‘வாழும் தமிழ்’ மாநாடு ஏப்ரல் 3,4 தேதிகளில் நியூயார்க்கில் நிகழ்கிறது.
அந்நிகழ்வு தமிழை உலகின் முன் கொண்டு நிறுத்துவது மட்டுமல்ல. ஒட்டுமொத்தமாக இங்கிருக்கும்
அறிவு தரப்பை உலகின் முன் வெளிச்சமிட்டு காட்டும் நிகழ்வு. உலகிலுள்ள எந்த அறிவு சூழலுக்கும்
நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை காட்டுவது. இங்கே புதுமைப்பித்தன் தொடங்கி க.நா.சு,
சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், ஜெயமோகன், தேவதேவன் என எந்த உலக இலக்கிய சூழலுக்கும்
நிகரான எழுத்தாளுமைகள் கொண்டது தமிழ். இன்று இந்திய சூழலிலேயே தமிழ் அளவிற்கு தீவிரமான
இலக்கிய சூழல் வேறெங்கும் இருக்கிறதா என்பது சந்தேகமே. ஆனால் அதே வேளையில் வெண்முரசு
போன்ற ஒரு செவ்வியல் படைப்பு தமிழ் பொது சூழலுக்குள் பேசப்படாமல் இருப்பதுமான முரண்
இந்திய அளவில் வேறெங்கும் இல்லாதது.
இச்சூழலில் தமிழில் இருந்து இத்தலைமுறையின் ஒரே இலக்கிய முகமாக வைரமுத்து
முன்வைக்கப்படுவது நமக்கு நாமே செய்துக் கொள்ளும் இழிவு மட்டுமல்ல ஞானபீடமும் வைரமுத்துவிற்கு
அவ்விருதை வழங்கி தன்னை தரம் தாழ்த்திக் கொள்கிறது.
தமிழ் கவிதைக்கான பரிசீலனை இருந்தது என இந்திய சூழலில் ஒரு குழு சொன்னால்
அதன் நிபந்தனையற்ற முதல் தேர்வு கவிஞர் தேவதேவனாக இருந்திருக்க வேண்டும். ஆனால் நம் பொது சூழலின் பிரச்சனை நமக்கே தேவதேவனின் முக்கியத்துவம் தெரியவில்லை என்பதே.
இன்று தமிழில் அறியப்பட்ட ஒரு முகம் என்பதன்றி வைரமுத்துவிற்கு இருக்கும்
தகுதி என்ன? இன்று வைரமுத்துவை வாசித்தேன் என ஒரு குரல் இங்கே எழுந்திருக்கிறதா? யாரேனும்
எழுதிய ஒரு கட்டுரை வாசிக்க கிடைக்கிறதா?
ஆனால் இளம் தலைமுறை எழுத்தாளர்கள், வாசகர்கள் தொடர்ந்து தேவதேவனை வாசித்து
வருகின்றனர். கவிதைகள் இதழில் ஒரு இதழ் விடாமல் தேவதேவனைப் பற்றி கட்டுரைகள் வந்துக்
கொண்டிருக்கிறது. கவிஞர் அபி கவிதை பற்றிய வாசிப்புகள் தொடர்ந்து இந்த இதழிலேயே முன்வைக்கப்படுகிறது. விக்ரமாதித்யன் தன் முன்னோடிகளைப் பற்றி எழுதியது இங்கே தொடராகிறது.
காரணம் அவர்கள் கவிஞர்கள் என்பது.
ஆனால் இந்த ஐம்பது ஆண்டுகளில் நாம் சுந்தர ராமசாமி கண்ட பல கனவுகளை நினைவாக்கியிருக்கிறோம்.
இன்று தமிழ் இலக்கிய சூழல் இந்திய அளவில் அல்ல உலக அளவில் அறிய தக்கது. இன்றே நமக்கான
ஆங்கில மொழிபெயர்ப்பு சூழல் உருவாகி வந்திருக்கின்றன. இன்றே நம் முன்னோடிகளை நாம் உலக
மேடைகளில் பேசும் சூழல் நமக்கு உருவாகி வந்திருக்கிறது. இன்று இந்த கண்டன அறிக்கையை
கூட நாளை நம்பிக்கையான மேலும் முன்னோக்கி செல்வதற்கான வழியாகவே கவிதைகள் இதழ் பார்க்கிறது.
தமிழ் நவீன கவிதைக்கு பங்களிப்பு செய்ய வேண்டும் என்ற நோக்கோடு முன்னெடுக்கப்படும் 'கவிதைகள்' இதழ் வைரமுத்துவிற்கு ஞான பீடம் விருது வழங்கியதற்கு கடுமையான கண்டனங்களை பதிவு செய்கிறது. அதே சூழலில் தமிழ் இலக்கியத்தின் மேலும் தீவிரமான போக்கிற்கான சவாலாகவும் இதை கருதுகிறோம்.
- ஆசிரியர் குழு
***
ந. பிச்சமூர்த்தி தமிழ் விக்கி பக்கம்
கு.ப. ராஜகோபாலன் தமிழ் விக்கி பக்கம்
க.நா. சுப்ரமணியம் தமிழ் விக்கி பக்கம்
ஜெயகாந்தன் தமிழ் விக்கி பக்கம்
சுந்தர ராமசாமி தமிழ் விக்கி பக்கம்
ஜெயமோகன் தமிழ் விக்கி பக்கம்
ஞானக்கூத்தன் தமிழ் விக்கி பக்கம்
விக்ரமாதித்யன் தமிழ் விக்கி பக்கம்
நாஞ்சில் நாடன் தமிழ் விக்கி பக்கம்
எஸ். ராமகிருஷ்ணன் தமிழ் விக்கி பக்கம்
யுவன் சந்திரசேகர் தமிழ் விக்கி பக்கம்







0 comments:
Post a Comment