கிரகணத்தில் ஒளிரும் பாதைகள் - சங்கர் கணேஷ்

கவிதைகள் அவை கூட்டிச்செல்லும் மனவெளிப் பயணங்களுக்குள் ஏதோவொரு விதத்தில் உள்ளார்ந்த சாகச உணர்வைக் கொண்டிருக்கின்றன. அவ்வாறான கவிதைகள் தன்னைப் புதிரவிழ்க்கும் வாசகனிடமும் அவ்வுணர்வைக் கோருகின்றன. அவற்றின் மீயதார்த்த வழிகளில் நமக்குத் துணையாக மந்திரக்கோலைத் தூக்கிக்கொண்டு கூடவே வருவதும், பல சமயங்களில் ஏழு கடல் தாண்டி இருட்டான ஒரு மலைக்குகைக்குள் நம்மைத் தள்ளிவிட்டு கடந்து செல்வதுமான விளையாட்டுக்களை நிகழ்த்துகின்றன. பிரபஞ்சக் கரைசலில் இருந்து தன்னைப் பிரித்தெடுக்கும் கவிஞனுக்காக சட்டையை உள்வெளியாக திருப்பிப் போட்டுக்கொள்வது போன்ற இலகுவோடு அவன் உள்ளுலகை அவனுக்கானப் புறவயமான உண்மையாக ஆக்கி அளிக்கின்றன. இப்படி மெய்நிலைகள் பிரிந்தும் கூடியும் நெய்யப்படுகிற வலையில் இருவேறு கவிஞர்களின் பார்வைகள் எப்போதாவது ஒரே பொருளின் மீது நேர்க்கோட்டில் சந்திக்கிற நிழலில் எனக்கென ஒளிர்ந்த அடிச்சரடொன்றைப் பற்றிச் செல்ல இங்கே முயல்கிறேன்.

வழக்கங்களைத் தின்று சலித்து புதியவைகளைத் தேடி வேட்டைக்குச் செல்லும் கவிஞன் முதலில் தன் கவசத்தைக் களைகிறான். நிறங்களும் வடிவங்களும் கலைந்த பெருவனமொன்றைத் தன் அறிதலின் சாயலற்ற காலடிகளால் நோட்டம் விடுகிறான். நெருங்கிப் பார்ப்பதால் விளங்கும் அர்த்தங்களால் மாசுபடாத உலகமொன்றைத் தனக்கெனப் படைத்து அங்கே தொலைந்து போவதாகக் கனவு காண்கிறான். இன்னும் சிறிது நேரத்தில் ஒரு விரல் அவனது குட்டிக் கைப்பிடிக்குள் நுழைந்துகொண்டு அவனை வீட்டிற்குத் திரும்ப அழைத்துச் சென்று கவசத்தை அணிவித்துவிடும். அதற்குள்ளாக, மங்கலான முகங்கள் நிரம்பிய அந்த உலகத்தை குழந்தையைப்போல வேடிக்கை பார்த்துச் சேர்த்துக்கொள்கிறான். பின், நம்மை ஆற்றுப்படுத்துவதாக இப்படிக் கவிதைகள் எழுதுகிறான்.

***

கண்களும் வெற்றிடமும்

அந்திக்கருக்கலில் எனக்குக் கண்ணாடியைக் கழற்றி வைக்கும்
ஆசை வந்துவிடுகிறது
கவசமற்ற வெறும் கண்களோடு நடை போகிறேன்
சும்மா சொல்லக்கூடாது
மங்கலாகத் தெரிவதிலும்
சில நன்மைகள் இருக்கவே செய்கின்றன
ஒரு நொடிதான்
எதிர்ப்படும் முகங்கள் யாவும் ஒரே முகங்கள் ஆகிவிடுகின்றன:
மங்கல் முகங்கள்
அவ்வளவு பேரும் புதியவர்கள்
இனிமேல்தான் அறிமுகம் செய்துகொள்ளவேண்டும் போல
ஒருவரைக் கூட எனக்குத் தெரியவில்லை
பெயர்ப்பலகைகளில், சுவரொட்டிகளில், பேருந்துகளில் என
எந்த எழுத்தையும் படிக்க முடியவில்லை
வேறு ஏதோ மொழியில் இருக்கின்றன அவை:
அர்த்தம் தர மறுக்கும் ஓர் உலகம்
நிறங்கள் நிறங்கள் ஆகப் போராடுகின்றன இங்கு
இந்தத் தேவாலயச் சப்தம் மட்டுமில்லை எனில்
இத்தருணம் ஒரு கனவேதான்
வழியில் பிறகு பாரபட்சமின்றி இருட்டிவிட்டதைப் பார்க்கிறேன்
இனி நான் எனது ஊருக்குத் திரும்பவேண்டும்
நெருங்கி நெருங்கிப் பார்த்தும்
பின்பு கண்ணாடி அணிந்தும்

 ***

சுயத்தை நிரப்பும் முயற்சியில் புறத்தைக் குழைத்து உள்ளே ஊற்றிக்கொள்கிறது கவிமனம். தர்க்கங்களால் இருத்தலை விளக்க முற்படுகிற, பருப்பொருட்களின் தெளிவான வெளிக்கோடுகளைக் காட்டிவிடுகிற பூதக்கண்ணாடியைக் கேட்பாரற்று வீட்டுப் பரணில் தூசிபடிய விட்டுவிடுகிறது அது. தன்னை அச்சப்படுத்துகிற முகங்கள் தெளிவாகத் தெரிகிற தன் கண்களைக் கட்டிக்கொண்டு அச்சத்தைக் கிடக்கிற மனிதன், எங்கிருந்தோ இந்த உலகத்தின் சார்பாக வரும் ஒரு தேவ குரலிடம் தன்னை முழுத்தொத்து அளிக்கிறான். அவன் கை நீட்டுகிற திசைகளில் பாயும் அக்குரல் பிரதிபலித்து மீட்டு வந்த செய்திகளின் மூலமாக அவன் சகலத்தையும் காண்கிறான். ஒளியால் சென்று தொட முடியாத மனக் குகையின் எண்ணற்ற மடிப்புகளின் சுழற்பாதைகளை அறியும் தரிசனத்தைப் பெற்றுவிடுகிறான். அவன் கவிஞனாவது எப்போதெனில், தான் விழுந்த அந்த இருட்டான மலைக்குகைக்குள்ளேயே மாயக் கதவொன்றை சிருஷ்டித்து பின்வருபவர்கள் அதை திறந்துகொள்ளுவதற்கு வைத்துவிட்டு வெளியேறும்போது.

***

மூக்குக் கண்ணாடி அணியாமல்

தூரக்காட்சிகளின் மங்கல்
எனக்கொரு தைரியத்தைக் கொடுத்துக்கொண்டிருந்தது
மேடை பயம் விலக
பள்ளி நாடகமொன்றில்
மூக்குக் கண்ணாடி அணியாமல்
நடித்த நாள்
நினைவிற்கு வந்தது
எதிர்வரும் மனிதர்கள்
கலங்கலாகிவிட்டனர்
இப்போது பயம் நீங்கிவிட்டது
பார்வைத் தெளிவெனும் அச்சம்
என் வீட்டுப் பரணில் கிடக்கிறது
எத்தனை நாள்
அதை
தூசி போகத்
துடைத்திருப்பேன்
அறியாமை
அறியாமை
அந்த பைனாக்குலர்
இனி எனக்கு வேண்டாம்
இனி தூரத்துப் பறவை
என் கண்களில் பறக்காது
அது வானத்தில் பறக்கிற செய்தியை ஏந்தி வரும்
தபால்காரர் போதுமெனக்கு

***

Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

ஆகாய மிட்டாய் - கல்பற்றா நாராயணன் கவிதை

ஆகாய மிட்டாய் ந ண்பனின் மகளின் பெயர் மழை என்று தெரிந்தபோது மனம் தெளிந்தது சாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம் சற்று பிந்தியானால...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive