வே.நி. சூர்யா கவிதைகள் - 2

ஒரு ஆனந்தம்... ஒரு துக்கம்...  ஒரு வெறுமை

மணலைப் பொன்னெனக் காட்சிப்படுத்திக்கொண்டிருக்கிறது வெயில்

யார் தன்னை எடுப்பார் என்றே கிடக்கின்றன சிப்பிகள் 

எனக்கோ இதே உடையில் இதே வியர்வைத் துளிகளோடு 

ஏற்கனவே இங்கு வந்ததுபோல இருக்கிறது 

காலடிச்சுவடுகளை அலைகளுக்கு எட்டாதபடி 

ஆழப் பதித்துப் பதித்து 

நடப்பதில் ஒரு ஆனந்தம்.. ஒரு துக்கம்.. ஒரு வெறுமை .. 

இனி திரும்பிச்செல்வேன் 

என் காலடிச்சுவடுகளே இனி நீங்கள் நடக்கலாம் 

உங்களுக்கு மேலே என்னைச் சிருஷ்டித்துக்கொண்டு.

***

கன்னியாகுமரியில்

சூரியனுக்கு முந்தியே விழித்தெழுந்துவிட்டேன் 

ஒரு புத்துணர்ச்சி நதிகளில் உள்ளதைப் போல 

யாவும் மையம் கொண்டிருக்கின்றன ஓர் உண்மையில் 

அந்தத் திருகாணிதான் 

கோத்திருக்கிறது இவ்வளவையும் ஒன்றாக.


நாளைக்குத் தெரியவில்லை 

இப்போது எனக்குத் தோன்றுகிறது 

இங்கு எதுவுமே பொய்யில்லை 

அழகின் வறுமை எதனிடமுமில்லை 

கடல் பார்த்த இந்தச் சன்னலுக்கு வெளியே 

ஒவ்வொன்றும் ஒரு புதிர் போலவே மின்னுகின்றன

அறுதியிட்டுச் சொல்லமுடியும்: 

இது முடிவேயில்லாத கோடிட்ட இடங்களை நிரப்பும் பகுதி


ஆனந்தத்திலும் பிறகு இச்சையிலும் 

என்னைக் கட்டியணைத்துக்கொள்கிறேன் 

பாருங்களேன் 

எவ்வளவு கொண்டாட்டம் 

நான் இருக்கிறேன் என்று உணர்கையில் 

ஓடிப்போய் அறையிலிருப்பவர்களை எழுப்புகிறேன் 

மூழ்கும் படகில் இருப்பவன் என. 

குழந்தைகளாகக் கண்விழித்து மர்மத்தின் ஆயுதங்களாக எழுந்துநிற்கிறார்கள் நண்பர்கள்


மூன்று.. இரண்டு.. ஒன்று... எண்ணெய்ப் படலமெனக் கடலெங்கும் இளம் ஒளி 

ஆ! தன் உள்ளங்கையை நீட்டுகிறது சூரிய உதயம் 

நாங்கள் சத்தியம் செய்கிறோம் ஒருபோதும் இதை மறக்கமாட்டோம் என.


(கல்லூரி அறையை எடுத்துவந்திருந்த நண்பர்கள் 

சிவக்குமாருக்கும் ஸ்ரீதரனுக்கும்)

***

பிரிவைச் சந்திப்பு என்றும் சொல்லலாமா

பொடிநடையாகக் கடற்கரையில் 

நடந்துகொண்டிருந்தேன். 

ஆங்கே ஓரிடத்தில்

எந்த அலைகளாலும் தொடமுடியாதபடி 

மண்ணில் கிடக்கும் 

ஒரு பலவீன ரோஜாவைப் பார்த்தேன். 

எந்த ஞாபகம் சிந்திய ரத்தத்துளிகள் இவை?

யார் பிரிவின் நினைவுச்சின்னம் இது? 

மொத்தச் சமுத்திரமும் 

அதில் மூழ்கிச் செத்த மாலுமிகளிலும் 

ஆழ்கடல் சீவராசிகளும் 

யாவும் யாவும் 

அந்த ஒற்றை ரோஜாவை 

அழைத்துக்கொண்டிருக்க 

அதுவோ 

பிடிவாதத்துடன் அமர்ந்திருக்கிறது

கடல் பார்த்துத் தனித்திருக்கும் யுவதி என.

தொலைவு களைந்து 

அவள் பக்கத்தில்போய் உட்கார்ந்தேன்

பின் ஒரு சொல்கூடப் பேசவில்லை,

வெறுமனே

பார்த்துக்கொண்டிருந்தோம்

ஒவ்வொரு அலையும் இன்னொரு அலையை 

எப்படியெப்படியெல்லாம் பிரிகின்றன என்று.

*** 

ஒரு டிசம்பர் மாலைப்பொழுது

காற்றடித்தால் 

உயரத்திலிருந்து சிணுங்கிச்சிணுங்கி 

நான் இருக்கிறேன், 

நான் இருக்கிறேன் எனத் 

தெரிவிக்கும் 

இந்த உலோகக் கிண்கிணிகளை 

நீ என்று நினைத்தது தவறாகப் போயிற்று. 

இப்போது பார், 

காற்று வீசும்போதெல்லாம் அருகிலிருப்பவனாகவும் 

வீசாதபோதெல்லாம் தூரத்திலிருப்பவனாகவும் 

மாறிக்கொள்ள வேண்டியிருக்கிறது எனக்கு,

சோகம்தான்...

***

வே.நி. சூர்யா தமிழ் விக்கி பக்கம்

***

Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

1977ல் புதுக் கவிதை - க.நா. சுப்ரமண்யம்

க.நா.சு. தன் கவிதை நூல்களுக்கு எழுதிய இரண்டு முன்னுரைகள் இந்த இதழில் இடம்பெற்றிருக்கிறது. முதலில், 1977ஆம் ஆண்டு வெளியான ‘மயன் கவிதைகள்’ தொக...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (5) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (2) கட்டுரை (7) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (176) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (23) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (3) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (5) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (12) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (5) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (2) கட்டுரை (7) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (176) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (23) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (3) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (5) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (12) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive