இரண்டு மொழியாக்கக் கவிதைகள் - கடலூர் சீனு

தயையுண்டு கடவுளுக்கு; மழலையர்தோட்ட குழந்தைகள் மீது

தயையுண்டு

கடவுளுக்கு  மழலையர்தோட்ட குழந்தைகள் மீது. 


பள்ளிக் குழந்தைகள் மீது 

அவருக்கு தயை குறைவே.


வளர்ந்தவர்கள் மீது அவருக்கு இரக்கமே இல்லை. 

அவர் அவர்களை  தனியே விட்டுவிடுகிறார். 


சிலநேரங்களில்

குருதியால் மூடுண்ட அவர்கள் 

முதலுதவி மையம் சேர

 நான்கு கால்களாலும் தவழ நேர்கிறது 


எரிமணலில். 


ஆயினும்  

ஒருவேளை அவர் மெய்யான காதலர்களைக் காண நேர்ந்தால் 

அவர்கள் மீது கருணையே கொள்வார் .


பொதுஇருக்கையில் உறங்கும் முதியவருக்கு மேல் 

உயர்ந்து நிற்கும்  தருபோலும்    

புகலிடம் தருவார் .



ஒருவேளை

நாமும் கூட அவர்களுக்கு அளித்திடுவோம் 


சேவைக்கென்று 

அன்னை நமக்கு கையளித்த அந்த  

இறுதி  அரிய நாணயங்களை. 


அதன்பொருட்டு அவர்களின் ஆனந்தம் நம்மைக் காக்கும்.

இப்பொழுதிலும் பிற  தினங்களிலும் .

(எஹுதா அமிக்ஹாய்)

எளிய நேரடியான கவிதை. காதலை, குழந்தைமையின் பரிசுத்தத்துக்கு இணை வைக்கிறது. பள்ளி துவங்கி அறிவுக்கனி புசித்து மெல்ல மெல்ல வளரும் மனிதனை, கடவுள் கைவிட்டே விடுகிறார். அவன் உடலெல்லாம் குருதி வழியும் ரணமாகி பாலை மணலில் ஊர்ந்து செல்லும் நிலை வந்தாலும் அவர் கருணை கொள்வதில்லை.

சேவைக்கென அளிக்கப்பட்ட அரிய இறுதி நாணயங்கள். வறியவனின் பசி தீர்க்கவோ, நோயாளியின் பிணி தீர்க்கவோ அல்ல, லௌகீகக் கவலை இன்றி காதலர்கள் தங்கள் காதலில் திளைத்துக் கிடக்கவென செலவு செய்யப்படுவதை விட பெரிய சேவை என்ன இருக்க முடியும்.

துயர்மிகு லெளகீக வாழ்வுக்கு எதிராக ஆனந்தக் காதல் வாழ்வு, எரிமணல், தருநிழல் போன்ற எதிரிடைகள் கவிதைக்கு உயிரோட்டம் அளிக்கின்றன. மூச்சு முட்ட செய்யும் யதார்த்த உலகம் கண் எதிரே நிற்கையில் அதை உதறி எழுந்து கடவுளின் கருணையின் கீழ் குழந்தைகளாகவோ காதலர்களாகவோ நம்மை வாழ்ச்சொல்லும்  இக்கவிதை அளிக்கும் ஒரு வித ஆறுதல் ஆசுவாசம் அலாதியானது.

காற்று, நீர் ,கல்

நீர்  நிறையழிக்கிறது கல்லினை   ,

காற்று சிதறச்செய்கிறது நீரினை ,

காற்றினைத்  தடுக்கிறது கல்.


நீர்,காற்று,கல்.


காற்று செதுக்குகிறது கல்லினை. 

கல்லின் ஒரு கோப்பை நீர் .

தப்பிய நீர் காற்றென்றாகிறது.


கல்,காற்று,நீர்.


காற்று இசைக்கிறது சீழ்க்கையில். 

நீர் முணுமுணுக்கிறது செல்கையில். 

அசைவற்ற 

கல் நிலைத்திருக்கிறது.  


காற்று,நீர் ,கல்.



அவற்றின் வெற்றுப் பெயர்களை ஊடுருவிக் 

கடந்தும் மறைந்தும்.


ஒவ்வொன்றும் மற்றதாகவும்,

பிறிதென அல்லாததாகவும்.


நீர், கல், காற்று.


(ஓக்ட்டேவியோ ப்பாஸ்)

பௌர்ணமி நாளில் கொந்தளிக்கும் குமரி முனை கடற்கரையில் நின்றால் கண்ணுக்கு சிக்கும் சிறு காட்சி போல விரியும் கவிதை.


ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணம் கொண்டு இயங்கும் ஆற்றல். ஆற்றல்கள் மோதி முயங்கி ஒவ்வொன்றின் தன்மையும் கலங்கி, காண்பவை யாவும் ஒரு பெரிய கொந்தளிப்பான இயக்கம் மட்டுமே. 


மாறிக்கொண்டே இருக்கும் இவை ஏதும் நிறைநிலையில் இல்லை. நிறைநிலையில் இல்லாத இவற்றுக்கு சாராம்சம் என ஒன்று எவ்விதம் இருக்கும்? 


காணும் இவற்றின் நிலையற்ற, நிறையற்ற, சாரமற்ற தன்மை மேல் கவிந்திருக்கும் வெற்றுப் பெயர்களை கடந்து நோக்கினால் எஞ்சுவது என்ன? 

***

பின்குறிப்பு: 

“God has Pity on Kindergarten Children” (by Yehuda Amichai)

wind, water, stone 

(BY OCTAVIO PAZ _

TRANSLATED BY ELIOT WEINBERGER)

for Roger Caillois

எனும் தலைப்பு கொண்ட இரண்டு ஆங்கில கவிதைகளை எனக்கென நான் செய்து வைத்துக்கொண்ட மொழியாக்கம் இது. (இப்படி எனக்கென மொழியாக்கங்களை அவ்வப்போது நான் செய்து வைத்துக்கொள்வதுண்டு)

நான் ஆங்கிலப் புலமை கொண்டவன் அல்ல. அகராதிப் பொருள் சார்ந்தும் எனது மொழி ரசனை கொண்டும் கவிதையின் உடலும் ஆன்மாவும் கெடாமல்  நான் எனக்கென, நெகிழ்வான  இம்மொழியாக்கங்களை செய்து வைத்துக்கொள்ளக் காரணம், இக்கவிதைகளை என் தாய்மொழியில் எழுதிப் பார்க்கையில் கிடைக்கும், நானே இக்கவிதையின் படைப்பாளி என்பதை போன்றதொரு தன்மய பரவச உணர்வை அனுபவிக்கவே.

***

எஹுதா அமிக்ஹாய் - Yehuda Amichai

ஓக்ட்டேவியோ ப்பாஸ் - Octavio Paz

***


Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

S.P.B - எம். கோபாலகிருஷ்ணன்

SPB   கிராமிய மக்களின் எழுச்சிப் பாடலாக ஒலிக்கவிருந்த ஒன்று குறும்புக்கார வாலிபர்களின் துடுக்குப் பாடலானது பிரிவுத்துயரொலிக்க வேண்டிய ஒன...

தேடு

முந்தைய இதழ்கள்

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (5) இந்தி (7) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (5) கட்டுரை (7) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (191) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (2) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (3) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (24) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (3) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (5) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (14) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (7) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (5) இந்தி (7) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (5) கட்டுரை (7) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (191) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (2) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (3) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (24) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (3) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (5) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (14) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (7) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive