இரு மனங்கள், இரு தீர்வுகள் - அ.க. அரவிந்தன்

கவிதை முழுமையான இலக்கிய வடிவம் என்று எனக்கு தோன்றும். புனைவு இயல்பிலேயே சிக்கலை அறுதியிட்டு தீர்வை முன்வைக்க முயற்சி செய்வதாக இருக்கும்.வலுவான சிக்கல்-கண்ணியான தீர்வு-இலக்கிய பெறுமானம் இவை மூன்றும் புனைவைப் பொருத்தவரை அடுத்தடுத்த படிநிலையில் நிகழவேண்டியது.இதனால் அகவயமான ஏற்பு வாசகனுக்கு கிட்டுவதில் ஏற்றத்தாழ்வுகள் உண்டாகிவிடும்.ஆனால் கவிதை வெறுமனே ஒரு விஷயத்தைக் கவனப்படுத்த முயற்சி செய்கிறது.

கவனப்படுத்த விரும்பும் விஷயம் வாசகனின் கண்ணிற்கு தெரிகிறதா? இல்லையா? என்பதே கேள்வி. அதனால்தான் “என்கவிஞர்” என்றும் “என்கவிஞர் இல்லை” எனவும் வாசகர் சொல்வதைக் கேட்க முடிகிறது.ஆக, கவிஞனின் சுயத்திற்கும் வாசகனின் இயல்புக்கும் கணநேர உரையாடலைதான் நாம் கவிதானுபவமாக சொல்கிறோம்.பின்பு, அதை ஒட்டியப் பேச்செல்லாமே அந்த அனுபவத்தை விளக்குவதே.இதனால் புனைவில் கவிதானுபவத்தை உத்தேசிக்கும் ஆக்கங்கள் வெற்றியடையாமல் போய்விடுவதையும் பார்க்கிறோம்.

கீழே வரும் இரு கவிதைகள் பற்றிப் பேசவதே என் நோக்கம். 

துக்கம் ஒரு பரிசுப்பொருள் நெடுநாள்

என் மேசை மீது கிடக்கிறது ஒவ்வொரு நாளும் அதைப் பிரிக்கிறேன் 

சரிகை முடிச்சிடுகிறேன்

தூங்கச் செல்கிறேன் 

அது அங்கேயே கிடப்பதில்

சந்தோஷம்தான் எனக்கு

பிறந்த குழந்தை போல

அது அங்கேயே கிடக்கிறது

அது தவழ்வதில்லை

நடக்கவும் செய்யாது

அது ஒரு எளிய அற்புதப் பொருள்

அதன் தொனி மெளனம்

அதன் பணி பிணியறுப்பு

- மதார் (வெயில் பறந்தது)


துக்கம் — ஒன்றினுள்

இன்னொன்று

அதனுள்

பிறிதொன்று என

எண்ணிறந்த பெட்டிகளை

உள்ளடக்கிய

ஒரு பெரிய பெட்டியைப் போன்றது.

மகிழ்ச்சி — சளைக்காமல்

அவற்றை

ஒவ்வொன்றாகத்

திறந்துகொண்டேயிருப்பது.

-வே.நி.சூர்யா (அந்தியில் திகழ்வது)

இவ்விருகவிதைகளில் ஒருவித தீர்வு தட்டுப்படுகிறதோ என்று தோன்றுகிறது. அதுவே இதை குறித்து பேச ஆர்வம். அதுவும் சிக்கல்-காரணம்-தீர்வு என்ற அறிவியல் பார்வை அல்ல. அறிவியல் பார்வை தற்காலிக அறிதி பார்வை. இதை கலைப் பார்வை என்று பிரிக்கலாமா? 

இவ்விரு கவிதைகளும் ஒரே பேசுபொருளைக் கொண்டிருந்தாலும் முற்றிலும் வேறான அனுபவத்தைத் தருகிறது. மதார் கவிதையில் வெளிப்படும் சுயம்: அனைத்தும் அதன் கையில் இருப்பதாக முன்வைக்கிறது. துக்கத்தை நயந்து அணிந்துக்கொள்ளும் வஸ்திரத்தைப் போல சுட்டுகிறது. மேலும் அந்தத் துக்கத்திற்கு ஒரு பொறுப்பை தருகிறார். பொறுப்பின் நிமித்தம் நிவாரணம் சாத்தியப்படுகிறது. "பிணியறுப்பு" அதன் வேலை என்று சொல்லும் போது, துக்கம் எடை குறைந்து குழந்தையாகவே மாறுகிறது. ஒவ்வொரு குழந்தையும் நோய் தீர்க்கும் வேலையைச் செய்கிறது. அது நம்மை மகிழ்விக்க முயற்சி செய்வதில்லை. துக்கத்தை எடுப்பார் கைப்பிள்ளையாக்கி வேடிக்கை பார்க்க செய்யும் மனநிலையே தீர்வு என்று எண்ணவைக்கிறது. 

இறுதியில் யாவுமே தருணங்கள்தானா? 

என்ற தலைப்பில் உள்ள பத்து பிரிவுகளில், ஒன்றில் உள்ளதே மேலே உள்ள வே.நி. சூர்யாவின் இக்கவிதை. 

இதில் மகிழ்ச்சியை உத்தேசிக்கிறார். அவர் எதையும் மாற்ற விழையவில்லை. மேலும் அனைத்துமே தருணமா? என்று சந்தேகிக்கிறார். துக்கம் எடுத்து கையாளக் கூடிய, ஒன்றுடன் ஒன்று பிணைந்தது. அதை எதுவாகவும் அறிதியிட  முடியாது.அது ஒரு “எண்ணிறந்த” பெட்டி. அதனாலேயே அது எடையுடன்  இருக்கிறது. ஏனெனில் அது “பெரிய”தாக உள்ளது. இதற்கு சரிக்கு சரியாக நிற்கும் வல்லமை மகிழ்ச்சிக்கு உள்ளதாக கவிஞர் முன்வைக்கிறார். ஆனால் நாம் மகிழ்ச்சியை அடைய “சளைக்காமல்” இருக்கவேண்டும். 

இருவேறு தருணத்தில் சிக்கலையும் தீர்வையும் காணவாய்ப்பதாகவும் யோசிக்கமுடியும். 

ஒரு மனம் துக்கத்தை தன்வயப்படுத்த உருமாற்றத்தை கோருகிறது. பிரிதொன்று துக்கத்தை எதிர்கொள்ள உத்தியை கற்றுத் தருகிறது.(சளைக்காமல் இருப்பது) 

பேசுபொருளில் உள்ள ஒற்றுமையால் இவ்விரண்டு கவிதைகளையும் ஏதோவொரு கணத்தில் அருகருகே வைத்துவிட முடிகிறது. துக்கம் ஒரு பொருளாக இருப்பது இந்தத் தசாப்தத்தின் கவிதையாக இக்கவிதைகளை மாற்றுகிறது. கவிதையில் நிகழ்வுகளுக்குதான் பஞ்சமிருக்காது. பொருள்கட்கள் வந்து விழுவது அபூர்வமே. கவிதையில் ஒரு பறவை வருகிறது என்றால் பறத்தல் என்ற நிகழ்வு கவிதையில் பேசபொருளாக உள்ளது என்று கொள்ளலாம்.ஆனால் பொருட்கள் நிகழ்வதில்லை. நிகழ்வு வந்தால் கூடவே காலமும் வந்துவிடும். மாறாகப் பொருட்கள் அணுகுமுறை சார்ந்து அர்த்தம் தரும் ஒரு வஷ்து மட்டுமே. மேலும் துக்கம் என்ற அகவயமான உணர்வை புறவயமான பொருளாக மாறியிருக்கிறது. ஆகவே சற்றே உறுதி கூடுகிறது. 

1992 - உலகமயமாதலுக்கு பிற்பாடு… என்ற விளக்கம் கலை, அறிவியல், பொருளாதாரம் என்று அனைத்திற்குமே பொருந்தும். அதை ஒத்திவைத்துவிட்டு அன்றாடத்தில் பார்த்தால், ஒரு மனிதன்  வாழ எவ்வளவு பொருட்கள் தேவையாக இருக்கிறது என்று ஆச்சரியமடைய வைக்கிறது. வரலாறு நெடுக முன்னெப்போதும் இல்லாத அளவு இன்றுதான் நாம் அதிக பொருட்களைப் பயன்படுத்துகிறோம் என்பது யாவரும் ஏற்றுக்கொள்ளும் விஷயமே. சிக்கல் என்னவென்றால் அந்த பொருட்கள் அனைத்துமே நமக்கு அவசியம் என்று எண்ணுகிறோம். மேலும் பொருட்கள் நமக்கு மகிழ்ச்சியை தருகிறது.மதார் அந்த மகிழ்ச்சியின் பொருட்டே அதை குழந்தையாக மாற்றுகிறார்.சூர்யா துக்கத்திற்கு எதிராக மகிழ்ச்சியை வைக்கிறார்.துக்கத்தை மாற்றுவதும், துக்கத்திற்கு எதிர் ஒன்றை முன்வைப்பதும் அவரவர் திராணிக்கு உட்பட்டதே.சட்டென்று இந்தக் கவிதை நினைவில் ஆட்படுகிறது.

இந்தச் செருப்பைப் போல்

எத்தனைப் பேர் தேய்கிறார்களோ

இந்தக் கைக்குட்டையைப் போல்

எத்தனைப் பேர்/பிழிந்தெடுக்கப்படுகிறார்களோ

இந்தச் சட்டையைப் போல்

எத்தனைப் பேர் கசங்குகிறார்களோ

அவர்கள் சார்பில்

உங்ளுக்கு நன்றி

இத்துடனாவது விட்டதற்கு

(நன்றி நவிலல்) 

- ஆத்மாநாம்

ஆத்மாநாமின் இக்கவிதையில் பொருளுக்கும் தனிமனிதனுக்கும் இருக்கும் இடைவெளி இன்மையை சுட்டுவதாக வாசிக்கமுடியும். துயர் பொருளாக பிரியாமல் இருப்பதைப் பார்க்கலாம். ஒவ்வொரு இயல்புக்கும் ஒரு பொருளைக் கண்டறிந்த காலத்தின் ஆவணமாக இந்தக் கவிதையைச் சுட்டலாம். ஆனால் மேற்கண்ட இரு கவிதைகள் இந்தத் தசாப்தத்தின் கவிதையாக மாறியிருப்பதற்கு காரணம், மனிதனின் இயல்புக்கு ஒரு பொருளை சுட்டமுடியாது என்பதும், மனிதர்கள் பொருட்களைப் போன்றவர்கள் அல்ல என்பதும், அவர்களுக்கு துக்கம் பொருட்களின் பெயரில் யாராலோ அல்லது அவனாலேயேகூட ஏற்படுத்திக் கொள்ளும் விஷயம் மட்டுமே என்ற கண்டுபிடிப்புதான். தீர்வை மேலேயே பார்த்து விட்டோம் அல்லவா? 

“துக்கத்திற்கு காரணம் ஆசை” என்ற பழைய கண்டுபிடிப்பு உயிர்ப்புடன் இருக்கக் காரணம், தீர்வு இயல்பாகவும் எளிதாகவுமில்லை என்பதோடு அது காலம்தோறும் மாறக்கூடியதாகவும் இருக்கிறது என்பதால்தான். இந்தக் காலத்திற்கான இரு தீர்வுகளால் இக்கவிதைகள் நினைவில் இருக்கிறது.

***

ஆத்மாநாம் தமிழ் விக்கி பக்கம்

வே.நி. சூர்யா தமிழ் விக்கி பக்கம்

மதார் தமிழ் விக்கி பக்கம்

***

Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

இருப்பின் நெசவு - அஜிதன் நேர்காணல்

புனைவெழுத்துக்கு அப்பால் நீங்கள் கவிதை எழுத முயற்சி செய்தது உண்டா? கவிதையுடனான உங்களது உறவு குறித்துச் சொல்லுங்கள்?  ஆம். நான் முதன்முதலாக ஏ...

தேடு

முந்தைய இதழ்கள்

Labels

அபி (13) அரவிந்தர் (1) அருண் கோல்ஹட்கர் (1) அறிமுகம் (1) அஜிதன் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (3) ஆனந்த் குமார் (8) இசை (11) இந்தி (7) இரா. கவியரசு (1) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (3) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (15) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (5) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (246) கவிதையின் மத (1) கவிதையின் மதம் (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (2) கார்த்திக் பாலசுப்ரமணியன் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (8) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (4) சங்க இலக்கியம் (4) சசி இனியன் (1) சஞ்சய் சௌத்ரி (1) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்தப்பாடல்கள் (1) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (5) சாரு நிவேதிதா (1) சீர்மை பதிப்பகம் (1) சுகந்தி சுப்ரமணிய (1) சுகுமாரன் (5) சுந்தர ராமசாமி (2) சுனில் கிருஷ்ணன் (1) செல்வசங்கரன் (2) சோ. விஜயகுமார் (4) ஞானக்கூத்தன் (1) டி.எஸ். எலியட் (1) தாகூர் (1) தாஸ் வைத்ய் (1) தூயன் (1) தேவதச்சன் (6) தேவதேவன் (28) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நித்ய சைதன்ய யதி (1) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (3) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (3) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (8) மரபு கவிதை (8) மராட்டி (2) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மு. சுயம்புலிங்கம் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (16) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ரமேஷ் பிரேதன் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) ரூமி (1) ரெயினர் மரியா ரீல்க (1) லட்சுமி மணிவண்ணன் (3) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) வி. சங்கர் (2) விக்ரமாதித்யன் (8) விவாத (1) வீரான்குட்டி (3) வெய்யில் (1) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (7) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷாந்தா ஷேலகே (2) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (13) அரவிந்தர் (1) அருண் கோல்ஹட்கர் (1) அறிமுகம் (1) அஜிதன் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (3) ஆனந்த் குமார் (8) இசை (11) இந்தி (7) இரா. கவியரசு (1) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (3) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (15) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (5) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (246) கவிதையின் மத (1) கவிதையின் மதம் (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (2) கார்த்திக் பாலசுப்ரமணியன் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (8) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (4) சங்க இலக்கியம் (4) சசி இனியன் (1) சஞ்சய் சௌத்ரி (1) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்தப்பாடல்கள் (1) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (5) சாரு நிவேதிதா (1) சீர்மை பதிப்பகம் (1) சுகந்தி சுப்ரமணிய (1) சுகுமாரன் (5) சுந்தர ராமசாமி (2) சுனில் கிருஷ்ணன் (1) செல்வசங்கரன் (2) சோ. விஜயகுமார் (4) ஞானக்கூத்தன் (1) டி.எஸ். எலியட் (1) தாகூர் (1) தாஸ் வைத்ய் (1) தூயன் (1) தேவதச்சன் (6) தேவதேவன் (28) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நித்ய சைதன்ய யதி (1) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (3) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (3) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (8) மரபு கவிதை (8) மராட்டி (2) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மு. சுயம்புலிங்கம் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (16) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ரமேஷ் பிரேதன் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) ரூமி (1) ரெயினர் மரியா ரீல்க (1) லட்சுமி மணிவண்ணன் (3) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) வி. சங்கர் (2) விக்ரமாதித்யன் (8) விவாத (1) வீரான்குட்டி (3) வெய்யில் (1) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (7) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷாந்தா ஷேலகே (2) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive