சந்திரா தங்கராஜின் வேறு வேறு சூரியன்கள் - மதார்

கால்களை இழுத்தபடி நடக்கும் மழை

ஒரு நிமிடம் கூட விடாத மழை 

எந்த பறவையும் குரல் எழுப்பவில்லை 

அனைத்தும் நனைந்தபடி எங்கிருக்கின்றனவோ 

என விசனம் கொள்கிறேன்.

என் கண் முன்னே ஒரு மனிதன் 

மழையில் கால்களை இழுத்துக்கொண்டு நடந்து போகிறான் 

எல்லா மழையும் அவன்மேல்தான் பெய்கிறது 

நான் அவனை வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

இதில் "எல்லா மழையும் அவன்மேல்தான் பெய்கிறது" என்ற வரியில் கவிதை நிறைந்துவிடுகிறது. மொத்த மழையும் அவன் மேல் பொழியும்போது அவன் மழையும் ஆகிவிடுகிறான் என்பது கவிதையின் தலைப்பாகிவிடுகிறது. அழகான கவிதை...

இந்தத் தொகுப்பில் பொடி மீன் என்ற இன்னொரு கவிதையும் அழகானது. 

பொடிமீன்

ஆற்றின் கரையோரம் நடந்து செல்கிறேன் 

ஒவ்வொரு மரத்திற்குப் பின்னும் 

தீபத்தை போன்று ஒளிர்கிறது சூரியன் 

நதியில் இறங்கி மல்லாக்க மிதக்கிறேன் 

நெஞ்சின் வெறுப்புகள் எல்லாம் நீரில் கரைகின்றன 

இப்போது நான் ஒரு பொடிமீன் 

எளிதில் வலைவிரித்து பிடித்துவிடலாம் 

எனக்கென்று இனி புதிதான தீமைகள் எதுவும் 

வரப்போவதில்லை.


ராணி திலக்கின் ஒரு கவிதை உண்டு. 

நான் சின்னஞ்சிறு

குற்றங்கள் செய்வேன்

சின்னஞ்சிறு மலர்களாகப்

பிறப்பேன் 

இந்தக் கவிதையில் கவிஞர் எளிதில் வலைவீசிப் பிடித்துவிட முடிகிற பொடி மீனாகிவிடுகிறார். தன் கையில் தானே ஒரு பனிக்கட்டியாகக் கரைவதைப் பார்ப்பது மாதிரியான கவிதை. இதே போல இன்னொரு கவிதை

அணையாச் சிதை

இப்போதெல்லாம் என் கனவில் 

நதிக்கரையில் எரிந்து கொண்டிருக்கும் 

அணையாச் சிதை ஒன்று 

அடிக்கடி வருகிறது.

மகரந்தசுடர் போன்ற தீப்பொறி 

விழாக்கோலமாய் வெளியில் பறக்க, 

உடலின் நறும்புகையை எடுத்துக்கொண்டு 

பறவைகள் எங்கேயோ பறந்து செல்கின்றன.

காற்றில் செஞ்சுடரின் களி நடனம்.

நான் எரிந்துகொண்டிருப்பதை 

நானே நின்று பார்த்துக்கொண்டிருக்கிறேன் 

படகோட்டி காத்திருக்கிறான் 

என்னை மறுகரைக்கு கூட்டிச் செல்ல.

இதுவும் தன் கையில் தானே பனிக்கட்டியாகக் கரைவதைப் பார்க்கும் கவிதைதான். இரண்டு கவிதைகளும் துயரத்தை அல்லாமல் நிறைவையே பேசுகின்றன. தொகுப்பின் முதல் கவிதை அழிக்கத் தெரியாத ரப்பர்

அழிக்கத் தெரியாத ரப்பர்

நிறுத்தி நிறுத்தி அழும் காயம்பட்ட சிறுமியைப்போல 

சூரியன் விட்டுவிட்டு ஒளிர்ந்தது.

என்னதான் நடக்கிறதென 

என்றோ மூடப்பட்ட என் சாளரத்தை திறந்து பார்த்தேன் 

எதிர் திசையில் மண்சுவரில் படர்ந்திருந்த பூசணிப் பூக்கள் 

வெயிலில் ஒரு மாதிரியும் 

வெயிலற்ற பொழுதில் ஒரு மாதிரியுமாய் நிறம் கொண்டிருந்தன.


முன்பு அங்கொரு வீடிருந்தது 

அங்கே துணிகளுக்கு அடியில் தாழம்பூ மணக்கும் 

அம்மாவின் தகரப்பெட்டியும் இருந்தது 

அதில் ஒரு சின்ன நெளிவு 

அவளின் முடிக்கற்றையைப்போல அவ்வளவு அழகாக.


வாரத்திற்கொருமுறை 

அம்மா ஏற்றும் அகல்விளக்கு ஒளி நிழல்களில் 

கருமையாய் படிந்திருந்தன எங்களின் லட்சம் துயர்கள் 

வீட்டுப்பாடங்களை எழுதும்போது, 

ஆப்பிள் வாசனை வரும் பென்சில் அழிப்பான்களால் அவற்றை அழித்தோம். 

ஆனால் அம்மாவின் துயர் மட்டும் 

ஆப்பிள் வாசனையோடு மிஞ்சிப்போனது. 

கவிதையின் துவக்கமே சூரியனை நமக்கு அறிமுகம் செய்வதுதான். விட்டுவிட்டு அழுகிற சிறுமியென விட்டு விட்டு ஒளிர்கிற சூரியன் அறிமுகமாகிறது. அப்படி விட்டு விட்டு ஒளிர்கையில் பூசணிப்பூக்கள் 

வெயிலில் ஒரு மாதிரியும், வெயிலற்ற சமயம் ஒரு மாதிரியும் இருக்கின்றன. இறுதியில் அம்மாவின் துயர் வாசனையாக மிஞ்சி நிற்கிறது. திரைப்படங்களில் ஒரு நிலக்காட்சியை, ஒரு இயற்கைக் காட்சியை காட்டிவிட்டு ஒரு கதாபாத்திரத்தின் முகம் அறிமுகமாவது போல் இந்தக் கவிதையில் சூரியனின் வழி கவிதை ஆரம்பமாகி அம்மாவில் முடிகிறது. ஆனால் ஒரு முக்கிய வேறுபாடு இந்தக் கவிதையில் இயற்கை (சூரியன்) அறிமுகமாவதற்கு ஒரு சிறுமியின் முகம் தேவையாய் இருக்கிறது. ஆக மேலும் கீழும் காட்சிக் கோணங்கள் மாறாமல் அடுத்தடுத்து நகர்வது போன்ற உணர்வை வாசிப்பில் கவிதை தருகிறது. சிறுமியும் சூரியனும் வெயிலும் பூசணிப்பூவும் அம்மாவும் அடுத்தடுத்த வீடுகளில் குடியிருக்கிறார்கள். 

இந்தத் தொகுப்பில் வரும் உருத்திரளாத நிலவு பவளமல்லி மரத்திற்கிடையே உடைந்து நிற்கிறது என்ற வரி அழகானது. 

வாழ்விடம் பதிலேதும் இல்லை

ஆனால் அதன் ரெக்கைகள் மட்டும் படபடத்தன.

என்ற வரியும்..

"அன்னமிடுதல்" என்ற கவிதை கனவுகளுக்கு உணவிடுவதைப் பற்றியது

அன்னமிடுதல்

என் கனவுகளில் குதிரைகளின் உடல்கள் துண்டாக்கப்படுகின்றன 

என்றேன் பாட்டியிடம் 

"ஒரே கனவா" எனக்கேட்டாள் 

இல்லை வெவ்வேறு கனவுகள் வெவ்வேறு குதிரைகள் என்றேன். 

"மாமிசங்களைத் துண்டாக்கி காய வை" என்றாள் 

குதிரை மாமிசம் உண்ணக் கூடாதில்லையா என்றதும் 

"அது உனக்கல்ல உன் கனவுகளுக்கு" என்றாள் இப்படித்தான் தொடங்கியது 

கனவுகளில் கண்டதையெல்லாம் மாமிசமாக்கி 

உப்பிட்டு கனவுகளுக்கு உணவிடுவது.

இதே போல "ஐந்து ஐந்தாக" என்ற கவிதையும் வினோதமானது.

ஐந்து ஐந்தாக

அவள் அன்று வலது கையில் கடிகாரம் அணிந்திருந்தாள் 

அது ஐந்து நிமிடம் தாமதமாக ஓடியது.

அதை உணர்ந்த ஐந்தாவது நொடியில் 

பின்னுக்குத் திரும்பிப்பார்க்கிறாள்

அவன் ஐந்து நிமிடம் தாமதமாக வந்துகொண்டிருந்தான் 

பின் ஐந்து மணி நேரம் 

ஐந்து நாள் 

ஐம்பது வாரம் 

ஐநூறு மாதம் 

ஐந்தாயிரம் வருசம்

ஐம்பதாயிரம் நூற்றாண்டு தாமதமாகி காணாமல் போய்விட்டான்.

தொகுப்பில் வரும் தரிசனம் எளிமையுடன் அழகும் ஆழமும் திகழும் கவிதை.

தரிசனம்

பிரார்த்தனையெல்லாம் இல்லை

சூரியன் குன்றுக்குப் பின்னே அஸ்தமிப்பதை காண்பதற்காகத்தான்

தாமஸ் மௌண்ட் தேவாலயத்திற்குச் செல்கிறேன்

ஏசுவும் அதே காரணத்திற்காகத்தான் அங்கிருப்பதாகச் சொன்னார். 

***

சந்திரா தங்கராஜ் தமிழ் விக்கி பக்கம்

தொகுப்பு : வேறு வேறு சூரியன்கள்

வெளியீடு : சால்ட் பதிப்பகம்

***

Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

ஆகாய மிட்டாய் - கல்பற்றா நாராயணன் கவிதை

ஆகாய மிட்டாய் ந ண்பனின் மகளின் பெயர் மழை என்று தெரிந்தபோது மனம் தெளிந்தது சாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம் சற்று பிந்தியானால...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive