மூன்று சப்பாத்துகளின் கதை - மதார்


ஓடும் ஆற்றின்

இதயத் துடிப்பை அறிய

நாம் கையில்

ஒரு மீனைப் பிடிக்க வேண்டும்.


- நெகிழன்


நெகிழனின் "மூன்று சப்பாத்துகளின் கதை" கவிதை தொகுப்பு இந்த ஆண்டு வெளிவந்துள்ளது. முதல் தொகுப்பு பூஜ்ய விலாசம். தொகுப்பின் நிறைய கவிதைகளில் நெகிழன் துயரத்திடம் சேட்டை செய்கிறார். அதுவே அவரது கவிதைகளுக்கு தனியொரு நிறத்தை அளிக்கிறது. தலையைத் திருகிவிடுவேன் என்ற குரல் நெகிழன் கவிதைகளில் வன்முறையாக அல்லாமல் சேட்டையாகவே ஒலிக்கிறது. அதன் வழி நெகிழன் தன் கவிதைகளின் வழியே ஒரு விளையாட்டை நிகழ்த்திப் பார்க்கிறார். பூஜ்ய விலாஸம் தொகுப்பில் செங்கல்லை தின்னும் கவிதை முக்கியமானது. மூன்று சப்பாத்துகளின் கதை தொகுப்பிலும் குறித்து வைக்கும்படியான கவிதைகள் நிறைய உள்ளன. அவற்றில் சில

யாரும் ஏந்தாத சில விரல்கள்

ஒருநாள் மலைக்கு

தலையும் கைகால்களும் முளைத்தன

ஒரு கணம் அது

எழுந்து நின்று

கால் மடிய

தன் காலடியில் வளர்ந்த

ஒரு சிறிய செடியின் முன்

மண்டியிட்டது.

ஒவ்வொரு கையிலும்

பூக்களை விரல்களாகப் பெற்ற

அச்சின்னஞ் சிறிய செடி

மலையின் முகத்தை

ஆசையோடு வருடிவிட்டது

அப்போது உண்டான சிலிர்ப்பில்

அதுவரை

யாருமே ஏந்தாத சில விரல்கள்

உதிர்ந்தன.

***

சால்னாவின் வாசம்

மணி பத்து

எல்லோரும் தூங்கிவிட்டார்கள்

ஒன்பது வரை

சிமினி விளக்கை ஒளிரவிடும்

முனியம்மாள் கிழவி

மதியமே

மகன் வீட்டுக்குச் சென்றுவிட்டாள்

திருட்டுக் கால்களால்

மெது மெதுவாய் நடந்துவந்து

கதவைத் தட்டியது

புரோட்டாவின் சால்னா வாசம்

அது

உலகின் மிக மெல்லிய ஒலி. 

***

அதிசய மரம்

சாக்கடையோரம் கிடந்தவனை

தூக்கிச் சென்று

மரத்தடியில் கிடத்துகிறான்

தூரத்தில் நின்றுகொண்டு

போவோரிடமும் வருவோரிடமும்

சொல்கிறான்

அங்கே பாருங்கள்

அந்த அதிசய மரம்

தனக்குக் கீழே

நிறைய இலைகளையும்

ஒரு மனிதனையும்

உதிர்த்திருக்கிறது.

***

என்றாகிவிட்டது

சற்றே குரலவிழ்த்து

தேநீரில் சக்கரையில்லை என்றேன்

கோபித்துக்கொண்டு

கரும்புக் காட்டுக்குள் புகுந்துவிட்டாள்

தன்னைக் கரும்பென

நம்பிவிட்டவளை அழைத்துவர

அறுவடைக் காலம்வரை

காத்திருக்கும்படியாயிற்று

நாளடைவில்

வார்த்தைகளை

எச்சிலில் கரைக்கும் வித்தையை

கற்றுக்கொண்டேன்

இருந்தும் ஒருநாள்

மறதியாய்

குழம்பில் உப்பில்லை என்றேன்

பாவிமகள்

கடலுக்குள் இறங்கிவிட்டாள்

நீருக்கடியில் மீனென நீந்திக் கிடந்தவளை

வலை வீசிப் பிடிப்பதற்குள்

போதும் போதும் என்றாகிவிட்டது.

***

வெட்க ராணி

எனைக் கண்டதும் 

வெட்கம் ஒரு முயலாக மாறி

உன் முகத்திலிருந்து

எகிறிக் குதித்தோடுகிறது

ராணி,

உனக்கு ஆட்சேபனை இல்லையெனில்

கொஞ்சம் அமைதியாய்

இங்கேயே அமர்ந்திரு

நானதன் காதைப் பிடித்துத்

தூக்கிக்கொண்டு வந்து

உன் மடியில் போடுகிறேன்.

***

Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

ஆகாய மிட்டாய் - கல்பற்றா நாராயணன் கவிதை

ஆகாய மிட்டாய் ந ண்பனின் மகளின் பெயர் மழை என்று தெரிந்தபோது மனம் தெளிந்தது சாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம் சற்று பிந்தியானால...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive