பொருளின் பொருள் கவிதை - மா. அரங்கநாதன்

குறியீடுகளையும், படிமங்களையும் படைப்பதில் சில பல அசெளகர்யங்கள் தோன்றலாம். தன்னோடு எந்தவிதத் தகராறையும் வைத்துக் கொள்ளாத காரணத்தால் மலையும், கடலும், மலரும் கவிஞனின் செல்லக் குழந்தைகளாக ஆகிவிடுதல் வியப்பில்லாத சங்கதி.

கவிதையின் மரபு கவிதை அம்சம்தான். அதை மீறிவிட்டால் கம்பனும் கவிஞன் ஆகிவிடமாட்டான். கவிதை அம்சத்தை மீறி என்ன மரபைக் காணமுடியும்? கவிதை அம்சத்தை மீறிய ஒன்று எந்த நாளிலும் கவிதையாகிவிட முடியாது.

உரைநடை சம்பந்தமட்டில் மொழியின் உள்ளேயே தங்கிவிடுகிற நாம் கவிதையில் மொழியைவிட்டு வேறு பாதையில் ஆர்வத்துடன் ஓடுகிறோம் அல்லது ஓட்டப்படுகிறோம். கவிதை என்றும் மொழிக்கு வெளியேதான் தங்கி நின்றுள்ளது. 

மலரைப் பார்த்தபின் கவிஞன் அழகை உணரவில்லை. ஏற்கனவே உணர்ந்த ஒன்று அவனுக்கு காட்சி நிலையாக மலர் மூலம் வெளிப்படுகிறது. கவிஞனின் உணர்வுக்கு மலர் என்ன செய்யும்? 'அவன்' அழகாக இருந்த காரணத்திற்காக அவனுக்கு மலர் அழகாகத் தெரிந்தது.

உலகவியல் எல்லாமே காலத்தால் மாறி வருபவை. இன்றைய அறிவு நாளைய முட்டாள்தனமாகக் கருதப்படலாம். நல்லவை கெடுதலாகலாம். ஒரு மிருகத்தை வேட்டையாட வேண்டிய திறமை பெற்றவனைப் "புத்திசாலி" என கருதிய அன்றைய காலம் இன்று இல்லை. அறிவு சார்ந்த ஒன்று கவிதையின் இடத்தை என்றும் பிடித்துவிட முடியாது. கவிதையைப் பொறுத்தவரை கருத்து ஒரு பக்க வாத்தியமே.

படைப்பாளியின் வாழ்வுதான் படைப்பு. வாழ்வை அவன் எவ்வாறு எடுத்துக் கொண்டானோ அதைத்தான் நாம் முடிவாகக் காணமுடியும். 

கவிஞன் ஒருவனுக்குக் "கவிதை" பற்றித் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. கவிதை பற்றிய திறனாய்வு செய்த யாரும் கவிஞர்களாக இருக்க வேண்டியதும் இல்லை.

கவிதை நமக்கு இன்னொரு மொழி.

என்ன சொன்னான் என்பது கவிஞனின் பார்வையைப் பொறுத்தவரைச் சாதாரண விஷயம். கவிஞன் என்ன சொன்னான் என்பதைவிட 'ஏன் சொன்னான்' என்று கேட்பது கொஞ்சம் ஆழமானது. 

"கவிதையம்சம்" குறித்து விளக்கம் கேட்டால் "தெரியாது" என்று சொல்லும் முதல் ஆள் கவிஞன் தான். 

கருத்துப் பரிமாற்றம் என்ற சாதாரண வேலையைச் செய்ய கவிதை தேவை இல்லை. அவ்விதம் பயன்படுவதும் கவிதையாகாது.

விண்வெளிக் கலத்தைப் பற்றிய விளக்கம் தருகிற புதுமைக் கவிதையைவிட எந்த விளக்கத்தையும் தராது குறிஞ்சி மலரையும் அன்னப் பறவையையும் எண்ணங்கள் எதுவும் இல்லாது பார்த்துவிட்ட பழங்கால வெண்பாக்கள் மேல்.

எண்ணக் கட்டுப்பாடின்றி எவன் தனி மனிதனாக இருக்கிறானோ, அவன் தான் ஓர் இயக்கமாக இருக்க முடியும். கவிஞன் அப்படிப்பட்டவன்.

ஒரு கவிதையில் குழந்தையின் அழுகையை மட்டும் கேட்டு விட்டாலே போதும். அழுகையின் காரணம்- அழுகையை எவ்வாறு நிறுத்துவது, எவ்வாறு நிறுத்தப்பட்டது என்பனவெல்லாம் உரையாடல்தாம்.

உண்மையோடு உறவு வைத்துக் கொள்ளாத எதுவும் படைப்பு ஆவதில்லை. கவிஞனின் படைப்பு உண்மையைத் தவிர வேறு எதையும் கொண்டதில்லை.

பாரதிக்கு நாட்டு விடுதலை பற்றி முன்பே தெரிந்துதான் கவிதை பண்ணியிருக்கிறார் என்றால் அது அவரது அரசியல் அறிவைக் குறிக்கும். அரசியலில் அவரைவிட முதியோரும் சிறந்தோரும் அப்போது இருந்தனர். அவர்களிடமிருந்து பெற முடியாத அரசியல் தீர்க்கதரிசனத்தையா பாரதியிடம் நாடவேண்டும்? அவர்களை நாம் கவிஞர் எனக் கூறுவது கிடையாது.

பாரதி கவிதைகளில் நாம் பயன்படுத்திக்கொண்ட சீற்றத்தையும் எக்களிப்பையும் விளக்க முடியாமல்தான் அவரது அரசியல் அறிவையும் தீர்க்கதரிசனத்தையும் கூறி ஒதுங்கி விடுகிறோம்.

கவிதையில் நோக்கம் எதுவும் இருப்பதில்லை. கவிதையில் நோக்கம் என்ற ஒன்று இருந்திருந்தால் - அது நிறைவேறியவுடன் கவிதை அழிந்திருக்கும். 

உலகில் பசிப்பிணியில்லாத நிலை ஏற்பட்டுவிட்டால் பொருளாதார சம்பந்தமான நூல்கள் அனைத்தும் வேண்டாதவை ஆகிவிடலாம். அந்நிலையிலும் "இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக" என்ற வள்ளுவனின் கவிதை ஒரு கண நேரம் நம்மை அயரவைத்துவிடும். இத்தனைக்கும் பசிப்பிணி அகல செய்ய வேண்டியவை குறித்து அக்கவிதை எதுவும் சொல்லவில்லை.

கவிதையின் பயன் அல்லது கலைகளின் பயன் என்னவென்ற கேள்விக்கு வாழ்க்கையின் பயன் என்னவென்ற கேள்விதான் பதில்.

அழகு பொருந்தியது கவிதை என்று சொல்லிக்கொண்டே 'அழகு' என்றால் என்னவென்ற மிக முக்கியமானதும் நுண்ணியதுமான விஷயத்தை நாம் கவிதை விமர்சனங்களில் கோட்டை விட்டுவிடுகிறோம்.

கவிதையம்சம் என்பதிலே காரணம் எதுவும் கிடையாது.

ஒரு குறிப்பிட்ட இசைக் கருவியில் பயிற்சி பெற்ற ஒருவன் வேறொரு கருவியில் இசை மீட்ட முடியாதவனாகிறான். பண் என்னவோ ஒன்றுதான். மரபுக் கவிதையென்றும் புதுக் கவிதையென்றும் சொல்லப்படும் படைப்புகளுக்கும் இதே நிலைதான். இரண்டிலும் கவிதையம்சம் மாறுபடுவதில்லை.

எத்தனை காரணங்களால் ஒன்று கவிதை இல்லை என்று தெரிந்து கொள்கிறோமோ அத்தனைத்தூரம் நாம் கவிதையுடன் நெருங்கி விடுகிறோம்.

இறைவனே நமது மொழியில் கவிதை இயற்றியுள்ளான் என மகிழ்கிறோம். இறைவனே வந்து கவிதை யாத்தான் என்ற எண்ணம் கவிதையம்சத்தின் தோற்றமாகும்.

அந்தி வந்தடைந்த தாயையும் கன்றையும் காட்டும் கம்பன் வரிகளிலிருந்து தாய் சேய் அன்பை நீங்கள் கண்டு கொண்டாலோ, அல்லது சீவராசிகளின் அன்பை உணர்ந்து கொண்டாலோ நாம் கம்பன் கண்ட காட்சியை - அமைதியை அடையத் தடையிராது. மேற்படி வரிகளை ஆராய்ந்து கம்பன் வாழ்ந்த இடத்தில் எருமை மாடுகள் இருந்தன என்ற வரலாற்று உண்மையை கண்டுபிடித்து அதுதான் அந்தக் கவிதையின் சிறப்பு என்று கவியரங்கம் நடத்தாமலிருந்தால் போதும்.

***

மா. அரங்கநாதன் தமிழ் விக்கி பக்கம்

***

Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

ஆகாய மிட்டாய் - கல்பற்றா நாராயணன் கவிதை

ஆகாய மிட்டாய் ந ண்பனின் மகளின் பெயர் மழை என்று தெரிந்தபோது மனம் தெளிந்தது சாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம் சற்று பிந்தியானால...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive