கவிதை வாசகருடன் நேர்காணல் - மதார்

கவிஞனைப் போலவே கவிதை வாசகனும் கவிதைக்கு முக்கியமானவன். தேவதேவன் தன் கவிதையை பற்றிய நூலில் கவிஞனுக்கு இணையான பங்களிப்பை வாசகனும் கவிதையில் செய்கிறான், கவிஞன் அடைந்ததையே ஒருகட்டத்தில் வாசகனும் அடைந்துவிடுகிறான் என்கிறார். அந்த வகையில் ஒரு கவிதை வாசகன் அவன் வாசிக்கும் கவிதையை எப்படி அணுகுகிறான் என்று அறிந்துகொள்ள தீவிர கவிதை வாசகரான நெல்லையைச் சேர்ந்த ஈஸ்வரன் அவர்களுடன் எடுக்கப்பட்ட நேர்காணல் இது.

உங்களைப் பற்றி?

ஈஸ்வரன்.நெல்லை டவுண் நெல்லையப்பர் கோவில் வாசலில் ஃபேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறேன். வாசகன்.

வாசிப்பில் ஆர்வம் எப்படி? எழுதுவது உண்டா?

எழுதுவது இல்லை. வாசிப்பை விரும்பி செய்கிறேன்.குடும்பச் சூழலால் படித்து முடித்தவுடனேயே தொழிலில் ஈடுபட ஆரம்பித்துவிட்டேன். 

வாசிப்பு என்ன தந்தது?

என்னைத் தவிர எல்லாருமே உலகில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நான் மட்டுந்தான் இப்படி இருக்கிறேன் என்ற தாழ்வுணர்ச்சி அடிக்கடி எழுந்தது. அதிலிருந்து என்னை மீட்டு வெளியே கொண்டு வர புத்தக வாசிப்பு உதவியது. 

எனது நண்பர் உமாபதி தான் புத்தகங்களை முதன்முதலில் எனக்கு அறிமுகம் செய்தார். அதன்பிறகு தீவிரமாக வாசிக்க ஆரம்பித்தேன். வாசிக்க வாசிக்க இந்த உலகம் பிடிபட ஆரம்பித்தது. நாம் மட்டுமே துன்பத்தில் இல்லை மொத்த உலகமும்/மனிதர்களும் சதா ஏதோ வலியில் உழல்பவர்கள் தான் என்ற உண்மை விளங்க ஆரம்பித்தது. அதை எப்படிக் கடப்பது என்ற மனபலத்தையும் பக்குவத்தையும் வாசிப்பே எனக்குத் தந்தது.

வாசகனாக எப்போதும் மனநிறைவுள்ளவனாக இருக்கிறேன். அதை பெருமையாகவும் கருதுகிறேன்.

தமிழ் இலக்கியச் சூழலில் கவிதை வாசகர்கள் சிறுகதை நாவல் வாசகர்களை விட குறைவாகத்தான் உள்ளனரா? 

கவிதை வாசிப்பு எதார்த்த வாழ்விலிருந்து பிரித்து விட்டேந்தி மனநிலையை அளிக்கும் என்ற தவறான கண்ணோட்டமே காரணம் என்று நினைக்கிறேன். பொதுவாகவே கவிதை வாசிப்பை சவால்களை எதிர்கொள்ளும் மனோதிடம் தரும் ஒன்றாகவே நான் பார்க்கிறேன். துன்பமும் சரி இன்பமும் சரி நம் மனநிலையைப் பொறுத்து அமைவதே. 

இந்த நெருக்கடிகளிலிருந்து விலக்கி என்னை இலகுவாக்குவதையே நான் கவிதையாகப் பார்க்கிறேன். நூறு பக்க நாவலோ இருபது பக்க சிறுகதையோ தரும் வாசிப்பனுபவத்தைக் காட்டிலும் ஐந்து வரி கவிதை தருகின்ற அனுபவமும், புத்துணர்வும் அலாதியானது. முதன்முதலாக உலகுடன் அறிமுகப்படும் குழந்தையின் பரவசத்தை கவிதை எனக்கு அளிக்கிறது. அது என்னை நாள் முழுவதும் பொழிவோடும் எனது லெளகீக வேலையை மிகுந்த ஈடுபாட்டோடும் செய்யத் துணைபுரிகிறது. உலகிலிருந்து என்னைத் தனிமைப்படுத்தாமல் உலகோடு இணைந்து செயல்படவும் உலகை மேலதிகமாக புரிந்துகொள்ளவும் கவிதை உதவுகிறது.

பிடித்த அல்லது அடிக்கடி நினைத்துப் பார்க்கும் கவிதை வரிகளைக் குறிப்பிட முடியுமா? 

ஒன்று இரண்டு என்று குறிப்பிட முடியாது. வரிகளை மட்டும் சொல்வது சரியாக இருக்குமா எனவும் தெரியவில்லை. ஏனெனில் ஒரு கவிதையின் வரி அதன் முன் பின் உள்ள மொத்த கவிதையோடும் இயைந்து பொருள்பட வேண்டியது. உதாரணத்திற்கு பாரதியின் 'வீழ்வேனென்று நினைத்தாயோ' என்ற வரி. தேடிச் சோறு நிதம் தின்று என ஆரம்பிக்கும் அந்தப் பாடலில் வீழ்வேனென்று நினைத்தாயோ வைத் தாண்டியும் கவிதை நீளும். அதில் பராசக்தியிடம் பாரதி வரம் கேட்பார். பொதுவாகவே இதிகாசங்களில் புராணங்களில் வழங்கப்படும் வரங்களில் ஒரு சூசகம் இருக்கும். பாரதியோ 'நின்னைச் சில வரங்கள் கேட்பேன்

அதை நேரே எனக்குத் தருவாய்' 

என்கிறார். நான் என்ன கேட்கிறேனோ அதை நேரடியாக எனக்குக் கொடுத்துவிடு என்கிறார். பிரபஞ்சத்திடன் நானும் அதையே தான் கேட்கிறேன். கடந்தகாலம், எதிர்காலம் என்று எந்த ஊடுருவலும் இல்லாமல், முன்வினைப் பயன், கர்மா என்று எதையும் காரணம் சொல்லாமல் இப்போது எனக்கு என்ன வேண்டுமோ அதை எனக்குக் கொடு என்றே நானும் பிரபஞ்சத்திடம் கேட்கிறேன். ஒரு தெளிவைத் தரும் பாரதியின் நல்ல கவிதை. விக்ரமாதித்தனின் 

"கரடியே சைக்கிள் ஓட்டும்போது 

நாம் ஏன் வாழ்க்கையை"

என்ற கவிதையும் அடிக்கடி மனதில் எழும். வண்ணதாசனின் அகம் புறம் என்ற கட்டுரைத் தொகுப்பில் ஒரு பகுதி வரும். வழக்கமாக நாம் வானவில்லை அண்ணாந்து பார்ப்போம். அந்தக் கட்டுரையிலோ பொதுக் கழிவறைக்குச் செல்லும் தண்ணீர் குழாய் உடைந்து கசியும் தண்ணீரில் சூரிய ஒளி பட்டுத் தெரியும் வானவில் என்பது போல ஒரு வரி வரும். அதைப் படித்தவுடன் அது தந்த மனக்கிளர்ச்சியும் வார்த்தைகளில் விவரிக்க முடியாதது. இவை யாவுமே நம்மைச் சுற்றியிருக்கும் ஒவ்வொன்றிலும் கவிதைத் தருணங்கள் ஒளிந்திருப்பதை திரும்பத் திரும்ப நமக்குச் சொல்கின்றன. அதே போல் இன்றைக்கும் நான் படித்து வியக்கும் கவிஞர்களில் ஒருவர் பிரமிள். இன்னும் நிறைய பேரைச் சொல்லலாம். பெருந்தேவியின் கவிதை என்ன செய்யும் என்ற கவிதையும் மிகவும் பிடித்தமானது. 

அறிந்ததுதான்

அதனால் எந்த வழக்கமான 

அற்புதத்தையும் நிகழ்த்த முடியாது

தண்ணீரை ஓயின் ஆக்குவதோ

வானத்திலிருந்து வெட்டுக்கிளிகளைச் சொரிவதோ

இருக்கட்டும் அதனால் கைக்கெட்டிய தூரத்தில் 

ஒரு சாதாரணக் கதவைக்கூட 

திறந்துவிட  முடியாது

ஒருவருக்குப் பைத்தியம் பிடிப்பதை

நிறுத்த முடியாது

ஒரு பிடிவாத முகத்தில்

சின்ன புருவத் தூக்கலைக்கூட

உருவாக்க முடியாது

முக்கியமாக 

அதனால் எந்தத் துரதிர்ஷ்டத்தையும்

தாமதிக்கச் செய்ய முடியாது

வாழ்க்கையின் பொருள்

ஒன்றும் செய்ய முடியாதது என்கிறபோது

இதில் வியப்படைய எதுவுமில்லை

ஆனால் கவிதை ஒன்றைச் செய்கிறது 

ஒரு மன இருளிலிருந்து

இன்னொரு மன இருளுக்கு

இன்னொரு மன இருளுக்கு

சில சொற்களை 

முத்தமிட்டுப் பறக்கவிடுகிறது


எதையும் காப்பாற்றி வைக்க முடியாதபோது

கவிதை கைதூக்கி ஆசிர்வதிக்கிறது

புதிய செல்லாக் காசுகளால்.

கவிதை வாசிப்பில் உள்ள சவால்கள்?

ஒரு நெருக்கடி காலத்தில் திருச்சி செல்ல வேண்டிய சூழல். அப்போது நெல்லை ஜங்சனில் செல்வம் கிளாசிக்ஸ் கேசட் கடை இயங்கி வந்தது. அதன் முகப்பில் புத்தகங்கள் விற்பனைக்கு வைத்திருந்தனர். அதில் சூன்யப் பிளவு என்று ஒரு கவிதைப் புத்தகம் இருந்தது.எழுதியவர் பெயர் கைலாஷ் சிவன் என்று இருந்தது. என் சட்டைப் பையில் இருந்ததோ வெறும் இருபது ரூபாய். என் அதிர்ஷ்டமோ என்னவோ புத்தகத்தின் விலையும் இருபது ரூபாயாக இருந்தது. பேருந்தில் ஏறி புத்தகத்தில் நான் படித்த முதல் வரி

"மேல் நோக்கும் விதானமெல்லாம்

ஒளித் துவாரங்கள்" 

முதல் வாசிப்புக்கு புரியவில்லை. பின்பு நிறைய தீவிர இலக்கிய நூல்கள் படிக்க ஆரம்பித்த பிறகு கவிதைகள் விளங்க ஆரம்பித்தன.

"மேல் நோக்கும் விதானமெல்லாம்

ஒளித் துவாரங்கள்" 

ஒரு நாள் மொட்டை மாடியில் இதை நேரிலேயே கண்டபொழுது இந்தக் கவிதை என்னுள் ஆழப் பதிந்தது. 

படைப்பாளிக்கும் வாசகனுக்கும் கவிதை ஒன்றா?

படைப்பாளிக்கு எப்படியோ வாசகனாக எனக்கு கவிதை எப்போதுமே அற்புதம் தான். சில சமயங்களில் தண்ணீர் அருந்தும்போது திராட்சை ரசம் அருந்துவது போல ஏதோ அற்புதம் ஒன்று நிகழ்வது போலத் தோன்றியிருக்கிறது. ஒரு நல்ல கவிதையைக் கேட்டு உம்மனாமூஞ்சி கூட புருவம் தூக்குவதை பார்த்திருக்கிறேன். 

புனைவு வாசிக்க ஆரம்பித்து பிறகு கவிதைகளை வாசித்தீர்களா? அல்லது எடுத்தவுடனேயே கவிதை வாசிப்புதானா? 

ஆரம்பத்தில் எது கிடைக்கிறதோ அதை வாசித்துக் கொண்டிருந்தேன். கவிதைக்குள் செல்ல சற்று நேரம் பிடித்தது. கவிதையிலும் வானம்பாடி பாணி கவிதைகளிலிருந்து தீவிர நவீன கவிதைகளுக்குள் பிரவேசிப்பதில் இன்னுமே நேரம் எடுத்தது. அது கொஞ்சம் வாசிப்பில் உழைப்பைக் கோருவது. வாசகப் பங்கேற்பையும் முக்கியமாகக் கருதுவது.நம்மைக் காலியாக வைத்துக் கொண்டு வாசிக்கும்போதே நவீன கவிதை நமக்கு விளங்க ஆரம்பிக்கும். 

தினசரி நெருக்கடியில் வாசிக்க முடியாமல் போகும்போது கூட தினமும் இரவு தவறாமல் ஒரு கவிதைத் தொகுப்பை எடுத்து அதன் சில கவிதைகளையாவது வாசித்து விடுவேன். அந்த ஒரு கவிதை ஒரு நாளுக்குப் போதுமானது, பெறுமதியானது. 

புனைவில் கிடைக்காத எது கவிதையில் கிடைக்கிறது? கவிதையில் கிடைக்காத எது புனைவில் கிடைக்கிறது? 

கவிதை எனக்குச் சிறகுகளைத் தருகிறது. பறக்க வைக்கிறது. நிலத்தில் காலூன்றச் சொல்லித் தருவது புனைவு என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன். இரண்டும் இருப்பதால் ஒரு சமன்பட்ட நிலையை அடைவதாக உணர்கிறேன். 

கவிதையிலும் கால் ஊன்றும் தருணங்கள் உண்டுதானே? புனைவில் கூட பறக்கும் தருணங்கள் வாய்க்கும் அல்லவா? 

அப்படியும் இருக்கலாம். அப்படி இருக்கும்போதும் அவை நம்மை சமன்படுத்துகின்றன.

சிறுகதை/நாவல்களில் கவித்துவமான பகுதிகள் இருக்கும் அல்லது கவித்துவ நடையிலேயே எழுதப்பட்டதாக இருக்கும். அதை வாசிப்பதற்கும் தனியாக ஒரு கவிதையை வாசிப்பதற்கும் என்ன வேறுபாட்டை உணர்கிறீர்கள்? 

உரைநடையில் நிறைய கவித்துவமான வரிகள் இருக்கலாம். யுவன் சந்திரசேகரின் ஒரு நாவலில்

"கழுகுக்குச் சாலையாகும் காற்று" 

என்று ஒரு வரி வரும்.

ஜெயமோகன் எழுதிய ஒரு கதையில் மரத்தைப் பற்றி வரும் ஒரு வரியில் இருந்த இடத்திலேயே தன் இருப்பை வாசனை மூலம் வெளிபடுத்தும் என்று எழுதியிருப்பார். இதுபோல் எண்ணற்ற உதாரணங்களைக் கூறலாம். ஆனால் அவையாவுமே அதற்கு முன்னும் பின்னும் உள்ள வரிகளுக்கு ஒரு பொழிப்புரையாக வருபவை. அதற்கும் முன்னும் பின்னும் ஒரு சூழல் இருக்கும். அதற்குள் ஒரு அர்த்தமாக அந்த வரி அமையும். அந்த அர்த்தத்தைத் தாண்டிச் செல்வதற்கான சாத்தியக்கூறுகள் அதில் குறைவு. ஆனால் கவிதை அப்படி அல்ல. அது எல்லைகள் அற்றது. இன்று ஒரு அர்த்தம் புரியும் அதுவே நாளை வோறொன்றாகத் தெரியும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி புலப்படும். எனவே உரைநடையில் வரும் கவித்துவமான வரிகள் எப்போதும் ஒரு கவிதைக்கு ஈடாகாது. அதனால்தானோ என்னவோ சிறுகதையாசிரியர்கள், நாவலாசிரியர்கள், கட்டுரையாளர்களை மொத்தமாக எழுத்தாளர்கள் என்கிறோம். கவிஞர்களை மட்டும் சிறப்பாக கவிஞர்கள் என்கிறோம். ஒரு மொழியின் உச்ச பட்ச வெளிப்பாடு கவிதைதான். 

கவிதை வாசிப்பு போல கவிஞர்களை நேரில் சந்தித்து உரையாடும் பழக்கம் உண்டா? 

மிகவும் குறைவுதான். வாசிப்பு மட்டுமே போதும் என்று கருதுகிறேன். நேரில் சந்திக்கும்போது அந்த படைப்பாளி குறித்து அப்போது ஏற்படும் பிம்பம் நாம் அடுத்து வாசிக்கவிருக்கும் அவரது படைப்பில் படிந்து வாசிப்பில் முன் முடிவுகளை எடுக்க வைத்துவிடுமோ என்ற ஐயத்தில் நேர் சந்திப்புகளை பெரும்பாலும் தவிர்த்து விடுகிறேன்.சந்திக்கும் வாய்ப்பு அமைந்தாலும் தவிர்ப்பதில்லை. மெனக்கெட்டு போய் சந்திப்பது குறைவு.  எல்லோரும் அப்படி இருக்க வேண்டியதில்லை. எனக்கு வாசித்து இருக்கவே பிடித்திருக்கிறது. 

தனிப்பட்ட தேர்வில் உங்களுக்கு விருப்பமான கவிதை பாடுபொருள் எது? 

எல்லாமே. 

கோட்பாட்டு ரீதியில் படைப்புகளை அணுகுவதில் எனக்கு உடன்பாடில்லை. எனது தேர்வு எனக்கு பிடித்தமானது என்பதைத் தாண்டி இன்னொருவரின் தேர்வும் முக்கியமானது. இன்று முக்கியமில்லாதது நாளை முக்கியமாகலாம். இன்று கொண்டாடப்படுவது நாளை காணாமல் போகலாம். அதே போல எனது கருத்துகளை இன்னொருவர் மேல் திணிப்பதும் தவறு. அவரவர்க்கு அவரவர் தேர்வு. அவரவர் வாசிப்பு. அவ்வளவுதான்.

உங்களது பார்வையில் எது நல்ல கவிதை? 

என்னை ஒரு Universal Man ஆக உணர வைப்பது. 

நல்ல வாசகர்கள் எழுத்தாளர்களாக, கவிஞர்களாக ஆகியிருக்கிறார்கள். நீங்கள் எப்படி? 

சில பாடுபொருட்களில் எழுதிப் பார்த்ததுண்டு.ஆனால் அதற்கு நானே கடும் விமர்சகனாக இருந்துவிடுகிறேன். அது ஒரு தவறான மனநிலை என்று நிறைய பேர் என்னிடம் கூறியிருக்கிறார்கள். நாம் எழுதுவதை பெரும் எழுத்தாளர்கள் எழுதுவதோடு ஆரம்ப காலகட்டத்தில் ஒப்பிடக்கூடாது என்பார்கள். ஆனால் எழுதுவது நிறைவளிக்காத போது அதை எப்படி அச்சுக்கு அனுப்ப? அதில் பெரிய வருத்தம் ஒன்றும் இல்லை. ஒருவேளை பின்னால் எழுதலாம், எழுதாமலும் போகலாம். ஆனால் எழுதுவதில் கவிதை எனக்கான தளம் அல்ல. வாசகனாகத் தொடரவே விரும்புகிறேன்.

***

Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

ஆகாய மிட்டாய் - கல்பற்றா நாராயணன் கவிதை

ஆகாய மிட்டாய் ந ண்பனின் மகளின் பெயர் மழை என்று தெரிந்தபோது மனம் தெளிந்தது சாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம் சற்று பிந்தியானால...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive