மாயம் செய்யும் கவிதை: 'இருட்டு' - விக்ரமாதித்யன்

இருட்டு

நடந்தேன், நடக்கின்றேன்,

நடந்து நடந்தே குகின்றேன்.

நடந்தேன், நடக்கின்றேன்,

நடந்து நடந்தே குகின்றேன்.

செல்லும் வழி இருட்டு

செல்லும் மனம் இருட்டு,

சிந்தை அறிவினிலும்

தனி இருட்டு.


நடையால் வழிவளரும்

நடப்பதனால் நடைதொடரும்

அடியெடுத்து வைப்பதற்கு

ஆதிவழி ஏதுமில்லை.


சுமையகற்றிச் சுமையேற்றும்

சுமைதாங்கியாய் விளங்கும்

சுமைக்குள்ளே தானியங்கிச்

சுமையேற்றும் சும்மாடே!


“எங்கு, எதற்கு

ஏனென்று கேட்டாக்கால்

“எங்கு, எதற்கு

ஏனென்றே கேள்வி வரும்?


என்னை அணைத்தேகும்

இருட்டுக் குரல் தானோ? 

என்னை அணைக்க வரும்

மருட்டுக் குரல்தானோ?


நடந்தேன், நடக்கின்றேன்,

நடந்து நடந்தே குகின்றேன்.

நடந்தேன், நடக்கின்றேன்.

நடந்து நடந்தே குகின்றேன்.

- புதுமைப்பித்தன்

('புதுமைப்பித்தன் கவிதைகள்', தொகுப்பு, பக்கம்: 77, 78)

நவீன இலக்கியத்தில் தவிர்க்கமுடியாத ஒருவரான புதுமைப்பித்தன், சிற்றிலக்கிய / தனிப்பாடல் கவிதை மரபில் பெரிதும் மனம் கொண்டவர். இதனாலேயே அவருடைய கவிதை முயற்சிகளிலும் அந்தத் தாக்கம் அதிகம் காணப்படும். இதைத் தாண்டி, புதுமைப்பித்தனுக்கே உரிய ஒரு வேகமும் துடியும் நிரம்பியிருக்கும். நவீன கவிதை முன்னோடிகளில் புதுமைப்பித்தனை வேறுபடுத்திக் காண்பிக்கும் இயல்பாகவும் இதைச் சுட்டலாம்.

புதுமைப்பித்தன் அடியொற்றிப் புதுக்கவிதை அமைந்திருந்தால், அது மேலான தமிழ்க்கவிதைப்பண்புகள் நிரம்பியதாக வாய்த்திருக்கும். எனில், சந்தர்ப்பங்களும் சாத்தியங்களும் இன்னொருவிதமாக ஏற்பட்டுவிட்டன. தொடக்ககாலத்திலிருந்தே மரபறியாதோ பொருட்படுத்தாதோ மேலைப்பண்புகளை வரித்துக்கொள்ள நேரிட்டுவிட்டது நவீன தமிழ்கவிதை. இந்த நிகழ்வு, நமது கவிதை லட்சணங்களையே வேறுமாதிரி மாற்றிப்போட்டு விட்டது மட்டுமல்லாமல், இன்றைய தினம் வரையிலும் தொடர்ந்து நீடித்து வருகிறது என்பதும் துரதிர்ஷ்டவசமானது தான்.

புதுமைப்பித்தனின் இந்தக் கவிதை, அவர் உள்ளத்தை, எண்ணத்தை அப்படியே எடுத்துக்காட்டுவதாக உள்ளது. 'நம்பிக்கை வறட்சி' என்றுதானே புதுமைப்பித்தன் கதைகளைச் சொல்வார்கள்; இதுவும் அதுபோலத்தான். ஆனால், எதார்த்தம் இப்படித்தான் இருக்கிறது.

அலங்காரப்படுத்துவது கலைக்கு ஆகாது. 'எதிர்கவிதை' எனச் சொல்கிற அளவுக்கான கவிதை இது.

'இருட்டு' கவிதையை, முதலில் 'பாதை' என எழுதிப் பார்த்திருக்கிறார் புதுமைப்பித்தன்; அது திருப்தி தராமல், மறுபடியும் எழுதியிருக்கிறார். திரும்ப எழுதும் போக்குக்கு ஆதாரபூர்வமாகக் கிடைத்த முதல் நவீனகவிதை இது. எழுத்துக்கலைஞனின் மனநிலைதான், திரும்ப எழுதுவது. புதுமைப்பித்தன், தேர்ந்த கலைஞன்; மேதாவிலாசம் கொண்ட படைப்பிலக்கியவாதி. இன்றைய தமிழிலக்கியச் சூழலில் இதை ஆயிரத்தோர் முறை சொல்ல வேண்டும்.

"இந்த பாடலின் கருத்தைவிட உருவம்தான் அதி அற்புதமாக விளங்குகிறது" என்பார் தொ.மு.சி. ரகுநாதன்.

எதுவும் கவிதை, தெள்ளத் தெளிவானது. விளக்கம் வேண்டியதில்லை. வாழ்க்கைப் பயணத்தைத்தான் புதுமைப்பித்தன் சொல்கிறார் என்பது வெளிப்படை. அது அவ்வளவு சுலபமாக இல்லையென வாக்குமூலம் தருகிறார் என்பதும் வெளியரங்கம்தான். புதுமைப்பித்தனின் கவித்துவத்தைக் காட்டும் கவிதை என்பதே முக்கியம். பாடுபொருளைவிடச் சொல்முறையே/உணர்வுச்செறிவே / துள்ளும் சுதியே இதைக் கவிதையாக்குகிறது.

உலகப் பொதுவான விஷயம், தனிமனிதன் பார்வையில் பேசப்படுகிறது உண்மையாக, உரக்க, உணர்வுபூர்வமாக; அது கவிதையாகி விடுகிறது.

“செல்லும் வழி இருட்டு / செல்லும் மனம் இருட்டு / சிந்தை அறிவினிலும் / தனி இருட்டு” வரிகளை நகுலன் தனது கவிதை ஒன்றில் மேற்கோள்காட்டி எழுதியிருப்பார்.

புதுமைப்பித்தனின் இந்தக் கவிதையும் இரண்டிரண்டு சீர்களில்தான் கட்டப்பட்டதாக இருக்கிறது. ந.பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன் இருவருமே கவிதைக் கட்டமைப்பில் கருத்துக் கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதோடு, புதுக்கவிதைக்குச் சீர்கள் கூடுதலாக இல்லாமல் இருப்பதே ஏற்புடையதாக இருக்கும் என்பதையும் உணர்ந்திருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது இது.

***

Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

தமிழ்க் காவியம் சிலப்பதிகாரம் - க.நா.சு

தமிழ் மரபில் உருவாகிவந்த சிறப்பானதொரு காப்பியம் சிலப்பதிகாரம். இது இன்று அறியப்படுவதைக் காட்டிலும் தமிழர்கள் அல்லாதவர்களிடமும்கூட இன்னும் அத...

தேடு

முந்தைய இதழ்கள்

Labels

அபி (13) அரவிந்தர் (1) அருண் கோல்ஹட்கர் (1) அறிமுகம் (1) அஜிதன் (1) ஆ. அமிர்தராஜ் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (3) ஆவுடையக்காள் (1) ஆனந்த் குமார் (8) இசை (11) இந்தி (7) இரா. கவியரசு (1) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (3) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (17) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (5) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (253) கவிதையின் மத (1) கவிதையின் மதம் (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (2) கார்த்திக் பாலசுப்ரமணியன் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (8) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (4) சங்க இலக்கியம் (4) சசி இனியன் (1) சஞ்சய் சௌத்ரி (1) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்தப்பாடல்கள் (1) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (5) சாரு நிவேதிதா (1) சீர்மை பதிப்பகம் (1) சுகந்தி சுப்ரமணிய (1) சுகுமாரன் (5) சுந்தர ராமசாமி (2) சுனில் கிருஷ்ணன் (1) செல்வசங்கரன் (2) சோ. விஜயகுமார் (4) சோலைக்கிளி (1) ஞானக்கூத்தன் (1) டி.எஸ். எலியட் (1) டி.ஏ. பாரி (1) தாகூர் (1) தாஸ் வைத்ய் (1) திரிகூட ராசப்ப கவிராயர் (1) தூயன் (1) தேவதச்சன் (6) தேவதேவன் (28) தேவேந்திர பூபதி (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (3) நித்ய சைதன்ய யதி (1) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (3) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (3) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (8) மரபு கவிதை (8) மராட்டி (2) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மு. சுயம்புலிங்கம் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (17) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ரமேஷ் பிரேதன் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) ரூமி (1) ரெயினர் மரியா ரீல்க (1) லட்சுமி மணிவண்ணன் (3) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) வி. சங்கர் (2) விக்ரமாதித்யன் (10) விவாத (1) வீரான்குட்டி (3) வெய்யில் (1) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (7) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷாந்தா ஷேலகே (2) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (13) அரவிந்தர் (1) அருண் கோல்ஹட்கர் (1) அறிமுகம் (1) அஜிதன் (1) ஆ. அமிர்தராஜ் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (3) ஆவுடையக்காள் (1) ஆனந்த் குமார் (8) இசை (11) இந்தி (7) இரா. கவியரசு (1) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (3) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (17) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (5) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (253) கவிதையின் மத (1) கவிதையின் மதம் (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (2) கார்த்திக் பாலசுப்ரமணியன் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (8) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (4) சங்க இலக்கியம் (4) சசி இனியன் (1) சஞ்சய் சௌத்ரி (1) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்தப்பாடல்கள் (1) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (5) சாரு நிவேதிதா (1) சீர்மை பதிப்பகம் (1) சுகந்தி சுப்ரமணிய (1) சுகுமாரன் (5) சுந்தர ராமசாமி (2) சுனில் கிருஷ்ணன் (1) செல்வசங்கரன் (2) சோ. விஜயகுமார் (4) சோலைக்கிளி (1) ஞானக்கூத்தன் (1) டி.எஸ். எலியட் (1) டி.ஏ. பாரி (1) தாகூர் (1) தாஸ் வைத்ய் (1) திரிகூட ராசப்ப கவிராயர் (1) தூயன் (1) தேவதச்சன் (6) தேவதேவன் (28) தேவேந்திர பூபதி (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (3) நித்ய சைதன்ய யதி (1) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (3) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (3) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (8) மரபு கவிதை (8) மராட்டி (2) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மு. சுயம்புலிங்கம் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (17) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ரமேஷ் பிரேதன் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) ரூமி (1) ரெயினர் மரியா ரீல்க (1) லட்சுமி மணிவண்ணன் (3) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) வி. சங்கர் (2) விக்ரமாதித்யன் (10) விவாத (1) வீரான்குட்டி (3) வெய்யில் (1) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (7) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷாந்தா ஷேலகே (2) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive