வே.நி. சூர்யா கவிதைகள் - 1

அலைகளை எண்ணுபவன்

உப்புக்காற்றின் கண்காணா தோரணங்களினூடே 

கடற்கரைக்கு வருகிறான். 

கோப்பையினுள் மீளமீள இட்டு எடுக்கப்படும் 

தேயிலைப் பையெனத் தொலைவில் 

அமிழ்ந்துகொண்டிருக்கிறான் சூரியன். 

அலைகளின் சப்தத்தை மட்டும் விட்டுவிட்டு 

எங்கேயோ சென்றுவிட்டன மற்றெல்லா சப்தங்களும் 

ஈரமணலில் உட்கார்ந்து அலைகளையும் நுரைகளையும் வெறிக்கிறான். 

பின்னர் எண்ணத்தொடங்குகிறான் 

ஒன்று.. இரண்டு.. தனிமை.. மூன்று.. நான்கு.. 

வந்துகொண்டே இருக்கின்றன அலைகள் 

மிகத்தனிமையான அலைகள்.

***

கண்ணாடிக் குவளை

மீண்டும் மீண்டும், தவறி விழுமெனத் திரும்பத்திரும்ப 

நினைக்கிறேன். சில்லுச்சில்லாக நொறுங்குகிறது. தவறி விழாது 

என ரகசியமாக எண்ணிக்கொள்கிறேன். சில்லுகள் தங்களைக் 

கணத்தில் கோர்த்துக்கொள்கின்றன. விழுந்த சப்தம் உடைந்த 

காட்சியைப் பொறுக்கிக்கொண்டு மறைகிறது. மேசையில் 

என் அடுத்த எண்ணத்திற்காகப் புதிதுபோலக் காத்திருக்கிறது கண்ணாடிக் குவளை.

***

ஓராயிரம் மாலைப் பொழுதுகள்

கிளையிலிருந்து மதிலுக்கு வந்துநிற்கிறது அணில் 

என்ன விழுந்துகொண்டிருக்கிறது என்றே 

அதற்குத் தெரியவில்லை 

ஆனாலும் சொல்கிறான்: 

"கவனமாக இரு, 

நான் பிறந்ததிலிருந்தே 

ஏதோவொன்று 

கீழே விழுந்துகொண்டிருக்கிறது. 

கவனமாக இரு... கவனமாக இரு..." 

பின் கிரிக்கெட் மைதானத்தில் 

உயரத்திலிருந்து 

இறங்கிவரும் பந்தினைப் பிடிப்பவனைப்போல 

தன் குட்டியூண்டு கைகளை 

உயர்த்திப்பிடித்தபடி 

நின்றுகொண்டிருக்கிறான் 

நானும் நிற்கிறேன் 

ஒருவேளை அவன் தவறவிட்டால் 

பாய்ந்து சென்று பிடித்து 

இந்தப் பிரபஞ்சத்தை 

ஆட்டமிழக்கச் செய்வதற்காக.

***

சாவதானம்

பூங்காவில் இருக்கையின்மீது

ஒரு இலை 

விழுகிறது.

சற்றுநேரத்தில் இன்னொரு இலை. 

முதலில் விழுந்த இலைக்கு மாதவி எனவும் 

இரண்டாவது இலைக்கு சூர்யா எனவும் பெயரிடுகிறேன்.

இப்போதோ இருவரும் அருகருகே அமர்ந்து 

பூங்காவின் சாவதானத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். 

எனக்குத் தெரியும், 

இன்னும் கொஞ்சநேரத்தில் 

இந்நகரின் மீது ஜோடியாகப் பறப்பார்கள், 

நான் சந்தோஷத்துடன் பார்ப்பேன்.

***

வே.நி. சூர்யா தமிழ் விக்கி பக்கம்

***

Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

1977ல் புதுக் கவிதை - க.நா. சுப்ரமண்யம்

க.நா.சு. தன் கவிதை நூல்களுக்கு எழுதிய இரண்டு முன்னுரைகள் இந்த இதழில் இடம்பெற்றிருக்கிறது. முதலில், 1977ஆம் ஆண்டு வெளியான ‘மயன் கவிதைகள்’ தொக...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (5) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (2) கட்டுரை (7) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (176) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (23) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (3) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (5) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (12) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (5) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (2) கட்டுரை (7) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (176) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (23) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (3) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (5) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (12) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive