இ(கெ)ட்ட பெயர் - சுதா


கட்டு கட்டு கவிதையால் கட்டு

என்னை வாயடைக்கச் செய்ய வேண்டியிருந்தால் “அதெல்லாம் கவிதை. உனக்கு புரியாது” என்பார் ஒருவர். இருக்கலாம். ஆனால் எனக்கும் கவிதை புரியும் என்று நிரூபிப்பவர்களின் வரிசை ஒன்று இருக்கிறது.


அப்பர் பெர்த்திலிருந்து

உருண்டு விழப்பார்க்கிறது குழந்தை.


ஜன்னல் வழியே

உலகத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த

அவள் அன்னை

அதை உதறியெறிந்துவிட்டு

பதறியெழுந்து

கைவிரித்து நிற்கிறாள்.


அதே கணத்தில் அனிச்சையாய்

ஆங்காங்கே எழுந்து

கைவிரித்து நின்றனர் சில அன்னையர்.


நானும் ஒரு கணம்

அன்னையாகிவிட்டு

எனக்குத் திரும்பினேன்.


இசையின் இந்த கவிதையை வாசிக்கும்பொழுது நானும் ஒரு கணம் கவிதை வாசகியாகிவிட்டு எனக்குத் திரும்பினேன். ஆக, எனக்குள்ளும் கவிதை கணங்கள் உண்டு. அதை நிகழ்த்துவதில் பெரும் பங்கு கல்பற்றாவினுடையது.

அவரது மேடை உரைகளே கவிதை போலத்தான் ஒலிக்கும். மலையாளம் அறியாதவர்கள் கூட மொழிபெயர்ப்பாளர் இன்றியே புரிந்துகொள்ள முடியும். அவரது கவிதைகளுக்கும் அது கூடுதலாகவே பொருந்தும்.

சமீபத்தில் நான் (வாசிக்கக்)கேட்டதில் என்னை விடாது பிடித்துக்கொண்டது ‘பேரு தோஷம்’ என்ற கவிதை.


இ(கெ)ட்ட பெயர்

எதன் பொருட்டு நான் என் நாய்குட்டிக்கு பெயரிட்டேன்

பெயரிட்டதால் அது நாயல்லாதானதா

சிறப்புற்ற நாயானதா

என்னுடைய நாயானதா

நாய்க்கு நாய் என்ற பெயர் போதாதா

காகமும் எருமையும் வண்டும் கத்தரிக்காயும் போல

ஒரு தனிப்பட்ட பெயரின்றி என் நாயும் வாழமுடியும்தானே

பெயர் தேவைப்பட்டது எனக்கா இல்லை அதற்கா


நான் இட்ட பெயர் அதன் பெயராவதற்கு சில காலம் ஆனது

ஒரே ஒலியில் ஒரே லயத்தில் பலமுறை அழைத்தபோது

அது தலையுயர்த்தியது

அதன் கண் திறந்தது

அது என்னை ஏற்றுக்கொண்டது - தன்னை ஏற்றுக்கொண்டது

இனி வேறு பெயரில் விளித்தால் அது தலை உயர்த்தாது

அது இனி மற்றுமொரு நாயல்ல - அது இனி நாயேயல்ல

பூமியில் சொந்தமாக பெயருள்ள ஒரு சிலரில் 

அது ஒன்றாகியிருந்தது


அம்மாவும் அப்பாவும் தம்பி தங்கைகளும்

நான் இட்ட பெயர்கொண்டு அதை அழைத்தனர்

அது பெருமை கொண்டது - வாலாட்டியது

யாரேனும் அலட்சியமாக அதன் பெயரை உச்சரித்தால்

அது ஏறெடுப்பதும் இல்லை

அந்த பெயரே உடலாகி அது முற்றத்தில் திரிகிறது

அதன் வாழ்வில் முதல்முறையாக ஒரு ஒலி வார்த்தையாகி இருக்கிறது

என் நாய் இப்போது ஒற்றை சொல் கொண்ட ஒரு அகராதி

எங்கிருந்தாலும் அப்பெயர் அதனை அழைத்தது - அதை மட்டும்

 நான் வைத்த பெயர் இப்போது அதனுடையது

அந்த பெயரை உச்சரித்தால் அந்நியர்களும்

அதனை அறிந்தவராகிறார்கள்


இன்று என் கண்பார்வைக்கு வெளியிலிருந்தாலும்

அதை நான் தளையிட்டிருந்தேன் -

கண்ணுக்குத் தெரியாத கயிறொன்றால், அப்பெயரால்

நொடிக்கு நூறுமுறை நான் அதன் பெயரை சொன்னேன் – 

நான் அதன் ஆதாம் அல்லவா

அதன் ஆதாமை வெகு தூரம் நகர்த்திவிட்டவன் அல்லவா


இப்போது அது வெறும் ஒரு நாயல்ல

நாய் நமக்கு ஒரு வசைச்சொல், 

ஒரு சிறுமை

நான் அதன் சிறுமையை போக்கிவிட்டேன்


நான் அதற்கு இட்ட பெயர் 

நாய்களுக்கு மட்டுமே இடப்படுவது

அப்பா, மாமா, தம்பியின் பெயர்களுடன் மாறிப்போகாதது

நாயுடைய சங்கிலியும் கழுத்துப்பட்டையும் போல

நாயுடன் மட்டுமே இணைந்துகொள்வது

ஒரு தாழ்த்தப்பட்டவனுக்கோ 

வேற்றுசாதிக்காரனுக்கோ 

அடிமைக்கோ

மட்டுமே இடக்கூடிய பெயர்

வீட்டினுள் நுழையாத,

வீட்டின் வெளியிலேயே நிற்கக்கூடிய 

எனது வீட்டின் வெளியே மட்டுமே நிற்கக்கூடிய பெயர்


எதன் பொருட்டு நான் என் நாய்குட்டிக்கு பெயரிட்டேன்

பெயருள்ள எல்லோரையும் என் நாய்க்கு நிகர் வைக்கவா


நாய்க்கு பெயரிடுவதை பற்றிய ஒரு எளிய விவரிப்பாக தொடங்கும் கவிதை. சில வரிகளிலேயே பெயர் நாய்க்கு கம்பீரம் கூட்டுகிறது. நமக்கும் புன்னகை. அடையாளமான பெயர் அதனை அடிமை கொள்ளும்போது புன்னகை மறைய ஆரம்பிக்கிறது. நம் மனசாட்சி சீண்டப்படுகிறது. 

ஆவேச முழக்கங்கள் இல்லை, அறைகூவல்கள் இல்லை. பக்கத்தில் ஒரு நாற்காலியில் அமர்ந்திருப்பவர் உரையாடும் ஒரு தொனி மட்டுமே. ஆனால் பேசுபொருளின் தீவிரத்தை ஒரு சில வார்த்தைகளால் கடத்திவிடுகிறார். நாய் ஒரு படிமமாகிவிடுகிறது.

மலையாள மொழிக்கு இயல்பாக அமைந்த ஒரு இசைத்தன்மை உண்டு. அது அவரது படைப்புகளில் எப்போதும் உடனிருப்பது. 

‘ஞான் அதை கயறில்லாது கெட்டி பேரிட்டு பூட்டி’ 

‘சங்கலையோ பெல்டோ போலே நாய்க்கு மாத்ரம் இணங்குன்ன பேரு’

‘வீட்டின் புறத்து மாத்ரம் நில்குன்ன, எண்டே வீட்டின் புறத்து மாத்ரம் நில்குன்ன பேரு’

இது போன்ற வரிகளை உதாரணம் சொல்லலாம். இசைதன்மையோடு கூட அழுத்தம் கொடுக்கவேண்டிய இடங்களில் சரியான வார்த்தைகளை பொருத்திவிடுகிறார்.

பொதுவாக கவிதை வாசிப்பிற்கு ஒரு தனி மனநிலை வேண்டும் என்று கூறப்படுகிறது. ஒரு கவிஞரின் படைப்புகளை உள்வாங்க அவரது அகப்பயணம் பற்றிய அறிதல் வேண்டும், அல்லாமல் எந்த கவிதையும் படிப்பவர் மனதில் மலராது என்பது பலராலும் சொல்லப்பட்ட, ஏற்கப்பட்ட கருத்து.

ஆனால் எந்த முன்னேற்பாடும் இல்லாமல், தனி முயற்சிகளேதும் எடுக்காமல் ஒருவரை உள்ளிழுத்துக்கொள்ளும் சொற்கள் கல்பற்றாவினுடையது. ஓடுபாதையில் தடதடக்காமல் ஓட்டி, தரைவிட்டெழும் கணத்தை தனித்து அறியாமல், ஆகாயத்தில் பறக்கச்செய்யும் விமானி அவர்.   

***

கல்பற்றா நாராயணன் தமிழ் விக்கி பக்கம்

தொடுதிரை நூல் வாங்க...

***


Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

ஆகாய மிட்டாய் - கல்பற்றா நாராயணன் கவிதை

ஆகாய மிட்டாய் ந ண்பனின் மகளின் பெயர் மழை என்று தெரிந்தபோது மனம் தெளிந்தது சாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம் சற்று பிந்தியானால...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive