கணுக்கணுவாய் மூழ்கும் சுழல் - பாபு ப்ரித்விராஜ்

மரணத்தை அடைந்த ஆதி மனிதன் யமன். அவன் மறுபிறப்பின் கடவுள்,  விதியின் கடவுள், கர்மவினையின் கடவுள் என அழைக்கப்படுகிறான் அவன் கடவுளாவது எந்த விதியென்று தெரியவில்லை. விளங்கிக்கொள்ள இயலாத ஒரு கவிதைதான் போல. யமனின் முடிவிலா இருப்பில் தன்னை பிரித்தறிய யமிக்கு ஓர் இருள் தேவைப்படுகிறது. படைப்பின் ஆதியில் யமியின் தீராத இச்சையில் இரவு நிகழ்கிறது. எப்போதும் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒன்று காதலின் பாதை வழிதானென உணரும் உள்ளங்கொண்ட ஒருவன்தான் இக்கவிதைக்கான வாசகன். சூரியனின் மறைவு அவசியமாகும் தருணத்தில் தான் இவ்வுலகு தொடங்குகிறது என்பதுதான் இக்கவிதையின் அழகு!

இரவும் பகலும் இணைந்து துரத்தும் ஒரு பொற்கனவுதான் காதல். அந்த கருப்பு வெள்ளை கட்டத்தில் கவிதை வரிகள் சதுரங்கம் ஆடுகிறது

படைப்புத் தொடக்கத்தின் முதல் நிறம்

நிகழ்ந்து கொண்டிருக்கும் வெற்றி

எப்போதும் மீதமிருக்கும் பூர்ணம்

சூரியன் சாயு(யா)ம் சந்தி(யா)

காயும் பகலின் மீது கவிழும் நிழல்

விழையும் உடலின் தழல்

கணுக் கணுவாய் மூழ்கும் சுழல்

இளங்கோ கிருஷ்ணனின் பூர்ணமையூரிய செவ்வரிக் கயல் என்னும் கவிதை நூலில் முதல் பாடல் என்னும் தலைப்பில் இரண்டு கவிதைகள் இடம்பெற்றுள்ளன. காதலின் மறைவை கலவியின் வெளியை என இரவு பகலை கவிதை உலகிற்கு அளிக்கிறது. காமம் எனும் மலர்  பெயர்களைச் சூட்டிக் கொள்ளும் போதுதான் மெய் மறந்து உதிர்கிறது.

எப்போதும் நினைவில் மலரும் 

ஒன்றாகவே இருக்கிறது

அதன் வாசனை பகலில் ஒளிந்து இரவில் ஒளிர்கிறது

காணும் அனைத்துள்ளும் உறையும் ஒன்றாக காதல் இருக்கிறது

படைப்பை காதலென்றும் காமமென்றும் பிரிக்கும் இருமை

கவிதைக்கே வாய்க்கும்

கவிதை மட்டுமே அதை மொழியில் 

சொல்ல முடியும்

மீண்டும் மீண்டும் முளைக்கும் காமம்

கவிதைக்குள் மட்டுமே அடங்கும்

கல் தன்னை சிற்பமாக்கிக் கொள்ளும் நிகழ்வுபோல அரூபமான உணர்வுகள் தொஷ்டா என்றும் தாதா என்றும் பெயர் தாங்கி சொரூபமாகி விடுகின்றன. காதலை மறுதலிக்கும் போக்கு ஆதியிலேயே தொடங்கி விட்டது என்று நினைக்கிறேன். காரணங்கள் பலவுள்ளன என்றாலும் இக்கவிதையின் நாயகி யமியின் காதல் ஏற்கப்படாமைக்குக் காரணம் ஆதி காரணம். ரிக் வேதத்தின் 10.10 -ல் வரும் உரையாடலை முன் வைத்து இக்கவிதை எழுதப்பட்டிருக்கிறது.

முதல் பாடல்


யம!

என் சோதரனே பைங்கருப்பே

உன் யமியை இடைவெளியின்றி அணைப்பாயாக

நின் புஜபலம் என் சுரோணிதத்தைப் பெருக்குகின்றது

கருமார்பில் புரளும் தாழைகளின்

பூநாக வாசமும் அதன் மோடியும்

என் தலையைக் கிறுக்குகிறது

வருஷ காலங்களின் 

சூலைக் காற்று மாங்கனிகளை உதிர்க்கட்டும்

பித்துக்கொண்டு அள்ளி உன் துடையில்

என் நிதம்பம் பொருத செருகு அசுவே

யோனி நிறையட்டும்

மத்தியமம் அடைபடட்டும்

உபஸ்தம் பூக்கட்டும்

அவற்றின் 

அதி தேவதைகள்

தொஷ்டாவும் தாதாவும்

உன் ஸ்தம்ப பலத்தை வியந்து வாழ்த்துவார்களாக

என் சூதகப் பெருக்கு

கோடை கால நதியாய் உலரட்டும்

அதன் வித்துகளில் உன் சுண்ணம்

ஸ்வேத வண்ண தாதை நிருவி

புத்துயிர் ஜனிக்கட்டும்

யம!

பர மானுஷ்ய ஜனன மித்ர

பயிர் மழை கேட்டு நிற்கும்போது

வருணன் குருடாகக் கூடாது

உன் திமிரென்ன காட்டு

என் காட்டருவிக் குகையின் ஆதி இருளே.

முதல் பாடல் 2

தொஷ்டா!

நீ அழைத்தால் என்னால்

வராமல் இருக்க முடியாது

என் கண்களைக் குருடாக்கிக் கொள்கிறேன்

காதுகளை பழுக்கக் காய்ச்சிய

கம்பிகளால் செவிடாக்கிக் கொள்கிறேன்

என் இதயத்தைப் பிய்த்து

நாய்களுக்கு வீசுகிறேன்

அப்போதும்

உன் குரல் எனக்குக் கேட்கிறது

உன் உருவம் எனை அழைக்கிறது

உன் காதல் எனைத் தொடுகிறது

மலைகளில் திரளும் வெள்ளம்

பள்ளத்தாக்குகளில் பாய்வதுபோல்

விண்ணுக்கு எரியப்பட்ட கல்

பூமிக்கு இழுக்கப்படுவதுபோல்

நான் உன்னால் அழைக்கப்டுகிறேன்

கதியற்று வருகிறேன்

மீண்டும் மீண்டும்.

***

Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

கவிதை - இந்திய, உலக இலக்கியப்‌ போக்குகள் – 2: க.நா.சு

மனித இனத்தின்‌ முதல்‌ இலக்கிய வடிவம்‌ கவிதையே காவியங்களை பற்றி இவ்வளவு போதும்‌. இப்போது கவிதை என்று பார்க்கலாம்‌. பொதுவாக உலக மொழிகளில்‌ எல்...

தேடு

முந்தைய இதழ்கள்

Labels

அபி (12) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (8) இந்தி (7) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (7) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (201) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (3) சங்க இலக்கியம் (3) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (4) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (6) தேவதேவன் (24) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (5) மரபு கவிதை (8) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (16) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (7) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (12) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (8) இந்தி (7) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (7) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (201) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (3) சங்க இலக்கியம் (3) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (4) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (6) தேவதேவன் (24) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (5) மரபு கவிதை (8) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (16) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (7) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive