வீரான்குட்டி கவிதைகள் 1 - ப. தாணப்பன்

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் நாராயங்குளத்தில் பிறந்த வீரான்குட்டி மடப்பள்ளி அரசுக் கல்லூரியில் மலையாளத் துறைத் தலைவராக பணியாற்றி வருகிறார். இவரது முதல் கவிதை தொகுப்பு ஜல பூபதம் 2001ல் வெளிவந்தது. தொடர்ந்து 'தொட்டு தொட்டு நடக்கும் போழ்', 'வீரான் குட்டிக் கவிதைகள்',  'நிசப்தத்துடே ரிபப்ளிக்', 'நதியன்' ஆகிய தொகுதிகள் மலையாளத்தில் வெளிவந்துள்ளன. இவருடைய கவிதைகள் ஆங்கிலம், தமிழ், அரபி, ஜெர்மன், ஹிந்தி, கன்னடம், மராத்தி போன்ற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. கவிதைக்கான கேரள சாகித்ய அகாடமி விருது பெற்றிருக்கிறார் இவர்.

எப்போதுமே நம் மனதிற்கு நெருக்கமானவை கவிதைகள் வீரான் குட்டி கவிதைகள். அவை படிவங்களைக் கொண்டிருக்கின்றன. எளிய சொற்களின் வழி உருவாகும் ஆழமான படிவங்கள், உணர்வுகளிலும் பெருவெடிப்புகள் ஏதுவற்ற எளிய உணர்வுகள் இவற்றை தாங்கி நிற்கின்றன இவரது கவிதைகள். இதனாலேயே இவரை படிமங்களின் கவிஞர் என்று கூறலாம் என்று தன்னுரை தந்திருக்கின்றார் மொழிபெயர்ப்பாளர் சுஜா.

அவர் குழந்தையாகவே நீடிக்கும் கவிஞர். காட்சிகளிலிருந்து அக்காட்சியாகத் திரண்ட பிரிதொன்றை நோக்கிச் செல்லும் ஒரு பயணம் அவரில் நிகழ்கிறது. அதுவே அவருடைய படிம வெளிப்பாடாகிறது என்று ஜெயமோகன் 'எளிமையெனும் எனும் விடுதலை' எனும் தலைப்பில் வாழ்த்துரை தந்திருக்கின்றார்.

கேள்

கல்லிடம் கேள் 

எவ்வளவு காத்திருந்து 

ரத்தினமாகியதென

நீர்த்துளியிடம் விசாரி 

எத்தனை காலக் காத்திருப்பு முத்தாவதற்கென 

உதடுகள் இருந்திருந்தால் 

அவை சொல்லியிருக்கும்:

அன்புடன் ஒரு கை தொடுவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம்

என்று ஆம். ரத்தினமாவதற்கும் முத்தாவதற்கும் எவ்வளவு காலங்கள் காத்திருக்க வேண்டி இருக்கும் என்று உதடுகள் இருந்தால் சொல்லியிருக்கும் என்று சொன்ன அவர், அன்போடு ஒரு கை தொடும் அந்த நேரமே அவை நிகழ்ந்து விடும் என்று வாஞ்சையுடன் வருடி விடுகிறார்.

ரூமிக்கு

காயங்கள் பட்டாலென்ன உதடுகளுடன் 

எப்போதும் வசிக்க முடிந்ததல்லவா? 

புல்லாங்குழல் பாடுகிறது

மூங்கிலில் துளையிட்டு புல்லாங்குழல் உருவாக்கப்படுகிறது என்பதனை நாம் அறிவோம். அந்த மூங்கிலில்  துளை இடுவதென்பது ஒரு தனி கலை.  தேர்ந்த மூங்கில் எடுத்து அதில் லாவகமாக துளையிட்டு புல்லாங்குழலாக்குவர். இத்தகைய காயங்களை தாங்கிய அது நம்முடைய உதடுகளுடன் எப்போதும் வசிக்க முடியுமா? அந்த வலியினைத் துறந்து ஆனந்தமாக பாடுகிறது புல்லாங்குழல் என்கிறார். வலியையும் ஆனந்தத்தையும் ஒரு சேர கூறுவதில் வீரான்குட்டி நம்மை ஆள்கிறார்.

பிடியில்

உறைந்து கட்டியாகிய 

தண்ணீரில் இருந்த 

மீன்குட்டியை 

சூரியன் வந்து திறந்துவிட்டது. 

திரும்பிப் போகையில் 

தண்ணீர் சூரியனோடு போய்விட்டது 

இனி அந்தக் குட்டியை 

யார் கவனிப்பார்?

தண்ணீரைக் கூட சல்லடையில் அள்ளலாம் அது பனிக்கட்டியாகும் வரை பொறுத்திருந்தால் என்பார் வைரமுத்து. இங்கே உறைந்து கட்டியாக இருக்கின்ற தண்ணீரின் உள்ளே உறைந்த மீன் குட்டியை சூரியக்கதிர்கள் விலக்கி அதனை நீந்த விடுகிறது. சூரியன் தன் கடமையை முடித்து திரும்பிப் போகையில் அந்த தண்ணீர் வெம்மையை இழந்து மீண்டும் குளுமைக்கு மாறி விடுகிறது. இப்போது மீண்டும் மறைந்து போன அந்த மீன்குட்டியை யார் கவனிப்பார்? என்று கவலை கொள்ள வைக்கிறார். இது அழகியலோடு இணைந்த நுட்பமான படிமம் சார்ந்த கவிதை.

வீணாக 

சுயரூபம் 

நீட்டியும் 

குறுக்கியும் ஆடும் 

நிழலின் 

விளையாட்டை 

அற்பமாக 

நினைக்க வேண்டாம் 

எப்போதும் 

ஒருவனின் 

கீழேயே 

இருக்க வேண்டி வந்ததன் துக்கத்தை 

மறப்பதற்கு 

அது 

முயற்சி செய்து கொண்டிருக்கலாம்

வெயிலில் நாம் போகும் போது. நம் நிழல், நம் அசைவிற்கேற்ப நீண்டும், குறுகியும், ஆடி அசைந்தும் போவதுண்டு. அந்த நிழலை கண்ணுற்றவர் எப்போதும் தமக்கு கீழேயே அது இருக்கிறதே என்று ஏங்கி அதன் துக்கத்தை நீக்குவதற்காக அது முயற்சி செய்கிறது என்று தேற்றுகிறார். இது ஒரு படிம நிலைக் கவிதை. மனித வாழ்வியலோடு இதனை பொருத்திப் பார்த்தால் எப்போதுமே நாம் கீழே இருக்க வேண்டிய நிலையிலேயே இருப்போமோ என்பதை துறந்து முயற்சி செய்தால் மீண்டு வரலாம்  என்ற தன்னம்பிக்கையைப் பேசுவதாக அமைகிறது.

ஒவ்வோர் இலையும்

நாம் இங்கிருந்து கொண்டு 

பூமியின் எல்லா மரங்களிலும் 

எத்தனை இலைகள் என்று 

எண்ணத் தொடங்குகிறோம் 

இலைகள் எவ்விதத்திலும் 

ஒத்துழைப்பதில்லை

அவற்றிற்கு அதொன்றும் 

முக்கியமில்லை. 

ஒவ்வோர் இலையும் 

அதனதன் அதீத தனிமையில்

உதிரும் போதுதான் 

நாமதைத் தெரிந்து கொள்கிறோம் 

அவ்வளவு தான்.

பூமியினுடைய எல்லாம் மரங்களிலும் உள்ள இலைகளையும் எண்ணத் தொடங்குவதென்பது அத்தனை எளிதல்ல. அதேபோல வீழும் ஒவ்வொரு இலையும் அதனதன் தனிமையைச் சுமந்து கொண்டு விழுகின்றன என்ததத்  தெரிந்து கொண்டாலே போதும், அந்த வலியை நாம் உள்வாங்கிக் கொள்ள இயலும்.

உங்கள் கடைசி கோடாரிக்கு அப்புறமும் எங்கள் முதல் இலை உதிராமல் தான் இருக்கும் என்று நிறைவு செய்திருக்கும் 'எங்கள் முதல் இலை' என்னும் கல்யாண்ஜியின் கவிதை நினைவுக்கு வருகிறது.

***

வீரான்குட்டி கவிதைகள் நூல் வாங்க...

***

Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

1977ல் புதுக் கவிதை - க.நா. சுப்ரமண்யம்

க.நா.சு. தன் கவிதை நூல்களுக்கு எழுதிய இரண்டு முன்னுரைகள் இந்த இதழில் இடம்பெற்றிருக்கிறது. முதலில், 1977ஆம் ஆண்டு வெளியான ‘மயன் கவிதைகள்’ தொக...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (5) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (2) கட்டுரை (7) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (176) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (23) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (3) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (5) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (12) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (5) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (2) கட்டுரை (7) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (176) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (23) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (3) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (5) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (12) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive