அராஜகத்தின் நடனம் - சைதன்யா

1819 ஆகஸ்ட் இங்கிலாந்தில் ஓட்டுரிமை கோரி ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு மான்செஸ்டர் நகரில் புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் கூடினர். அப்போது இங்கிலாந்தில் வெறும் பதினோரு சதவீத ஆண்களுக்கு மட்டுமே ஓட்டுரிமை வழங்கப்பட்டிருந்தது. இங்கிலாந்து பாராளுமன்றம் அவர்களின் கோரிக்கையை முற்றிலும் நிராகரித்து அவர்கள் தலைவர்களை கைது செய்தது. மேலும் கூடியிருந்த மக்களை சிதறிடிக்க குதிரைப்படையினர் உருவிய வாட்களுடன் அவர்கள் மீது பாய்ந்தனர். இதில் பலர் காயமடைந்தனர் பெண்கள் குழந்தைகள் உட்பட பதினெட்டு பேர் இறந்தனர்.

இங்கிலாந்து முழுவதும் ஒரு அதிர்வை இந்த நிகழ்வு உருவாக்கியது. ஷெல்லி அராஜகத்தின் நடனம் என்ற தலைப்பில் ஒரு நீள் கவிதையை எக்ஸாமினர் என்னும் பத்திரிக்கைக்கு எழுதி அனுப்பினார். மக்களை நோக்கிய அழைப்பாக அவர் அதை எழுதினார்.

அதிலிருந்து சில வரிகள் :

அமைதியாக உறுதியாக நில்லுங்கள்

காட்டை போல அடர்ந்து பரவி

கைகளை கட்டிக்கொண்டு பார்வைகள் வெறிக்க நில்லுங்கள்

என்றுமே முறியடிக்கப்படாத ஆயுதங்கள் அவை.


கொடுங்கோலர்கள் துணிந்தால்

உங்கள் மீது குதிரைகளை செலுத்தட்டும்

வெட்டி குத்தி காயப்படுத்தி

அவர்கள் விரும்புவதை செய்யட்டும்.


கைகளை கட்டிக்கொண்டு பார்வைகள் வெறிக்க நில்லுங்கள்

பயமோ அதிர்ச்சியோ கண்ணில் தெரியாமல்

உங்களை கொல்பவரை வெறித்து நோக்குங்கள்

அவர்களின் கோபம் தீரும் வரை கொல்லட்டும்:


அவர்கள் வெட்கி தலைகுனிந்து வீடு திரும்புவார்கள்

இங்கு நீங்கள் சிந்திய ரத்தம்

அவர்கள் முகத்தில் மனசாட்சியின் உறுத்தலாக வெளிப்படும்


உறக்கத்திலிருந்து எழுங்கள் சிங்கங்களைப் போல

எண்ணியே பார்த்திராத எண்ணிக்கையில்!

உங்கள் தளைகளை ஒரு அசைவில் சிதறடிக்க எழுங்கள்

ஆழ்துயிலில் உங்கள் மீது படர்ந்த பனித்துளிகள் போன்றவை அவை

நீங்கள் பலர் - அவர்கள் சிலரே!


இக்கவிதை 1832 வரை பிரசுரிக்கப்படவில்லை. எக்ஸாமினர் பத்திரிகையின் ஆசிரியரும் ஷெல்லியின் தோழருமான லீ ஹண்ட் ஷெல்லி மறைந்த பின்னரே தன் முன்னுரையுடன் அக்கவிதையை அச்சிட்டார். இவ்வரிகளை அங்கியாக அணிந்து வரும் அந்த தூய கருணையுள்ள ஆன்மாவை புரிந்துகொள்ளும் இடத்தில் மக்கள் அப்போது இல்லை என்று அவருக்கு தோன்றியதால் 1819-ல் அதை வெளியிடவில்லை என்று அதன் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

மக்களுக்கு சென்று சேர வேண்டும் என எளிய சொற்களில் எழுதப்பட்டிருந்தாலும் இக்கவிதையின் தாக்கம் பல நூற்றாண்டுகளை கடந்து சென்றுள்ளது. பல முக்கியமான போராட்டங்களை, தலைவர்களை இவ்வரிகள் கவர்ந்துள்ளன, காந்தி உட்பட. லீ ஹண்ட் அன்று கூறிய “அங்கி அணிந்த தூய ஆன்மா” நூறு வருடங்களுக்கு பின் அகிம்சை என்ற கருதுகோளாக இந்திய சுதந்திர போராட்டத்தின்போது எழுந்து வந்தது. அப்போது இங்கிலாந்து மக்கள் அதற்கு தயாராக இருந்தார்கள். அதே மான்செஸ்டர் நகர தொழிற்சாலை தொழிலாளர்கள்  வெறும் ஒரே ஒரு வெள்ளை அங்கியை அணிந்து குளிரில் நடுங்கிக் கொண்டிருக்கும் காந்தியை அணைத்துக் கூட்டிச்செல்லும் புகைப்படம் ஒன்று நினைவுக்கு வருகிறது.

ஆழ்துயிலில் புல்நுனிகள் மீது படரும் பனித்துளிகளை போல என்று மக்களை தளையிட்டுருந்த சங்கிலிகளை கூறுகிறார். ஒளியில் மின்னும் பனித்துளிகள் சங்கிலிகள் என்னும் காட்சியை மனதில் எழுப்புகிறது. இருளின் தேக்கநிலையில் எப்போதென்று அறியாத கணத்தில் உருவாகி படரும் பனித்துளிகள். ஒளியில் தன்னை காட்டுவது. ஒரு உலுக்கலில் சிதரடிக்க கூடிய வலிமையே அவற்றிற்கு.

ஜார்ஜ் ஆர்வெலின் 1984 என்னும் நாவலின் மைய கதாபாத்திரத்தை அடிக்கடி துணுக்குறச்செய்யும் எண்ணம், எண்ணிலடங்காத இந்த மக்கள் தொகை எதிர்த்து ஒரு குரல் எழுப்பினால் உடையும் அளவிற்கு தான் ‘மூத்த அண்ணன்’யின் சர்வாதிகார அரசு உள்ளது என்பது தான். ஆழ்துயிலில் நம் மீது படரும் பனித்துளிகள் போன்றதே இத்தளைகள். அவ்வளவு  வலுவற்றவை மென்மையானவை ஒரு முறை இவர்கள் அனைவரும் வந்து தெருவிலோ சதுக்கத்திலோ கூடி எதிர்த்து நின்றால் உடைந்து சிதறும் அளவிற்கு. எதிர்க்க வேண்டும் என்பது கூட இல்லை இவை தளைகள் என்ற உணர்வே போதும்.

***

அராஜகத்தின் நடனம் - ஷெல்லி, ஆங்கில மூலம்

***

Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

ஆகாய மிட்டாய் - கல்பற்றா நாராயணன் கவிதை

ஆகாய மிட்டாய் ந ண்பனின் மகளின் பெயர் மழை என்று தெரிந்தபோது மனம் தெளிந்தது சாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம் சற்று பிந்தியானால...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive