களம் - தாமரைக்கண்ணன் புதுவை

என்னுடைய நண்பர்கள் இருவர் ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்தார்கள். ஒன்றே போல் பணி, அலுவலகத்திலிருந்த பலரில் திறமைசாலிகள் இருவரும்தான். அவன் பல தோல்விகளில் இருந்து எழுந்துகொண்டிருந்தான். அவள் மெத்தப்படித்த பெண். எல்லோரும் ஒப்பிட்டு பேசிக்கொண்டிருக்க அவர்கள் காதலர்களானார்கள். அவள் அவனை மணந்துகொள்ள எண்ணியிருந்தாள், அவனுக்கும் அந்த எண்ணம் இருந்தது.

ஒரு கட்டத்தில் இருவரில் ஒருவரே பணியில் மேலெழுந்து செல்லவேண்டிய கட்டாயம். அந்தப்பெண் எளிதாக அடுத்த நிலைக்கு சென்றுவிட்டாள். பதவி, ஊதியம், மதிப்பு எல்லாம் கூடியது. ஏதோ ஒருகணத்தில் அவன் சரிய ஆரம்பித்தான் நிலைகொள்ள முடியவில்லை. அவள் காதலனைப் பற்றிக்கொள்ள நினைத்து கைதுழாவினாள். அவளுக்கு அவன் தென்படவே இல்லை. அவளது கனவுகள் எல்லாம் சிதறிவிடும் என்ற அச்சம், கூவிக்கரைகிறாள் கண்ணீர் பெருகுகிறது. பதற்றம் அதிகரிக்கின்றது அவளுக்கு அவன் காணாமலே போய்விட்டான். அவள் காலடியில் கிடைக்கும் அவனது உடலை அவள் கவனிக்கவே இல்லை, பலமுறை தழுவிய கரங்கள்.  இன்னும் அவள் அவனுக்காக தினமும் அழுகிறாள்.

சங்க இலக்கியம் பிரிவை பிரிவாற்றாமையை வெவ்வேறு குரல்களில் பேசிக்கொண்டே இருக்கிறது. பொருள் தேடிச்செல்லும் பிரிவு, போருக்கு செல்பவனின் பிரிவு, பிறபெண்களிடம் சென்றவனால் ஏற்படும் பிரிவு, தொலைநிலத்திலிருந்து காதல் கொள்ள வந்தவன் மீண்டும் வருவானா என்ற ஏக்கமும் பயமும் இவ்வாறெல்லாம். 

சங்க இலக்கணப்படி தலைவன் தலைவி என்ற வழக்கு மட்டுமே இருக்கும் தனிப்பட்ட  பெயர்கள் தெரியாது. காப்பியத்தில் கண்ணகி என்றும் மாதவி என்றும் பெயர்கள் தெரியும். மாதவியின் பிரிவை இன்னும் மேற்சென்று இளங்கோவால் சொல்ல முடிகின்றது, ஏனெனில் கோவலனுடனான அவளது காதல்வாழ்வே சிலம்பில் பெரிதும் பேசப்படுகிறது.  கண்ணகி மதுரையில் கற்புடைய ஏழு பெண்களை முன்வைத்து வஞ்சினம் உரைக்கிறாள் அவர்களுள் ஆதிமந்தியும் ஒருத்தி.

ஆதிமந்தி சோழ இளவரசியாக கருதப்படுபவள். பொன்னி நதி கொண்டுசென்ற தனது காதலன் ஆட்டனத்தியை மீட்டவள். அவள் பாடியதாக ஒரு செய்யுள் குறுந்தொகையில் உள்ளது.

மள்ளர் குழீஇய விழவி னானும்

மகளிர் தழீஇய துணங்கை யானும்

யாண்டுங் காணேன் மாண்தக் கோனை

யானுமோர் ஆடுகள மகளே என்கைக்

கோடீ ரிலங்குவளை நெகிழ்த்த

பீடுகெழு குரிசிலுமோர் ஆடுகள மகனே


உழவர் நிரம்பிய விழாவிலும் 

பெண்களுடன் கைகோர்த்து ஆடும் கூத்திலும்

எங்கும் காணவில்லை தலைவனை

நானும் ஒரு ஆடுகள மகள்தான்

என்கைவளை நெகிழக்காரணமான பெருமைக்குரிய

அவனும் ஆடுகள மகன்தான் 

ஆதிமந்தி காதலனை விழாவிலும் கூத்திலும் தேடுகிறாள், அவளும் ஆடுகள மகள்தான் ஆனால் அவனைக்கான முடியவில்லை. பிரிவுக்குக்காரணம் தொலைவென்பது மட்டுமல்ல, அருகாமையுமாக இருக்கலாம்.

காஹா சத்த சஈ என்னும் பிராகிருத தொகை நூலொன்றின் பாடல் பின்வருவது ( சுந்தர் காளி, பரிமளம் சுந்தர் மொழிபெயர்ப்பு )  

தன் காதலனின் அஸ்திச்சாம்பலை 

உடலெல்லாம் ஓயாது பூசுகிறாள் இளம் காபாலிகை

வியர்த்து ஒழுகிறது அவளுக்கு

அஸ்தியின் இன்பம்

முதலிரு வரிகளே மனதை மோதி அறைகின்றன. காபாலிகையும் காதலனை பிரிய விரும்பவில்லை, தன்மேலேயே பூசிக்கொள்கிறாள்.

***

ஆதிமந்தியார் தமிழ் விக்கி பக்கம்

***


Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

S.P.B - எம். கோபாலகிருஷ்ணன்

SPB   கிராமிய மக்களின் எழுச்சிப் பாடலாக ஒலிக்கவிருந்த ஒன்று குறும்புக்கார வாலிபர்களின் துடுக்குப் பாடலானது பிரிவுத்துயரொலிக்க வேண்டிய ஒன...

தேடு

முந்தைய இதழ்கள்

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (5) இந்தி (7) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (5) கட்டுரை (7) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (191) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (2) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (3) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (24) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (3) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (5) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (14) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (7) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (5) இந்தி (7) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (5) கட்டுரை (7) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (191) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (2) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (3) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (24) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (3) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (5) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (14) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (7) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive