பிறவிக்கு வெளியில் - பாபு பிரித்விராஜ்

பிறவிக்கு வெளியில்...


மீன்களும் இப்டித்தான்.

சின்னஞ்சிறு பூச்சிகள் புழுக்கள்

தன்னைவிடச் சிறிய மீன்கள்

இவை போக,

அழுக்கையும்

புசித்து உயிர்வாழும்.

பசியற்ற பொழுதில்

தூண்டில் புழு எதிர்ப்பட்டால்

அக்கரையற்றுத் தாண்டிப்போகும்.

பருவத்தே இனம்பெருக்கி

குஞ்சுகள் சூழ நடமாடும்.

உல்லாசமாய் விளையாடித் திரியும்.


அவ்வப்போது

பிறவிக்கு வெளியில் நகர்வதென

நீர்ப்பரப்பின் தரைசேர்ந்து

முகம் மலர்த்தி

செப்புவாய் திறந்து

ஆசையாய் உண்ணும்

ஒரு துளி

ஆகாயத்தை.

விளையனூர் எஸ்.ராமச்சந்திரன் எழுதிய உருவாகும் உள்ளம் எனும் புத்தகத்தை வாசிக்கும்போது அவர் அதில் கலை பற்றி கலைத்திறன் மிக்க மூளை எனும் பகுதியில் எலியின் உளவியலை  உதாரணமாக்கி ஒரு கருத்தைச் சொல்கிறார்.எலி ஒரு குறிப்பிட்ட செவ்வக வடிவத்தைப் பார்க்கும் போது அதற்கு பாலாடைக்கட்டியை உணவாகக் கொடுத்து பழக்கப்படுத்தியிருந்தால் அதே எலி சதுர வடிவைப் பார்க்கையில் ஒன்றும் கொடுக்காமல் வைத்திருந்தால் நாளடைவில் அது செவ்வக வடிவமே தனக்கு உணவு வழங்கும் ஒன்றென கண்டுகொள்கிறது.மேலும் மெல்லிய செவ்வக வடிவமோ அதை யொத்த வடிவமோ அது பார்க்கும்போது அது முன்பைவிட மேலான ஒன்றென நினைக்கிறது.அது விதிகளை செவ்வக வடிமாகவே பார்க்க விழைகிறது. இதை உச்ச இடமாற்றம்(Peak shift)என்று சொல்கிறார்.

இக்கவிதையில் நீந்தும் மீனும் உச்ச மாக  தனக்கான இருப்பிடத்தினை மீறிச்செல்கையில் கூட அதன் ஒரு துளிவழியாகவே செல்ல முடிகிறது.

ஏனெனில் அதுவே அதன் விதி. யுவன் சந்திரசேகரின் இக்கவிதை முன்வைக்கும் ஆசை தீவிரமானது. ஆசையின் துளிதான் எத்தனை பெரிது. அது தீராநதிபோல் ஆகாயமெங்கும் கங்கையென பாய்கிறது.

பிறவிக்கு வெளியே வரத்தீர்மானிக்கும் எவருக்கும் மீண்டும் இன்னொரு பிறவியே வாய்க்கிறது.பிறவியற்ற நிலையென்பது ஆசையின் ஒரு துளியெனவே கொள்ளப்படும்.

அத்தனை பெரிய ஆகாயம் ஒரு துளி  சிந்தித் தீருமாயென்ன?

தீராப்பகல் தொகுப்பிலுள்ள இன்னுமொரு கவிதை,

நடக்க நடக்கத்திறக்கிறது

பாதை.அங்கங்கே

சிந்திக்கிடக்கும் அளவில்

சிறியதும் பெரியதுமான சொற்கள்

பாதத் தோலில் கீறிவிடாமல்

பதவாகமாக நடக்கிறேன்•

கல்லுக்குக் கல் என்று

யாரோ சூட்டிய பெயரால்

குறிப்பிடுவதற்கு

சிலசமயங்களில் வசதியாக

பலசயங்களில் கூச்சமாக

இருக்கிறது.

நடக்க நடக்கத்தான் திறக்கிறது

பாதை.

ஆனால் 

எனக்கு முன்னால் பல்லாயிரம் காதம்

எனக்கு அப்பால் முடிவற்று

பாதை நீள்வதாகச் சொல்கிறார்கள்.

அது வெறும் அனுமானம்தான்

வெறும்

அனுமானம்

அனுமானத்தில் முடியுமிந்த கவிதை பிரத்யட்சமாக தன் பயணத்தையும், பாதையையும் காணும் போதே கல்லின் பெயரை கல் எனச்சொல்கையில் சுருதியாகவும் நிற்கிறது.

அறிதலின் பாதைகளை தேடிக்கொண்டும் அதே வேளையில் மூடிக்கொண்டும் போகிறது இக்கவிதை.இரண்டு முறை அழுத்திச் சொல்கிறது ஆம் வெறும் அனுமானம்தான் என.

திறக்கும் பாதைகளை மூடும் தர்க்கங்கள் வெறும் அனுமானமெனக் கொள்கவென விடுவிக்கிறது இக்கவிதை நம்மை.

***

யுவன் சந்திரசேகர் தமிழ் விக்கி பக்கம்

***

Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

ஆகாய மிட்டாய் - கல்பற்றா நாராயணன் கவிதை

ஆகாய மிட்டாய் ந ண்பனின் மகளின் பெயர் மழை என்று தெரிந்தபோது மனம் தெளிந்தது சாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம் சற்று பிந்தியானால...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive