்நாட்டிலே தோன்றின காலத்திலிருந்து இன்றுவரை அதிகமாக அச்சாகியிருக்கிறது என்று சொல்லக்கூடிய அளவில் இருக்கும் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. அவருடைய உவமைகளும் வார்த்தைச் சேர்க்கைகளும் மற்ற எந்தக் கவியினுடையதையும் விட அதிகமாகத் தமிழர்களுடைய பழக்கத்திலிருந்து வந்துள்ளது என்றும் சொல்லலாம்.

தமிழுக்குக் காம்பீர்யம் அளிப்பதற்காக நிதானித்து ஒரு முன்கூட்டிய திட்டத்துடன் தாயுமானவர் தம் கவிதைகளில் சம்ஸ்கிருத மொழி வார்த்தைகளையும் கலந்து கையாண்டார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இந்தக் கலவை இவரிடம் அமைந்த மாதிரித் தமிழில் வேறு எந்தக் கவியிடமும் அமைந்ததில்லை என்றுதான் சொல்ல வேண்டும். பலருடைய திறத்தால் கேலிக்கும் கிண்டலுக்கும் இலக்கான ஒரு நடை இவருடைய கவிதையிலே திறமையாகத் தாளம் போடுகிறது. அமைதியும் அணியும் அழகும் பொருந்தியிருக்கிறது. தமிழில் பிறமொழிச் சொற்கள் சேர்க்கக் கூடாது என்று இன்று வாதிப்பவர்கள்கூட, தாயுமானவர் மாதிரி சேர்க்க முடியுமானால் சேர்க்கலாம் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் செய்வார்கள்.

வேதாந்தத்தைச் செய்யுளில் வடித்துத் தந்த தாயுமானவரைக் கவியாக, இலக்கிய கர்த்தாவாக மதிப்பிடுவது சரியல்ல என்பதுதான் இத்தனை நாளும் நம்மிடையே வழக்கிலிருந்து வந்துவிட்ட மனோபாவம். அது சரியல்ல என்று சொல்லுவது பொருந்தும். வேதாந்தத்தை உட்பொருளாக வைத்துக் கவிதை செய்வது சிரமமான காரியம் என்று ஒப்புக்கொள்ளும்போதுகூட, அந்தச் சிரமமான காரியத்தைத் தாயுமானவர் பிரமாதமாகவே செய்திருக்கிறார் என்று ஒப்புக்கொள்ளத்தான் தோன்றுகிறது. டாண்டே என்கிற இத்தாலிய கவி தன் காலத்திய விஞ்ஞான அறிவையும், கிறிஸ்துவ வேத ஆகமங்களையும் அடிப்படையாக வைத்துத்தான் தமது மகா காவியமான ‘தேவ நாடக’த்தை எழுதினார். அதற்காக, இது கிறிஸ்தவ வேத ஆகமத்தைப் பின்பற்றியது, ஆகவே இது கவிதையாகாது என்று ஒதுக்கிவிட முடியுமா? அப்படி ஒதுக்கிவிடுபவர்கள் இலக்கியத்தின் ஒரு அற்புதமான இலக்கிய அநுபவத்தை இழந்துவிடுகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். வேதங்களில் உபநிஷத்துக்களும் இந்த மாதிரிக் கவிதையாகவே போற்றப்படுகிற பகுதிகள்தான். விவிலிய நூல் மதநூல்தான் என்றாலும்கூடப் பல மொழிகளிலும், முக்கியமாக ஆங்கில மொழியில், இலக்கியமாகவே பயன் தந்து வந்திருக்கிறது.

‘சும்மா இருப்பதே சுகம்’ என்று வேதாந்தபரமாக நம்பாதவர்களும்கூட, தாயுமானவரை இலக்கியமாக அறிந்து அநுபவிக்கத் தவறிவிடக் கூடாது; அப்படி அநுபவிக்கத் தவறிவிடுபவர்கள் முக்கியமானதொரு ரஸ அநுபவத்தை இழந்துவிடுகிறார்கள். வேதாந்தத்தைக் கவிதையாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றால் பக்தியே கவிதையாகிய திருவாசகத்தைக் கவிதையாக ஏற்றுக்கொள்ள முடியுமோ? நல்லது, தீயது என்று உலக வாழ்வை வரையறுத்துச் சொல்லும் திருக்குறளை ஏற்றுக்கொள்ள முடியுமோ? வேதாந்தத்தை ஏற்றுக்கொள்ளாதவர்களும்கூடத் தாயுமானவரைக் கவியாக ஏற்றுக்கொள்ள முடியும்.

தாயுமானவர் வேதாக்குக் கவி. அவருக்கு ஒரு நூறாண்டுக்குப் பின் வாழ்ந்த ஜோதி ராமலிங்கம் பக்திக் கவி. இந்தக் காலத்தில் வாழ்ந்த மற்ற எந்தக் கவியையும் விட இவர்கள் இருவரும் இன்றையப் புதுத் தமிழ் இலக்கியத்தைச் சமைத்துத் தர நமக்கு உதவியிருக்கிறார்கள் என்று சொல்லலாம். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலே பாரதியாரால் இவ்வளவு கவிதை எப்படிச் செய்ய முடிந்தது என்றால் அதற்கு முன்னோடிகளாக இவர்கள் இருவரையும் சொல்ல வேண்டும். பண்டிதர்களையும் அரும்பத அகராதிகளையும் தாண்டிக் கவிதை செய்ய வேண்டும் என்கிற எண்ணம் தாயுமானவருக்கே உண்டாகிவிட்டது என்பது அவருடைய கவிதையைப் படிக்கும்போது நமக்கே தெரிகிறது. கண்ணெதிரில் விந்தை செய்யும் சூரியாஸ்தமனக் காட்சியைக் காணக் கண்ணாடி தேவையா என்ன?

இந்த மாதிரியான ஒரு இலக்கியக் கண்ணோட்டத்துடன் யாரும் தாயுமானவரையும் அவர் கவிதையையும் இதுவரை பார்க்க முயன்றதில்லை என்பது உண்மைதான். ஆனால் அதற்காக இனியும் அப்படிப் பார்க்காமலிருக்க வேண்டிய அவசியமில்லையே. ஒரு இருநாறு வருஷங்களாகப் பழகு தமிழ்க் கவிதையாகத் தாயுமானவரின் பாடல்கள் தமிழர்களிடையே வழக்கில் இருந்து வந்திருக்கின்றன. இந்த வழக்கு நமக்கு ஒரு மனோபாவத்தையும் ஒரு மரபையும் சிருஷ்டித்துத் தந்திருக்கிறது. புதுத் தமிழ் மரபிலே தாயுமானவர் கவிதைக்கு மிகவும் முக்கியமான இடமுண்டு. வேதாந்தமாக மட்டும் இதுவரை அதையெல்லாம் மதித்துவர அறிந்துகொண்டிருந்த நாம் இவரை இலக்கியமாகவும் கவியாகவும் மதிக்கத் தெரிந்துகொள்ள வேண்டியது மிகமிக அவசியம். வேதாந்தமாக மட்டும்தான் தாயுமானவர் கவிதைகள் நம்மைக் கவர்ந்து வந்திருக்கின்றன என்று சொல்ல முடியாது. கவிதையாகவும் உவமைகளாகவும் உருவகங்களாகவும் நம்முடைய வாழ்வோடு ஒட்டி வந்துவிட்டவர் தாயுமானவர். வேதாந்தத்தில் நம்பிக்கையற்றவர்களும் தாயுமானவரைக் கவியாக அறிந்துகொள்ளலாம் என்பதுதான் விஷயம். ஷேக்ஸ்பியருடைய நாடக உலகம் செயற்கையானதுதான்; ஒரு கோணத்திலிருந்து பார்க்கும்போது அது உண்மையானதே யல்லதான்; ஆனால் அதனால் அவருடைய நாடகங்களுடைய இலக்கிய மதிப்பு பாதிக்கப்படுவதில்லையே. அதேபோலத் தாயுமானவருடைய கவிதை மதிப்பையும், கவி இதயத்தையும் நாம் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். புதுத் தமிழ் இலக்கிய வளத்தைச் சாத்தியமாக்கிய அம்சங்களில் அதுவும் ஒன்று.

***

‘கல்கி’, 4 ஜனவரி 1959

Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

தமிழ்க் காவியம் சிலப்பதிகாரம் - க.நா.சு

தமிழ் மரபில் உருவாகிவந்த சிறப்பானதொரு காப்பியம் சிலப்பதிகாரம். இது இன்று அறியப்படுவதைக் காட்டிலும் தமிழர்கள் அல்லாதவர்களிடமும்கூட இன்னும் அத...

தேடு

முந்தைய இதழ்கள்

Labels

அபி (13) அரவிந்தர் (1) அருண் கோல்ஹட்கர் (1) அறிமுகம் (1) அஜிதன் (1) ஆ. அமிர்தராஜ் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (3) ஆவுடையக்காள் (1) ஆனந்த் குமார் (8) இசை (11) இந்தி (7) இரா. கவியரசு (1) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (3) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (17) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (5) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (253) கவிதையின் மத (1) கவிதையின் மதம் (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (2) கார்த்திக் பாலசுப்ரமணியன் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (8) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (4) சங்க இலக்கியம் (4) சசி இனியன் (1) சஞ்சய் சௌத்ரி (1) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்தப்பாடல்கள் (1) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (5) சாரு நிவேதிதா (1) சீர்மை பதிப்பகம் (1) சுகந்தி சுப்ரமணிய (1) சுகுமாரன் (5) சுந்தர ராமசாமி (2) சுனில் கிருஷ்ணன் (1) செல்வசங்கரன் (2) சோ. விஜயகுமார் (4) சோலைக்கிளி (1) ஞானக்கூத்தன் (1) டி.எஸ். எலியட் (1) டி.ஏ. பாரி (1) தாகூர் (1) தாஸ் வைத்ய் (1) திரிகூட ராசப்ப கவிராயர் (1) தூயன் (1) தேவதச்சன் (6) தேவதேவன் (28) தேவேந்திர பூபதி (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (3) நித்ய சைதன்ய யதி (1) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (3) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (3) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (8) மரபு கவிதை (8) மராட்டி (2) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மு. சுயம்புலிங்கம் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (17) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ரமேஷ் பிரேதன் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) ரூமி (1) ரெயினர் மரியா ரீல்க (1) லட்சுமி மணிவண்ணன் (3) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) வி. சங்கர் (2) விக்ரமாதித்யன் (10) விவாத (1) வீரான்குட்டி (3) வெய்யில் (1) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (7) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷாந்தா ஷேலகே (2) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (13) அரவிந்தர் (1) அருண் கோல்ஹட்கர் (1) அறிமுகம் (1) அஜிதன் (1) ஆ. அமிர்தராஜ் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (3) ஆவுடையக்காள் (1) ஆனந்த் குமார் (8) இசை (11) இந்தி (7) இரா. கவியரசு (1) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (3) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (17) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (5) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (253) கவிதையின் மத (1) கவிதையின் மதம் (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (2) கார்த்திக் பாலசுப்ரமணியன் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (8) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (4) சங்க இலக்கியம் (4) சசி இனியன் (1) சஞ்சய் சௌத்ரி (1) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்தப்பாடல்கள் (1) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (5) சாரு நிவேதிதா (1) சீர்மை பதிப்பகம் (1) சுகந்தி சுப்ரமணிய (1) சுகுமாரன் (5) சுந்தர ராமசாமி (2) சுனில் கிருஷ்ணன் (1) செல்வசங்கரன் (2) சோ. விஜயகுமார் (4) சோலைக்கிளி (1) ஞானக்கூத்தன் (1) டி.எஸ். எலியட் (1) டி.ஏ. பாரி (1) தாகூர் (1) தாஸ் வைத்ய் (1) திரிகூட ராசப்ப கவிராயர் (1) தூயன் (1) தேவதச்சன் (6) தேவதேவன் (28) தேவேந்திர பூபதி (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (3) நித்ய சைதன்ய யதி (1) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (3) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (3) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (8) மரபு கவிதை (8) மராட்டி (2) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மு. சுயம்புலிங்கம் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (17) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ரமேஷ் பிரேதன் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) ரூமி (1) ரெயினர் மரியா ரீல்க (1) லட்சுமி மணிவண்ணன் (3) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) வி. சங்கர் (2) விக்ரமாதித்யன் (10) விவாத (1) வீரான்குட்டி (3) வெய்யில் (1) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (7) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷாந்தா ஷேலகே (2) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive