பூத்த மலர் கேட்பது இசை - மதார்

பூவை அணுகும் வண்டு பூவின் இசையைக் கேட்கலாம். பிரதீப் கென்னடியின் இந்த கவிதையில் பூத்த மலர் இசையைக் கேட்கிறது. 'பூத்த மலர் கேட்பது இசை' என்ற வரியை ஒரு கவிஞன் பித்து நிலையில் மட்டுமே எழுத முடியும். பித்து நிலை கவிதையை அணுகும் கருவி. பூத்த பித்து கேட்பதும் கவிதையைத் தான். 

தளும்புகிறது

கடல்

மடையில்லா பெருநதி

ஓடம்

பூத்த மலர் கேட்பது

இசை

எல்லாம் என்

குழல் விழுந்த துளை

வானின் நட்சத்ரங்கள்  முடிவுறாத கோலத்தின் புள்ளிகள் என்கிறார் பிரதீப் கென்னடி. 

புள்ளி இட்ட கோலம்

இரவில் என் நெஞ்சின்

முடிகளை கோதி பார்த்து

சிலவற்றை புடுங்கிப்பார்த்து

திரும்பி படுத்த மகள்

வானத்து நட்சத்திரங்களை

புள்ளிகளாக பாவித்து

கோலமிட்டு முடிக்க முயன்று

முடியுமுன்னே மீண்டும்

என் மாரின் மயிர்களுக்கு திரும்பினாள்


அவள் வரைந்த

அந்தரத்து கோலத்தை

நான் தொடர்ந்தேன்

அம்மாவைபோலவே

இறைவனின் புள்ளிகள் அழகானவை

அவளைபோலவே

இறைவனின் கோலநோட்டு முடிவதில்லை

அவனுடைய ஒரு வாசல்தான்

இங்கே ஒரு வெளி

ஒரு வாசலின் கோலமும்

இன்னொரு வாசலின் கோலமும்

ஒரு கோலத்தின் இரு புள்ளிகள்

மகாகோலம்

மகாபுள்ளிகள்

மகாஅரிசி

மகாஎரும்பு

மகாஅம்மா

மகாஇரவு

மகாமாரும் சிறியமகளும்

'அவனுடைய ஒரு வாசல் தான் இங்கே ஒரு வெளி' என்ற வரி கவிதைக்கு புதிய திறப்பை தருகிறது. இரண்டு வெளிகள் - வானம் ஒரு வெளி, பூமி ஒரு வெளி. வானவெளி முழுக்க விண்மீன் கோலங்கள். பூமியிலோ ஆங்காங்கே மட்டும். அதுவும் அன்னை மனது வைத்தால். ஒரு புது உரையாடலையும் கவிதைக்குள்ளேயே இந்த கவிதை திறக்கிறது. தந்தை - மகள், இறைவன் - தாய், விண்மீன் கோலம் - மாவு கோலம், வானம் - பூமி ஒவ்வொன்றும் ஒவ்வொன்றுடன் பேசிக் கொண்டிருக்கின்றன இந்தக் கவிதையில். தந்தை மகளின் உரையாடல் கவிதையில் நேரடியாக சொல்லப்படுகிறது. அதைத் தவிர்த்து மற்ற உரையாடல்களை வாசிப்பில் விரித்தெடுக்கும் சாத்தியம் இந்தக் கவிதையில் உள்ளது. 

இடைவிட்டும் விடாத ஆடல்

காற்றின் நிலத்தில்

உந்தி தத்தி

ஒன்றென பறக்கும்

ஜோடி பட்டாம்பூச்சிகள்


ஒன்றின் நடனத்தை

மற்றொன்று தொடர்கிறது

சட்டென்று இரண்டாவதை

நடிக்கிறது முதலாவது


இனைய முயலும்

இரண்டு இசை

கருவிகள் அவை

இணைய முடியாததன்

சூட்சமம் இசை 


ஆடிமுன் அமர்ந்து

முடியாது ஆடும்

ஆடல் அவை 

கவிதைக்குள் ஏதாவது ஒரு உயிர் அல்லது பொருள் இரண்டாக வரும்போது, கவிதை அதைக் கொண்டே நிகழ்ந்து விடுகிறது. அதன் சாத்தியங்கள் பல. பிரதீப் கென்னடியின் இந்தக் கவிதையில் இரண்டு வண்ணத்துப்பூச்சிகளின் நிகழ்த்துக் கலை சொல்லப்படுகிறது. ஒன்றின் நடனத்தை மற்றொன்று தொடர்கிறது, சட்டென்று இரண்டாவதை நடிக்கிறது முதலாவது என்கிற வரிகள் அழகானவை. மேலும் அவை ஒரு பாடலின் இணைய முயலும் இரண்டு வெவ்வேறு இசைக்கருவிகளின் இசையாகின்றன. ஒரு நல்ல கவிதையில் இசையைக் கேட்கலாம்  என்ற தேவதேவனின் கூற்று நினைவில் வருகிறது. 

நொண்டி அடிக்க 

அழைக்கிறாள் என் மகள்

இரண்டு கால்களை

தூக்கி செல்கிறேன் நான்

மேலே உள்ள வரிகள் பிரதீப் கென்னடியின் ஒரு கவிதையின் முடிவில் வருபவை. இரண்டு கால்களையும் விளையாட்டுச் சாமானாக தூக்கிக் கொண்டு ஓடும் ப்ரதீப் கென்னடியின் மகள் கவிதையாகத்தான் இருக்க முடியும்.

***

பிரதீப் கென்னடி வலைப்பக்கம்

Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

ஆகாய மிட்டாய் - கல்பற்றா நாராயணன் கவிதை

ஆகாய மிட்டாய் ந ண்பனின் மகளின் பெயர் மழை என்று தெரிந்தபோது மனம் தெளிந்தது சாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம் சற்று பிந்தியானால...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive