மாயம் செய்யும் கவிதை: 'பதிவுகள்' - விக்ரமாதித்யன்

 பதிவுகள்

இன்று வாசலில்

சிமெண்டுத் தரைபோட்டிருக்கிறது

நாளைக்கு

இறுகிவிடும்.


காக்கையின் கால்விரல்

கழுதையின் குளம்படி

குழந்தையின் காலடி

பிச்சைக்காரன்

குடுகுடுப்பைக்காரன்

உஞ்சிவிருத்தி பிராமணன்

தெரிந்தவர், தெரியாதவர்

ஸ்கூட்டர் சக்கரம்

இரவின் சுவர் நிழலில்

எவனுக்கோ

இரகஸியமாய் காத்து நின்ற

கால் மெட்டி நெளிவு

இளங்கன்றின் வெள்ளைமனம்

பசுவின் நிதானம்

காளையின் கம்பீரம்

நாயின் குலப்பகை

பூனையின் கபடம்

பன்றியின் அவலட்சணம்

 

இறுகிய தரையில்

நிரந்தரம்

விரிசல் கண்டு

தூள் ஆனாலும்

புதியவை பதியாது

பதிந்ததும் நிலைக்காது


உருண்டுவரும் கோலிகள்

நில்லாது போகலாம்

அல்லது

குழிக்குள் விழிக்கலாம்

-    தி.சோ. வேணுகோபாலன்

எழுத்து காலகட்ட கவிஞர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவரான தி.சோ.வேணுகோபாலனின் ஒரு நல்ல கவிதை இது.

வாசலில் சிமெண்ட் தரை போட்டிருப்பதைப் பார்த்ததிலிருந்து தோன்றியிருக்கும் வாழ்வு சார்ந்த கவிதை. சிமெண்ட் பூசியுள்ள வாசல்தரையில் மனிதனின் பாதங்கள் மட்டுமல்ல, பிராணிகளின் பாதங்களும் பதிய வாய்ப்புண்டு; நிறைய இடங்களில் கண்டிருப்போம். கவிஞரும் ஏற்கெனவே பார்த்ததில் இங்கேயும் அதுபோல நிகழலாம் என்று நினைத்துப் பார்க்கிறார்.

கவிதை, ஏதோ சாதாரண விஷயத்தைச் சொல்வதுபோலப் படலாம்; அப்படி அல்ல. கவிஞனின் கற்பனையில், பார்வை விசேஷத்தில் ஒரு புதிய கோலம் கொண்டு விடுகிறது. இந்தக் கற்பனையும் பார்வையும் எதார்த்தத்திலிருந்தே எழும்புபவை.

சிமெண்ட் போட்டுள்ளது எதார்த்தம். அதில் தடங்கள் பதியலாம் என்பதும் நேரக்கூடியதே. எனில் கவிஞன் மனசு புனைவுகளை உருவாக்குகிறது என்பது தான் விசேஷம். எதார்த்தத்திலிருந்து முளைக்கும் புனைவுதான் இக்கவிதை. பெரிதாக என்ன இருக்கிறது என்று எண்ணத் தோன்றும். அவ்வாறல்ல.

கவிதை பெரிய விஷயங்களையே பேசவேண்டும் என்று ஒரு கட்டாயமும் இல்லை. எளிய பொருள்களையும் சொல்லலாம். சொல்லப்போனால், அரிய விஷயங்கள் குறைவாகவும் எளிய விஷயங்கள் நிறையவும் இருப்பதுதான் வாழ்வே. எளிய பொருளின் இயல்பையும் அழகையும் கவிதையில் கொண்டு வருவதும் செய்யப்பட வேண்டியதே.

“இரவின் சுவர் நிழலில்/எவனுக்கோ காத்து நின்ற/ கால் மெட்டி நெளிவு” என்ற வரிகள் – நுணுக்கமான அவதானிப்பில் கண்டறிந்த வாழ்வம்சம் பொதிந்தவை.

கவிதைத் தொடக்கம், நிரம்பத் தன்மையாகத்தான் இருக்கும். ஆனால் பிறகு என்று ஓர் எதிர்ப்பார்ப்பைத் தோற்றுவிக்கும். தொடரும் இரு பத்திகளும் அடுக்கிச் சொல்லும் முறையில். நான்காவது, பதிவுகளின் இயல்பு. ஐந்தாவது விளக்கம். ஆறாவது பத்தி, முத்தாய்ப்பு. ஐந்தாவது பத்தி தேவையில்லை என்றே கருத வைக்கிறது.

கவிதை, எளிமையாக இருக்கக்கூடாது என்பதில்லை. அவ்வாறு இருப்பது கவிதை இல்லை என்றும் சொல்ல முடியாது. இருண்மை, மயக்கம், பூடகம், புதிர்த்தன்மை இவையெல்லாம் பின்நாள்களில், பெரும்பாலும், கவிதையின் வகைமைக்காக, நவீனத்துக்காக, புத்திசார்ந்து ஏற்படுத்திக் கொண்டவைதாம். தன்போலத் தோன்றாது என்பது இல்லை.

கவிதை, தன்னளவிலேயே, கவிதையாக இருக்கையில், நகாசு வேலைகள் எதற்கு. எப்படிப்பார்த்தாலும் கவிதையின் விஷயம்தான் முதலில். பூவேலைகள் பிறகுதாம். அது அந்தந்த கவி ஆளுமையைப் பொருத்தது. ஏற்படுத்திக் கொண்டவையே இயல்பு போலாகிவிடக்கூடாது. வேலைப்பாடுகள் இல்லாதது வெள்ளைக்கவிதை என முடிவு கட்டலாகாது. ‘பதிவுகள்’ பொருளுள்ள கவிதை என்பதோடு பொருத்தமான பூவேலைகள் உள்ளதும்தான்.

- விக்ரமாதித்யனின் 'மாயம் செய்யும் கவிதை தொகுப்பிலிருந்து'

***

விக்ரமாதித்யன் தமிழ் விக்கி பக்கம்

***


 

Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

தாயுமானவர் - க.நா.சு

நமக்கெல்லாம் வேதாந்தம் நன்றாகவே வரும் என்பது உண்மைதான். ஆனால் வேதாந்தம் என்றால் ஓடி ஒளிந்து கொள்கிறவர்கள் நினைப்பதுபோல் வேதாந்தத்தைத் தவிர வ...

தேடு

முந்தைய இதழ்கள்

Labels

அபி (13) அரவிந்தர் (1) அருண் கோல்ஹட்கர் (1) அறிமுகம் (1) அஜிதன் (1) ஆ. அமிர்தராஜ் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (3) ஆவுடையக்காள் (1) ஆனந்த் குமார் (8) இசை (11) இந்தி (7) இரா. கவியரசு (1) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (3) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (18) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கண்டனம் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (5) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (260) கவிதையின் மத (1) கவிதையின் மதம் (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (2) கார்த்திக் பாலசுப்ரமணியன் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (8) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (4) சங்க இலக்கியம் (4) சசி இனியன் (1) சஞ்சய் சௌத்ரி (1) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்தப்பாடல்கள் (1) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (5) சாரு நிவேதிதா (1) சீர்மை பதிப்பகம் (1) சுகந்தி சுப்ரமணிய (1) சுகுமாரன் (6) சுந்தர ராமசாமி (2) சுனில் கிருஷ்ணன் (1) செல்வசங்கரன் (2) சோ. விஜயகுமார் (4) சோலைக்கிளி (1) ஞானக்கூத்தன் (1) டி.எஸ். எலியட் (1) டி.ஏ. பாரி (1) தாகூர் (1) தாஸ் வைத்ய் (1) தி.சோ. வேணுகோபாலன் (1) திரிகூட ராசப்ப கவிராயர் (1) தூயன் (1) தேவதச்சன் (6) தேவதேவன் (29) தேவேந்திர பூபதி (1) ந. பிச்சமூர்த்தி (1) ந. ஜயபாஸ்கரன் (1) நகுலன் (3) நித்ய சைதன்ய யதி (1) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (3) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) புதுமைப்பித்தன் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (3) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (8) மரபு கவிதை (8) மராட்டி (3) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மு. சுயம்புலிங்கம் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (17) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ரமேஷ் பிரேதன் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) ரூமி (1) ரெயினர் மரியா ரீல்க (1) லட்சுமி மணிவண்ணன் (3) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) வி. சங்கர் (2) விக்ரமாதித்யன் (12) விவாத (1) வீரான்குட்டி (3) வெய்யில் (1) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (7) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) வேணு வேட்ராயன் (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷாந்தா ஷேலகே (2) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (13) அரவிந்தர் (1) அருண் கோல்ஹட்கர் (1) அறிமுகம் (1) அஜிதன் (1) ஆ. அமிர்தராஜ் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (3) ஆவுடையக்காள் (1) ஆனந்த் குமார் (8) இசை (11) இந்தி (7) இரா. கவியரசு (1) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (3) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (18) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கண்டனம் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (5) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (260) கவிதையின் மத (1) கவிதையின் மதம் (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (2) கார்த்திக் பாலசுப்ரமணியன் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (8) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (4) சங்க இலக்கியம் (4) சசி இனியன் (1) சஞ்சய் சௌத்ரி (1) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்தப்பாடல்கள் (1) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (5) சாரு நிவேதிதா (1) சீர்மை பதிப்பகம் (1) சுகந்தி சுப்ரமணிய (1) சுகுமாரன் (6) சுந்தர ராமசாமி (2) சுனில் கிருஷ்ணன் (1) செல்வசங்கரன் (2) சோ. விஜயகுமார் (4) சோலைக்கிளி (1) ஞானக்கூத்தன் (1) டி.எஸ். எலியட் (1) டி.ஏ. பாரி (1) தாகூர் (1) தாஸ் வைத்ய் (1) தி.சோ. வேணுகோபாலன் (1) திரிகூட ராசப்ப கவிராயர் (1) தூயன் (1) தேவதச்சன் (6) தேவதேவன் (29) தேவேந்திர பூபதி (1) ந. பிச்சமூர்த்தி (1) ந. ஜயபாஸ்கரன் (1) நகுலன் (3) நித்ய சைதன்ய யதி (1) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (3) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) புதுமைப்பித்தன் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (3) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (8) மரபு கவிதை (8) மராட்டி (3) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மு. சுயம்புலிங்கம் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (17) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ரமேஷ் பிரேதன் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) ரூமி (1) ரெயினர் மரியா ரீல்க (1) லட்சுமி மணிவண்ணன் (3) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) வி. சங்கர் (2) விக்ரமாதித்யன் (12) விவாத (1) வீரான்குட்டி (3) வெய்யில் (1) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (7) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) வேணு வேட்ராயன் (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷாந்தா ஷேலகே (2) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive