கவிதையில் மனிதர்கள் - மதார்

இப்போதுள்ள இளம் கவிஞர்கள் கவிதையிலிருந்து மனிதர்களை வெளியேற்றுகிறார்கள் என்று ஒரு இலக்கிய நிகழ்வில் எழுத்தாளர் ஒருவர் குறிப்பிட்டு பேசினார். சைக்கிள் கமலம், என் பெயர் இந்திரஜித், சசி, சுசிலா என்று எத்தனையோ மனிதர்கள் கவிதையில் இன்னமும் வசிக்கிறார்கள். பெயர் குறிப்பிடப்படாமலும் அநேகம் பேர் உண்டு. ஆனால் தற்போதைய கவிதைகளிலிருந்து மனிதர்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள் என்ற குரலை இப்போது அதிகம் கேட்க முடிகிறது. ஒரு கவிதையில் இன்ன இன்ன விஷயங்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என்று சொல்ல முடியாது தான். ஆனால் இது ஏன் நடக்கிறது, இது ஏன் இப்படி மாறி வருகிறது என்பது குறித்த கவனிப்பு தேவையென்றே நினைக்கிறேன். காலமும், கதாபாத்திரங்களும் சிறுகதைக்கும், நாவலுக்கும் தேவையான ஒன்று. இந்த இரண்டின் காரணமாகத்தான் ஒரு கவிஞர் கதை எழுதும்போது அதிக சிரமத்தை எதிர்கொள்வார். 'எனக்கு எல்லா குழந்தையும் என் குழந்தை போலவே தெரிகிறது, இதில் எங்கிருந்து தனி கதாபாத்திரமாக அதை பிரித்து எழுதுவது' என்று நேர்ப்பேச்சில் கவிஞர் தேவதச்சன் ஒருமுறை குறிப்பிட்டார். இது கவிஞர்களுக்கே உரிய பிரச்சினைதான். சமீபத்தில் கவிஞர் விக்ரமாதித்தனின் 'தீயின் விளைவாகச் சொல் பிறக்கிறது' என்ற நவீன கவிதை குறித்த கட்டுரைத் தொகுப்பு வாசிக்கக் கிடைத்தது. அதில் 'இந்த வருடம் மழைக் குறைவு' என்ற கவிஞர் யவனிகா ஸ்ரீராம் எழுதிய கவிதை குறித்த சிறு கட்டுரை ஒன்று இருந்தது. 

இந்த வருடம் மழைக் குறைவு 


குறைந்த கூலிக்கு முந்திரிக்கொட்டை

உடைப்பவளை எனக்குத் தெரியும்

கடல்மீன்கள் விற்கும் சந்தைக்கு

வந்தால் புன்னகைப்பாள்

தூறல் நாட்களில் மரச்சாலை வழியே

குடை பிடித்துப் போகும் அவளை

ஓயாமல் காதலிக்கிறான் ஒரு குதிரைலாடம்

அடிக்கும் பட்டறைக்காரன்

லாடக்காரன் என்னுடன் மது குடிப்பான்

நீண்ட மழைக்காலத்தின் மத்தியில்

உடலுறவிற்கென ஒருமுறை அவளை அழைத்தோம்

அவள் ஆர்வத்துடன் ஒத்துக்கொண்டாள்

எருமைகளுக்கென வளர்ந்த பசும்புற் சரிவில்

பொதித்து ஈரம் பொங்க இருவரும் சுகித்தோம்

அந்தியில் கனத்த மலைத்தடத்தின் வழியே

குதிரையில் தானியப்பொதி ஏற்றிவந்த

அவள் கணவன் ஏதோ தனக்கு மகளைப்போல்

பொறுப்பற்றுத் திரிவதாய் அவளை ஏசினான்

அவளோ புன்னகை மிளிர

எங்களை சகோதரர்கள் என்று அறிமுகப்படுத்தினாள்

அவன் சில ஆரஞ்சுப்பழங்களை எங்களுக்கு

அன்பளிப்பாகக் கொடுத்தான்

இந்த வருடம் மழைக்குறைவு என்றவாறே

அவள் மயிர்க்கற்றைகளை நீவி முடிச்சிட்டான்

அவன் தோளில் சாய்ந்து அவள் விடைபெற்ற கணம்

எங்களை இருள் சூழ்ந்திருந்தது

கைகளில் பழங்கள் மிருதுவாய் இருந்தன. 


இந்தக் கவிதையில் நான்கு மனிதர்கள் வருகிறார்கள். நால்வருமே கவிதைக்குள் நிலைபெற்றுவிடுகிறார்கள். மிக எளிய சொற்களின் வழியாகவே கற்பனைக்குள் அகல விரியும் ஒரு பரந்த நிலச் சித்திரம் கிடைத்து விடுகிறது. ஒரு புனைவெழுத்தாளன் இதை ஒரு விதையாகக் கொண்டு அவனது படைப்பைப் படைக்கலாம். சினிமா கூட எடுக்கலாம். ஒன்று இன்னொன்றாகிறது. விதை தான் இந்தக் கவிதை. முக்கியமாக இந்தக் கவிதையில் மனிதர்களை வைத்து கவிஞர் எதையும் கூற முயலவில்லை. அந்த மனிதர்கள் இயல்பில் எப்படியோ கவிதையிலும் அப்படியே இருக்கிறார்கள். உயிருள்ள பாத்திரங்களாக. விதைதான் இந்தக் கவிதை.

***

யவனிகா ஸ்ரீராம் தமிழ் விக்கி பக்கம்

***

Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

ஆகாய மிட்டாய் - கல்பற்றா நாராயணன் கவிதை

ஆகாய மிட்டாய் ந ண்பனின் மகளின் பெயர் மழை என்று தெரிந்தபோது மனம் தெளிந்தது சாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம் சற்று பிந்தியானால...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive