தன்னை நிறுவுதலின் வழி - பாபு பிரித்விராஜ்

வகுப்பில் அழிக்காமல் விட்டுப்போன கரும்பலகையில் கணக்குப்பாடத்தின் முன் ஒரு காட்சிப்பொருளாய் எப்போதும் நின்றிருக்கிறேன்.

நேற்றும் புரியவில்லை,

இன்றும் புரியவில்லை.

அப்போதும் இரு இறக்கை எனக்கிருந்தது

கரும்பலகை முழுதும் வெள்ளையாகும் வரை காத்திருக்கும் காகம் போல் நினைத்துக்கொள்வேன்.

அவரவர்க்கான உலகமிது.

நானென்னை நிறுவிக்கொள்வதே முக்கியம்.

காலத்தை நினைத்தவுடன் அழிக்க இயல்வதில்லை அது நம்மை எல்லாவற்றிலும் காட்சிப் பொருளாய் கொண்டு வைக்கிறது.

ஒரு பெரிய ராட்டினத்தை கீழிருந்து அனைவரும் பார்ப்பது போல.

அதில் நாம் நம்மை நிறுவிக்கொள்ள குதூகலிக்கிறோம்,

நமது முறை வரும்போது கையசைக்கிறோம்.


யுவன் சந்திரசேகரின் இக்கவிதை என்னுடைய உலகத்தை சுழல வைக்கிறது. எல்லாவற்றையும் அவதானித்து அதற்கு ஒரு வாழ்வை தன்னிலிருந்து அளிக்கிறது இக்கவிதை 

சுவர்ப்பல்லி கீழ் விழுந்தால் நீள அகலத்திலும் மட்டுமேயான அவரது வீட்டினில் உள்ள மலை மிக ஆபத்தானதாகவும் பெரும் பள்ளத்தாக்காகவும் மாறிவிடும். நல்ல மன நிலையில் வீட்டிலுள்ளோர் இருக்கும் நேரமனைத்தும் வியந்தபடியே இருப்பது கடிகாரத்தின் சிறப்பே. கரப்பான் பூச்சியின் காமம் கவியின் நாணத்தை காட்டிச் செல்கிறது. தன்னுலகை இம்மாதிரி தொடர்ச்சிகளின் வழியே கண்டு கொள்வதே யுவன் சந்திரசேகரின் இக்கவிதை.

வட்டமாக கரையிருப்பினும் 

இளைப்பாற மட்டுமே இயலும்

நடுப்பாறையில்.

இக்கரையும் அக்கரையுமே தொடங்கி முடிக்கிறது நதியை.பின்னொரு முறை இந்தக்கவிதை கூறுவதைப்போல நுழைந்து மீண்டு அருவியென நிறுவிக்கொள்ளவும் செய்கிறது

நதி.


தீராப்பகல் தொகுப்பிலுள்ள யுவன் சந்திரசேகர் கவிதை,

  என் உலகம்

நீள அகலங்களில்

மட்டும்

உறைந்த மலையொன்று

தொங்குகிறது என்

வீட்டுச் சுவரில் திரியும்

பல்லியின் அருகே.

நேரம்  தப்பி வீடு திரும்பும்

என்னை

வியந்து வரவேற்கும்

சுவர்க் கடிகாரம்.

இணையைத் துரத்திக்

களிக்கிறது கரப்பான்பூச்சி

நான் இருப்பதன் 

கூச்சம் அற்று.

அவரவர் உலகத்தின் 

காட்சிப் பொருளாய்

நுழைந்து மீண்டு

என்னுடைய உலகத்தை

நிறுவவும்

நேர்கிறது எனக்கு.

***

இன்னொரு கவிதை,

சங்கிலி

அது ஒரு பறவையின் கதை.

இலக்கின்றிப் பறத்தலின்

கதையாக இருந்தது. அதேவேளை,

புலப்படாப் பரப்பைத்

திறந்து வைத்த காற்றின்

கதையாகவும் இருந்தது. ஆமாம்,

அப்படித்தான் இருந்தது,

சீறிவந்த அம்பு தைக்கும் வரை.

அம்பின் வேகத்தில் பின்னோக்கிப்

பாய்ந்து

வேடனின் கதையானது.

அவன் பசியின் கதையானது.

குருதி வழிய உயிர் நீங்கியபோது

முடிந்துபோன வாழ்வின் கதையானது.

அப்புறம் ஒரு முழு வாழ்வு

கதையாக மட்டும் மீந்து போனது.


பின்னர்

இதைச் சொல்லும் என் கதையானது

ஏந்தி வரும் தாளின்

கதை ஆனது.

இப்போது

வாசிக்கும் உன் கதைபோலவே

தோன்றவில்லை?!

ஓலைச்சுவடி எனும் மின்னிதழில் யுவன் சந்திரசேகரின் இக்கவிதையை வாசித்திருந்தேன். மிக மெல்லிய தங்கசங்கிலி அணிந்து கொண்டது போன்று எடையற்றதாய் இக்கவிதையிருந்தது. நேரடியாக சொல்லிச் சென்றிடினும் சங்கிலியின் பின்னல் போல் முன்னும் பின்னும் பயணிக்கிறது. காரண காரிய உலகை யதார்த்தமாக முன் வைக்கிறது.  தத்துவ தரிசனங்களையும் அது குறித்த யோசனைகளையும் இந்த சங்கிலி கவிதை உடைத்துச் செல்கிறது. இந்த வாழ்வின் தொடர்ச்சிக்கோ, முடிவுக்கோ இதன் அர்த்தம், அர்த்தமற்ற நிகழ்வுகளுக்கோ விடைதான் நாமா? அல்லது வினா நாமா? பழைய விவாதமேயாயினும் நவீனக் கவிதையின் அனுபவம் நமக்கு புதிதாக ஒன்றை உணர்த்தி விடாதா எனும் ஏக்கமே மீண்டுமீண்டும் இதைப் படிக்கத்தூண்டியது.

***

யுவன் சந்திரசேகர் தமிழ் விக்கி பக்கம்

தீராப் பகல் கவிதை தொகுப்பு வாங்க

***

Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

ஆகாய மிட்டாய் - கல்பற்றா நாராயணன் கவிதை

ஆகாய மிட்டாய் ந ண்பனின் மகளின் பெயர் மழை என்று தெரிந்தபோது மனம் தெளிந்தது சாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம் சற்று பிந்தியானால...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive