எம்.யுவன் கவிதைகள் - மதார்

யுவன் சந்திரசேகர் முதன்முதலில் எனக்கு அறிமுகமாகியது 'ஒளிவிலகல்' என்ற சிறுகதைத் தொகுப்பின் வாயிலாகத்தான். முதன்முதலில் நான் வாசித்த அவரது கவிதைத் தொகுப்பு முதல் 74 கவிதைகள். கவிதை எழுத எழுத கவிதை பற்றிய குழப்பம் அதிகமாகிறது என்கிற அவரது முன்னுரை வரியை முதலில் படித்தபோது அதிர்ச்சியாக இருந்தது. அதன் பிறகு நவீன கவிதைகள் தொடர்ச்சியாக வாசிக்க ஆரம்பித்த பிறகு அந்த வரி விளங்க ஆரம்பித்தது. தமிழ் நவீன கவிதையில் தேவதச்சன், அபி, யுவன் சந்திரசேகர், சுகுமாரன் ஆகியவர்கள் கவிதைகளின் வடிவம், கூறுமுறை ஆகியவற்றில் மிகவும் நுட்பமானவர்கள். சொல்லி வைத்தாற்போலவே அவர்கள் எழுதிய கவிதைகளின் எண்ணிக்கையும் மற்ற கவிஞர்களுடன் ஒப்பிடுகையில் குறைவானவை, ஆனால் தரம் மிக்கவை. நான் எழுதிய பழைய கவிதை ஒன்றைப் போலவே புதிய கவிதையும் எழுதப்பட்டுள்ளது எனில் அதை ஏன் வெளியிட வேண்டும் ஆகவே புதிய ஒன்றுக்காக காத்திருப்பேன் என்பதால் எனது கவிதைகள் எண்ணிக்கையில் குறைவாகத் தெரிகின்றன என்ற தொணியில் கவிஞர் சுகுமாரனின் முன்னுரை வரி ஒன்று உண்டு. வெளிப்பட்டே தீர வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்படும்போதே என் கவிதை எழுதப்படுகிறது என்று நேர்ப்பேச்சில் கவிஞர் அபி ஒருமுறை கூறியுள்ளார். அதே போல கவிஞர் தேவதச்சனும் என் கவிதைகள் என்பவை என் டயரி குறிப்புகளே என குறிப்பிட்டுள்ளார். இந்த வரிசையில் யுவன் குறிப்பிட்ட  

கவிதை எழுத எழுத கவிதை பற்றிய குழப்பம் அதிகமாகிறது என்ற வரியை பொருத்திப் பார்க்கலாம் என்று நினைக்கிறேன். ஆனால் உரைநடை எழுத்திலும் யுவனின் பங்களிப்பு அதிகம். யுவனின் முதல் தொகுப்பான முதல் 74 கவிதைகள் வெளியான போது அவர் கவிதைகள் மட்டுமே எழுதிக் கொண்டிருந்தார் என்று நினைக்கிறேன். அடுத்தடுத்த கவிதைத் தொகுப்புகளில் யுவன் உரைநடையை நோக்கி நடந்து செல்லும் தடத்தைக் காண முடிகிறது. கவிதை, உரைநடை இரண்டையும் ஒரு கவிஞன் ஒருசேர எழுதிச் செல்வது சவாலானது. கவிதையில் வார்த்தை வார்த்தையாகச் சிந்தித்தால் உரைநடையில் வாக்கியம் வாக்கியமாக சிந்திக்க வேண்டி வரும். தேவதச்சனுக்கும் அபிக்கும் கவிதையே வெளிப்பாட்டு மொழி. யுவனுக்கும் சுகுமாரனுக்கும் கவிதை, உரைநடை இரண்டும். அது ஒவ்வொரு படைப்பாளிகளையும் பொருத்தது. அந்த வகையில் எம்.யுவன் இரண்டிலுமே சிறப்பான பங்களிப்பைச் செய்தவர் ஆகிறார். 

பங்களிப்பு

இந்த வரியை

நான் எழுதும்போது

கொஞ்சப்பேர் செத்துப்போனார்கள்.

கொஞ்சப்பேர் கொல்லப்பட்டார்கள்.

சில பேர் சத்தியத்துக்காக

சிலபேர் காரணமறியாமல்.

கொஞ்சப்பேர் பிறந்தார்கள்.

சிலபேர் சாவதற்காக

சிலபேர் கொல்லப்படுவதற்காக.

மீதிப்பேர் இடைவெளியை

நிரப்பவென்று ஏதேதேதோ

செய்து விட்டார்கள்

ஒருவருமே கவனிக்காது

கடந்து போய்விட்ட நிமிஷத்துக்கு

என்னுடைய பங்களிப்பாய்

ஒரு பதினாறு வரிகள்.


விலாசம்

தீர்மானத்தின் ஆணிகள்

அறையப்படாத சவப்பெட்டி

என்று என் கபாலத்தைச்

சொல்லலாம் நீங்கள்.

ஒரு பதம் ஒரு வாக்கியம் தேடி

மொழியின் புதைமணலில்

கழுத்திறுக மூழ்கும்

முட்டாள் ஜென்மம் என்றும்.

இரவின் வைரம் விடிந்

ததும் காக்காப்பொன்னாக

மறுகும் லோபியாய்

தூண்டிமுள்ளில் மாட்டி

கூடைக்குச் சேரும் மடமீனென்று.

நழுவிப்போகும்

கணத்தின் சிலிர்ப்பை

ஒற்றை அதிர்வில் சிறைப்படுத்தும்

வீணைத்தந்தி என்று.

அல்லது

இரா.சு.குப்புசாமி,

23 செக்கடித்தெரு,

மேலகரம்,

காறையூர் (வழி)

என்று.


கொண்டுவந்த கடல்

இந்தமுறை சங்கு கொண்டு வந்தேன்

சென்ற முறை சிப்பி.

அதற்கு முன்னால் சோழி

பாலிதீன் பைகளில்

செதில் கலந்த மணலும்,

கரைக்கோயில் குங்குமமும்

கொண்டு வந்ததுண்டு.

ஒரு முறைகூட

கடலின் பரிதவிப்பை

பரிவை ஆறுதலை

கொண்டு வர முடிந்ததில்லை.

சீசாவில் கொண்டுவந்த கடற்குஞ்சு

பாதியாகிச்

செத்துக் கிடக்கிறது அலமாரியில்.


தொலைந்தது எது

தொலைந்தது எதுவென்றே

தெரியாமல் தேடிக்கொண்டிருக்கிறேன்.

தொலைந்ததின் ரூபம்

நிறம் மனம் எதுவும்

ஞாபகமில்லை.

மழையில் நனைந்த பறவையின்

ஈரச்சிறகாய் உதறித் துடிக்கும்

மனதுக்கு

தேடுவதை நிறுத்தவும் திராணியில்லை.

எனக்கோ பயமாயிருக்கிறது

தேடியது கிடைத்தபின்னும்

கிடைத்தது அறியாமல்

தேடித் தொலைப்பேனோ என்று.

***

யுவன் சந்திரசேகர் தமிழ் விக்கி பக்கம்

***

Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

ஆகாய மிட்டாய் - கல்பற்றா நாராயணன் கவிதை

ஆகாய மிட்டாய் ந ண்பனின் மகளின் பெயர் மழை என்று தெரிந்தபோது மனம் தெளிந்தது சாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம் சற்று பிந்தியானால...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive