கவிதையின் கருவிகள்- கவிஞர் மதார்

நவீன தமிழ் இலக்கியம் ஒரு வானம், எவ்வளவு பறவைகள் வேண்டுமானாலும் அதில் பறக்கலாம். அதற்கான இடம் அதில் உள்ளது என்று எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தனது உரையொன்றில் குறிப்பிடுகிறார். தற்கால சூழலுக்கு மிகப் பொருத்தமான வரிகள் இவை. ஒருவன் கவிஞனாக வேண்டுமெனில் அவனுக்கு முதலில் சிறகு முளைத்தாக வேண்டும். மொழி - ஒரு சிறகு. ஆளுமை - இன்னொரு சிறகு. வாசிப்பு, பயிற்சி, தொடர் முயற்சி இவற்றின் வழி மொழி ஒருவனுக்கு கைகூடிவிடலாம். ஆளுமையை அவரவரது வாழ்வே தீர்மானிக்கிறது. தமிழில் கவிகளுக்கு தனிக்குரல் இல்லை. எல்லாரும் ஒன்று போலவே எழுதுகிறார்கள் என்ற பொதுவான குற்றச்சாட்டு ஒன்றுண்டு. ஆனால், கவிதையில் மிக நுண்ணிய இடத்தில் கவிஞனின் இயல்புகள் கவிதையில் ஏறியிருக்கும். 

ஒரு பந்தென இருக்கிறோம்

கடவுளின் கைகளில்

அவரதைத் தவற விடுகிறார்

தொப்பென வீழ்ந்து

விடாதபடிக்குத்

தன் பாதத்தால் தடுத்து

முழங்காலால் ஏற்றி

புஜங்களில் உந்தி

உச்சந்தலை கொண்டு முட்டி

இரு கைகளுக்கிடையே

மாறி மாறித் தட்டி

விளையாடுகிறார்

மறுபடியும் பாதத்திற்கு விட்டு

கைகளுக்கு வரவழைக்கிறார்

“நான் உன்னை விட்டு

விலகுவதுமில்லை: உன்னைக்

கைவிவிடுவதுமில்லை”

பிதாவே! தயவு பண்ணி எம்மைக்

கைவிடும்”.

இசையின் இந்த கவிதையை வாசித்து முடிக்கும்போது நாம் புன்னகைக்கிறோம். ஒருவேளை இந்த கவிதையை எழுதியவர் பிரான்சிஸ் கிருபாவாக இருந்திருந்தால் இது ஒரு துயர அனுபவத்தைக் கூட தந்திருக்கலாம். எப்படி பார்த்தாலும் ஒரு நல்ல கவிதையில் அதை எழுதிய கவிஞனின் ஆளுமை பதிந்தே இருக்கும். புத்தம் புதிதாக எழுத வரும்  இளம் கவிஞன் முன் இந்த ஆளுமைதான் கேள்வியாக நிற்கிறது. இதனாலேயே என்னவோ 'நான்' கள் இடம்பெறும் கவிதைகளை கவிஞர்கள் தங்கள் ஆரம்ப காலத்தில் அதிகம் எழுதிப் பார்க்கிறார்கள் அல்லது தான் விரும்பும் மூத்த கவிஞரின் சாயலில் கவிதைகளை எழுதிப் பார்க்கிறார்கள். ஒரு கட்டம் வரைக்கும் அந்த சாயல், பாவனை இளம் கவிக்கு தேவையாய் இருக்கிறது. ஏனென்றால் தன்னை கவர்ந்த அந்த கவிஞரின் பாதிப்பில் தான் அவன் கவிதையே எழுத வந்திருப்பான். ஒரு ஊன்றுகோல் போல ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும் அது தேவைப்படுகிறது. பின்னர் சுயமாக நடக்கும் காலத்தில் மொழி, ஆளுமை என்ற இரண்டு சிறகுகளுடனும் அவன் பறத்தலுக்கு தயாராகிறான்.

பெரு.விஷ்ணுகுமாரின் "அசகவ தாளம்" அவரது இரண்டாவது கவிதை தொகுப்பு. அவரது தனித்துவம் அவர்  பயன்படுத்தும் கவிதையின் கருவிகள். நிலா, பூ, பறவை போன்றவை காலங்காலமான கவிதையின் கருவிகள். பெரு.விஷ்ணுகுமார் கூடுமானவரை தன் கவிதைகளில் பழைய கருவிகளை தவிர்க்கிறார். திரும்ப திரும்ப பயன்படுத்தப்பட்டு அர்த்தம் ஏற்றப்பட்ட நிலவையும், பூவையும், பறவையையும் அவர் அரிதாகவே பயன்படுத்துகிறார். புதிய கருவிகள், விசித்திர சம்பவங்கள் அவரது கவிதைகளில் அதிகமாக வருகின்றன. க்ளிப் மாட்டிய பற்களால் புன்னகைப்பவன், கன்வேயர் பெல்ட்டில் பயணிப்பவன் என்பன சில எடுத்துக்காட்டுகள். புதிய கருவியை முன்வைப்பதால் நிகழ்கிற விசித்திரங்கள் மட்டும் கவிதைக்கு போதாது. அதைத் தாண்டிய ஒன்றை அடையவே பெரு.விஷ்ணுகுமார் தன் கவிதைகளில் முயற்சிக்கிறார். புதிய கருவிகளின் வரவு தமிழ்க்கவிதைக்கு ஆரோக்கியமானதே. ஆனால் பழைய கருவிகளை முழுவதுமாக கைவிடுவதும் சாத்தியமல்ல. பழைய கருவிகள் பழுதடைந்து விட்டதாக புதிய கவிகள் நினைக்கிறார்கள். பழைய கருவிகளை புதிய கவிகள் எப்படி கையாளுகிறார்கள் என்பதை பொருத்தே பழைய கருவிகள் நவீனமடையும். அந்த வகையில் சேர்கிறது இந்த தொகுப்பில் வரும் "மீள" என்கின்ற கவிதை.

மீள

அவ்வளவு சிரமத்தோடெல்லாம்

இங்கிருந்து நிரந்தரமாய்

எனைவிட்டுப் பிரிய வேண்டாம்

ஆற்றில் பயணிக்கும்

ஆளற்ற படகே 

விருப்பமில்லையெனில் திரும்ப வந்துவிடு

உன்னால் முடியும் என்றால் . . .

இதில் வரும் "உன்னால் முடியும் என்றால்" என்ற கடைசி ஒரு வரி இந்த கவிதைக்கு பெரு.விஷ்ணுகுமாரின் ஆளுமையைக் கொண்டு வந்து விடுகிறது. அவரது முதல் தொகுப்பான "ழ என்ற பாதையில் நடப்பவன்", இரண்டாவது தொகுப்பான "அசகவ தாளம்" இரண்டையும் ஒரு வாசகன் படிக்கும்போது உணர முடியும் இந்த ஒரு வரியில் பெரு வரும் இடம். அதுதான் அவரது ஆளுமை. அதை எந்த மெனக்கெடலும் இல்லாமல் இந்த கவிதை சாத்தியப்படுத்துகிறது. எந்த புதிய கருவிகளும் இல்லை, விசித்திர நிகழ்வுகள் இல்லை, ஆளற்று போகும் ஒரு படகிடம் வேண்டுமென்றால் வா,அதே நேரத்தில் உன்னால் முடிந்தால் என்று கூறும் இடத்தில் பெரு.விஷ்ணுகுமார் பறக்கத் துவங்குகிறார்.

*** 

பெரு. விஷ்ணுகுமார் தமிழ் விக்கி பக்கம்

***

Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

ஆகாய மிட்டாய் - கல்பற்றா நாராயணன் கவிதை

ஆகாய மிட்டாய் ந ண்பனின் மகளின் பெயர் மழை என்று தெரிந்தபோது மனம் தெளிந்தது சாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம் சற்று பிந்தியானால...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive