காலத்தின் விடுதலை - அருள்

நேற்று மட்டுமே எங்கும் உள்ளது, அதன் அழுத்தமின்றி நம் நாட்கள் நகர்வதில்லை. காலம் என நாம் பொதுவில் கொள்வது கடந்த கால கசப்பான இறந்தகாலமும், தித்திக்கும் எதிர்காலமும் தான். எதிர்காலம் என்பது என்றேனும் எதிர்கொள்ள வேண்டியது. எதிர்கொள்ளும் தருவாயில் கனலென கனத்து சவமென கடந்து செல்லும். காலத்தின் மீதான நமது எதிர்வினைகளோ காலத்தை நிமிடங்கள் என சுருக்கி ஒவ்வொரு நிமிடமும் நம்மை உறுத்தும்படி செய்கிறது.

 

காலம்புழுதி

எங்கிலும்புழுதி

வாழ்க்கையின்தடங்களை

வாங்கியும்அழித்தும்

வடிவுமாற்றியும்

நேற்றுநேற்றெனநெரியும்புழுதி

 

தூரத்துப்பனிமலையும்

நெருங்கியபின்சுடுகல்லாகும்

கடந்தாலோ

ரத்தம்சவமாகிக்கரைந்த

செம்புழுதி

 

புழுதிஅள்ளித்

தூற்றினேன்

 

கண்ணில்விழுந்து

உறுத்தின

நிமிஷம்நாறும்நாள்கள்

 

புழுதியை காலமென உருவகிக்கும் அபியின் இக்கவிதையை இறந்த கால துயரின் உக்கிரத்தை உணர்த்துவதாக உள்ளது. துயர் என்பது கடக்கப்பட வேண்டியது. நம்மைச்சுற்றி எங்குமெனசூழ்ந்திருக்கும் துயரைக் கடக்க, துயரென புறத்தில் உருகொள்ளும் காலத்தை அகத்தில் முழுதுணரும் ஒரு தருணத்தை சிறை என்னும் கவிதையில் நிகழ்த்தி காட்டுகிறார் அபி.

 

காலம்சிறை

பிரக்ஞையின்

அறாவிழிப்பு

 

இரவிலிநெடுயுகம்

இடந்தொலைத்தஆழ்வெளி

 

சிறையிருப்பது

காலமும்தான்

 

அறுபடாத விழிப்பு நிலையென இரவுகளற்ற நெடுயுகமென இன்மையின் ஆழ்வெளியில் சிறையிருக்கும் காலம் என்னும் பேரிருப்பை ஆழ்மவுன கணமொன்றில் உணரச் செய்கிறார் அபி. புழுதியென உறுத்திய காலம் என்பது நாம் கட்டமைத்தது மட்டுமே.காலம் அதன் புறச்சூழலின் கட்டுகளிலிருந்து இருந்து விடுபட்டு அகாலம் என வெளிப்படும் தருணத்தை அபியின் வடிவங்கள் என்னும் கவிதையின் இப்பகுதியில் உணரலாம்.

வடிவங்கள்

வடிவங்களைநெருக்கிநிறுத்தி

அதிகாரம்செலுத்திய

போல்போலில்லைஇரண்டும்

செத்துப்போகும்

 

வடிவங்கள்இன்றித்

தொடர்புகள்ஏது

வேய்ந்ததொடர்புகள்நாலாபுறமும்

விலகிட

வெளிச்சம்வியாபிக்க

 

இதோ

 

காலம்

கண்ணில்படும் 

அபியின் கவிதை கூறுமுறை என்பது புறக்காட்சி படிமங்கள் மூலம் ஒன்றை சுட்டி பின்னர் ரத்து செய்து அரூப படிமமாக, அகஅனுபவமாக மாற்றுவது. இக்கவிதை வரிகள் காலம், அதனை சுற்றி நெருக்கிப் பின்னப்பட்ட வடிவங்கள் அழிந்து தொடர்புகள் அறுந்து வெளிச்சமென காலம் வெளிப்படும் சித்திரத்தை அளித்து காலத்தை உணரச்செய்வதுடன் அபியின் கவிதைசெயல்முறையையும் புரிந்து கொள்ள செய்கிறது.

***

அபி தமிழ் விக்கி பக்கம்

***

Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

ஆகாய மிட்டாய் - கல்பற்றா நாராயணன் கவிதை

ஆகாய மிட்டாய் ந ண்பனின் மகளின் பெயர் மழை என்று தெரிந்தபோது மனம் தெளிந்தது சாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம் சற்று பிந்தியானால...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive