தேவதேவனின் தோள்பை - ஜி.எஸ்.எஸ்.வி. நவின்

எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு முறை விளையாட்டாக சொன்னார், “தேவதேவனுக்கு உலகிலுள்ள அனைத்து பொருட்களும்/விஷயங்களும் கவிதைகான படிமம்” என்று. வேடிக்கையாக சொல்லப்பட்ட வரி என்றாலும் அதில் எத்தனை உண்மை உள்ளது என யோசித்துப் பார்க்கிறேன். தேவதேவன் எழுதி தீராத ஒரு படிமம் அவரது வீடு. 

“நெருக்கடியுள் நெரிந்து அனலும் காற்று 

என்ன செய்ய 

இந்த வீட்டை நான் இன்னும் விட முடியவில்லை” 

வேறொரு கவிதையில் உனது வீட்டை கடந்து செல்லும் மேகங்கள் உன்னை தீண்டியதில்லையா? என எழுதியிருப்பார். இப்படி எண்ணற்ற கவிதை அவருள் வீட்டை படிமமாக்கிக் கொண்டே இருக்கும். காரணம் தூத்துக்குடியில் அவர் கட்டிய வீட்டை தேவதேவன் உயிருள்ள மனிதர்களைப் போல் நேசித்தார். இப்போது பெங்களூரில் மகன், மகள் வீட்டில் வசிக்கும் போது கூட அவர் பேச்சில் தூத்துக்குடி வீட்டைப் பற்றிய நினைவுகளும், ஏக்கங்களும் வந்துக் கொண்டே இருக்கும். அவரது மணி நகர் வீடு என்பது அவருடன் வாழும் இன்னொரு துணைவன். அதனுள் உள்ள ஒவ்வொரு பொருளையும், செடிகளையும் நேசிப்பவர். 

அவருக்கு உலகிலுள்ள அனைத்தும் அவருள் ஒரு அங்கமாக மாறிவிடும். அனைத்தையும் தன்னிலிருந்தே விரித்துக் கொள்பவர் தேவதேவன். அனைத்தையும் வியக்கும் சிறுவனின் பார்வை அவருடையவை எனச் சொல்லலாம். ஒரு கவிதையில் வீட்டில் ஆய்ந்துக் கொண்டிருக்கும் மெஜெந்தா நிற பட்டர் பீன்னீஸ்களை வியந்துக் கொண்டிருப்பார். ஏனென்றால் தேவதேவனுக்கு அனைத்து பொருட்களும் இயற்கையின் அம்சம் கொண்டவை. இயற்கையின் உன்னதமான அன்பை தன்னுள் தாங்கி நிற்பவை. தேவதேவனின் கவிதைகளில் மட்டுமே வண்ணத்துப்பூச்சி ஒன்றின் சிறகடிப்பில் காற்று தன் அலுப்பை நீக்கிக் கொள்ளும். 

எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார் தேவதேவன் அசைவ வெறுப்பாளர் மட்டுமல்ல, அசைவங்களை சாப்பிடுபவரையும் வெறுப்பவர் என்று. அதிலுள்ள ஆன்மீகமான கோபம் என்ன அவருடைய கவிதைகளை படிக்கும் போது புரிகிறது.

தேவதேவனின் ‘அவள் தன் தோள்பையை’ கவிதையில் வரும் தோள்பை என்பது தேவதேவன் உடலில் ஒரு அங்கமாகி போன அவரது தோள்பையே. அதில் கவிஞன் கண்டடைந்த அமைதியை. மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய அமைதியை நோக்கி தோள்பை வழியாக அக்கவிதை விரியும். எனினும் அவரது தோள்பை சிறப்பாக வந்த கவிதை என்பது “தோள்பை” கவிதையிலே. 

தனித்தோ, பிரித்தோ, விளக்கியோ சொல்லி விட முடியாதது குழந்தையின் அன்பு. அந்த குழந்தையின் பேரன்பு எங்கே அன்னையின் பேரணைப்பாக மாறுகிறது. தேவதேவனின் தோள்பை கவிதையில் அந்த பை அவர் உலகின் அனைத்தையும் தாங்கி நிற்கிறது. அவர் அதனை தாங்கிக் கொள்கிறார் என்ற முரணில் இருந்து இந்த ‘குழந்தையாய் வந்த பேரன்னை!’ என்ற முரணும் அர்த்தம் கொள்கிறது. அந்த தோள் பை அவருக்கு வெறும் சுமைதூக்கியாக இல்லை. வெறும் பொருளாகவும் இல்லை. அது அவர் உலகின் அனைத்தையும் தாங்கி நிற்கிறது. 

ஓடும் ரயிலில் எனத் தொடங்கும் இக்கவிதையின் இரண்டாவது வரியே அவன் மடியில் தலைவைத்து அமர்ந்திருந்தது ஒரு தோள்பை என ஒரு புகைப்பட சித்திரம் போல் ஆகிறது. தேவதேவன் இக்கவிதையில் அத்தனை பெரிய ரயிலில் அந்த மனிதனைக் கூட கவனம் செலுத்தவில்லை. அவன் மடியில் அமர்ந்திருக்கும் தோள்பையின் சித்திரம் மட்டுமே நமக்கு அளிக்கிறார். ஒரு காட்சி சித்திரம் போல். அந்த தோள்பை அந்த மனிதனுக்கு அந்நியமானது. அந்த மனிதன் அதனை தாங்கிச் செல்கிறான். முதலில் அவன் மடியில் அமர்கிறது, பின் அங்கிருந்து சிறிது சிறிதாக விலகிச் சென்று அருகில் இருக்கிறது. பின் மீண்டும் பழைய நிலைக்கே ஆனால் இன்னும் நெருக்கமாக, இன்னும் அன்னோயமாக. 

நம் வாழ்வில் நம் அகத்தோடு இத்தகைய நிலையை நாம் கடந்திருப்போம். நம் மனது நமக்கான அனைத்தையும் தனக்குள் தாங்கிக் கொள்கிறது. நாம் அதனை தாங்கிக் கொள்கிறோம். ஒரு உடன்படிக்கை தான் என்றாலும் அதில் எப்போதும் பேரம் நிகழ்ந்துக் கொண்டே இருக்கிறது. அதனால் இரண்டின் உறவில் எப்போதும் மாற்றம் நிகழ்ந்துக் கொண்டே இருக்கிறது. சில சமயம் நெருக்கமாக இருக்கலாம் சில சமயம் விலகலாக இருக்கலாம். ஆனால் தேவதேவனுக்கு எல்லாம் அன்பை சொல்லும் பாஷைகள் தான்.

அந்த விளக்க முடியாத, பிரிக்க முடியாத அன்பே தேவதேவன் கவிதையின் அடிநாதம். அந்த விளக்கமுடியாத ஒன்றை சுமக்க இங்கே தோள்பை வருகிறது. தேவதேவன் உலகில் உயிருள்ளவை உயிரற்றவை என்ற பேதம் ஏது? அனைத்தும் அன்பை சொல்லத்தர தானே பூமியில் பிறப்பெடுத்துள்ளது.


தோள் பை

ஓடும் ரயிலில்

அவன் மடியில் தலைவைத்து

அமர்ந்திருந்தது

ஒரு தோள் பை.

அடக்கமான

அய்ந்து திறப்புவாய்கள் அதற்கு.

அவனுடையன

எல்லாவற்றையும் சுமந்துகொண்டு

தன்னையே அவனைச் சுமக்கச் செய்யும்

பேரறிவன்!

 

குழந்தையாய் வந்த பேரன்னை!

 

மடியில் அவன் கையடங்கலுக்குள்

அது சாய்ந்து படுத்திருப்பதைப் பாருங்கள்!

என்ன ஒரு உறவு அது!

தீண்டும், வருடும்,

அவன் விரல்களில் பூக்கும் மகரந்தங்களும்

விழிகளில் ததும்பும் கண்ணீருமாய்!

இத்துணை அமைதியும் அன்பும்

ஒழுக்கமும் உடைய உயிர்கள் இருக்கத்தானே செய்கின்றன இவ்வுலகில்.

 

அருகில் வந்து அமர்ந்தவன் இடித்து

இடைஞ்சலிக்காமல் இருக்கும்படி

அதனை மேலும் நெருக்கமாய்த் தனக்குள்

இழுத்து அணைத்துக்கொண்டான் அவன்.

தனக்குப் பாதுகாப்புத் தரும் உயிரைத்

தான் பாதுகாக்கும் முறையோ அது, அல்லது

அருகிலமர்ந்த அந்த மனிதனுக்காகவோ?

விளக்கிச் சொல்லத்தான்,

பிரித்துச் சொல்லத்தான்,

சொற்களாலே சொல்லிவிடத்தான்

முடியுமோ இந்த அன்பை!

***

தேவதேவன் தமிழ் விக்கி பக்கம்

***

Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

ஆகாய மிட்டாய் - கல்பற்றா நாராயணன் கவிதை

ஆகாய மிட்டாய் ந ண்பனின் மகளின் பெயர் மழை என்று தெரிந்தபோது மனம் தெளிந்தது சாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம் சற்று பிந்தியானால...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive