மின்னற்பொழுதே தூரம் - சக்திவேல்

தேவதேவனின் புகழ்பெற்ற கவிதை ஒன்று, பின்வருமாறு தொடங்குகிறது.

அசையும்போது தோணி

அசையாதபோதே தீவு


தோணிக்கும் தீவுக்குமிடையே

மின்னற்பொழுதே தூரம்

கவிதை வாசிப்பவர்களுக்கு தெரியும், மேற்காணும் வரிகள் வாசகனின் கற்பனையின் வளத்துக்கும் வாழ்க்கையின் போக்குக்கும் ஏற்ப முடிவிலா விரியும் சாத்தியத்தை கொண்டவை என்று. அக்கவிதையின் விரிவடையும் சாத்தியத்தின் மைய அம்சம் ஒன்றுண்டு. அது அறிதலின் விந்தை. அறிவென்று இங்கு நம்மை சூழ்ந்து மாயம் காட்டும் ஒன்றின் வெளிப்பாட்டை தன் அலகால் அள்ளமுயலும் பறவையே அக்கவிதை என்று.

ஒரு நீருற்றைத் தேடி என்று தலைப்பிட்ட மனுஷ்யபுத்திரனின் பின்வரும் கவிதையை வாசித்த கணம் கல்பற்றா நாராயணனின் தொடுதிரை எனும்  கவிதை மனதில் உதித்தது. ஒரு நீருற்றைத் தேடி செல்பவன் தன் சின்னஞ்சிறு தாவரத்தின் வதங்களுக்கு வருந்துகிறான். எல்லாவற்றையும் சின்னஞ்சிறு தாவரமாக பார்ப்பதும் கடப்பாரைகளின் ஓசையுடன் மோதுவதும் இளமையின், தந்தைமையின் இயல்புகள். ஆனால் தொடுதிரையில் அப்பாவுக்கு கற்பிக்கும் ஒரு மகன் வருகிறான். நம் குழந்தைகள் நமக்கு கற்பிக்கையில் நாம் தந்தையில் இருந்து தாத்தாவாக பெருந்தந்தையாக மாற தொடங்குகிறோம். அங்கே நாம் கிணறு தோண்ட ஆட்களை கூட்டி வரும் வாலிபத்தில் இல்லை. வெறுமே பார்ப்பவராக ஒரு விலக்கத்தையும் அதனூடாக ஒரு கனிவையும் அடைகிறோம். 

எப்போதும் ஒரு கவிதை இன்னொரு கவிதையுடன் இணைவதும் நமக்கு பிடித்த கவிதை இன்னொருவருக்கு பிடிப்பதும் தேனீக்கள் தங்களுக்குள் ஆடிக்காட்டும் நடனத்தை போன்றதே. ஒரு நீருற்றைத் தேடி சென்றவன் நீரின் மேல் நடக்கும் ஏசுவை காணும் தருணம், தொடக்கத்தில் 

சொன்னதுபோல தேவதேவனின் வரிகளில் மின்னற்பொழுதேயான தூரம் அது.


ஒரு நீருற்றைத் தேடி


கிணறு தோண்ட ஆட்கள்

வந்து விட்டார்கள்


கணீரெனெ பூமியில் இறங்குகிறது

கடப்பாரையின் முதல் ஓசை


அருகே புதர்மறைவில்

அதிர்ந்து சீற்றத்துடன்

தலைதூக்கிய நாகம்

பதுங்கி மறைகிறது


எவ்வளவு பாறைகள்

மணல் துகள்கள்

சேற்றுப் படிவுகள்

நிலத்தடியில் தகிக்கும் பெருமூச்சுகள்


ஒரு நீருற்றைப் போய்ச்சேர

இவ்வளவு பிரயாசையா

என்று கேட்கும்

என் சின்னஞ்சிறு தாவரமே


நீ அறிகிறாயா

வாடி வதங்கும் உன் இலைகளின் கருமை

இந்த அந்தியை

எவ்வளவு கறுப்பாக்குகிறதென்று

- மனுஷ்யபுத்திரன்


தொடுதிரை


காய்த்துப்போன விரலிருந்தும்

எத்தனை அழுத்தியபோதும்

செயல்படவில்லை


இது தொடுதிரை அப்பா

மெல்ல தொட்டாலே போதும்

அழுத்தவே வேண்டியதில்லை

சொல்லப்போனால்

தொடக்கூடவேண்டியதில்லை

இதோ இப்படி


அவன் விரல்

நீரின்மேல் ஏசு போல

நடந்தது

அவன் விரும்பியபடி

செயல்பட்டன எல்லாம்


உலகம்

எனக்கு வசப்படாமலிருந்தது

இதனால்தானா ?

நான் தேவைக்குமேல் அழுத்திவிட்டேனா ?


என்னளவு அறிவோ ஆற்றலோ

இல்லாதவர்கள்

நான் விரும்பியவற்றை

விரும்புவதைக் கண்டு

தேவையில்லாமல் ஆற்றாமை கொண்டேன்.

எதிரிகளுக்கு

ஏன் எல்லாமே எளிதாக இருக்கிறது என்று

தெய்வத்திடம் முறையிட்டேன்


மேல்தளத்தில் 

எடையில்லாமல் நகர

என்னால் இயலவில்லை

முதல் அடியிலேயே நான் மூழ்கினேன்

பூ விரிவதை கண்டதில்லையா 

செடி அழுத்துகிறதா என்ன ?

ஆனால் நான் 

பழுதடைந்த மின்விசிறிபோல

ஓசையிட்டபடி மலர்ந்தேன்

நெற்றி வியர்வையை கொதிக்கவைத்து

என் அப்பங்களை வேகவைத்தேன்

அது ஐந்தாயிரம்பேருக்கல்ல

ஐந்துபேருக்கே போதவில்லை

என் ஏசு

அற்புதங்கள் நிகழ்த்துபவர் அல்ல

தேவைக்குமேல் சிலுவையேறியவர்


மூடிய வாசல்களை எளிதில் திறந்தவர்களை

நான் கண்டிருக்கிறேன்

வெறும் குண்டூசியால் 

பூட்டின் ஏழு தடைகளையும் திறந்த

நண்பனின் கண்களில் திருட்டுச்சிரிப்பை

நான் அறிவேன்

அசாத்தியமானதை செய்தவர்கள்

சாத்தியமானதை செய்தவர்கள்போல

பாடுபடுவதில்லை என்பதை

உணர்ந்திருக்கிறேன்

ஏமாற்றியவனை

மாயாவி என

ஊரார் போற்றுவதையும் கண்டதுண்டு

நான் கற்பாறைமேல் கட்டினேன்

இவனோ அலைநீரின்மேல்.



திறக்க 

பலமே தேவையில்லாத வாசல்முன்

ஏன் வந்தோம் என்பதையே மறந்து

நின்றிருக்கிறான் ஒரு தனியன்

மெல்ல அழுத்தினால்போதும் 

அழுத்தக்கூட வேண்ட

தொட்டாலே போதும்


சரியாகச் சொன்னால் 

தொடக்கூடவேண்டியதில்லை

- கல்பற்றா நாராயணன்


மேகத்தை தழுவி மனிதர் இறப்பதில்லை. மேகங்கள் தழுவுகையில் மனிதர்கள் இறப்பதுண்டு.

***

தேவதேவன் தமிழ் விக்கி பக்கம்

மனுஷ்யபுத்திரன் தமிழ் விக்கி பக்கம்

கல்பற்றா நாராயணன் தமிழ் விக்கி பக்கம்

***

Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

ஆகாய மிட்டாய் - கல்பற்றா நாராயணன் கவிதை

ஆகாய மிட்டாய் ந ண்பனின் மகளின் பெயர் மழை என்று தெரிந்தபோது மனம் தெளிந்தது சாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம் சற்று பிந்தியானால...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive