விழி நோக்குதல் - தேவி. க

ஒருமுறை திருநாகஸ்வரம் திருமணஞ்சேரி பரிகார தலங்களுக்கு சென்று திரும்பும் போது சிறிதும் பெரிதுமான சாலைப் பணிகளும் மேம்பாலம் வேலைகளும் நடந்து கொண்டிருந்ததால் கூகுளின் உதவியுடன் சின்ன சின்ன தெருக்களில் எல்லாம் நுழைந்து எங்கள் வாகனம் வந்துக் கொண்டிருந்தது. ஒரு திருப்பத்தில் சட்டென்று அழகிய பெரிய கோபுரம் எழுந்து வந்தது வியப்புடன் அதை பார்த்துக்கொண்டிருக்கும் போதே அரைத் தூக்கத்தில் இருந்து விழித்த என் அம்மா "ஹேய்ய் இது கங்கைக்கொண்ட சோழபுரம்" னு கூக்குரலிட்டார்கள். எத்தனையோ முறை எண்ணிய தலம் திடுப்பென்று கண் முன்னே எழுந்து வந்ததை இன்றும் என்னால் மறக்க முடியாது அதை போன்றதொரு அனுபவம் கவிஞர். பொன்முகலியின் கவிதைகள். 

பெரும்பாலான காதல்கவிதைகளில் நான் உன்னை எவ்வளவு நேசிக்கிறேன் என்றும் எப்படி எல்லாம் விரும்புகிறேன் என்றும் நீ மறுத்தால் என்னவாகுவேன் தெரியுமா என்றே இருக்கும். ஆனால் அரிதாக பொன்முகலியின் கவிதை வேறு ஒரு ஒன்றை சொல்கிறது எது எப்படி ஆனாலும் நீ என்னை தொடர்ந்து நேசித்து இருக்க வேண்டும் என்கிறது நான் உன்னை மட்டுமல்ல எல்லோரையும் குருதி வழிய கிழிக்கும் முள்ளாக இருந்தாலும் காதலிக்க வேண்டும் என்கிறது அத்தனை கனிவும் பரிவும் உனக்கு வேண்டும் என்று கோரவில்லை ஆணையிடுகிறது. இந்த குரல் புதிதாக நேசிப்பிற்குரியதாக இருக்கிறது.

நீ என்னை காதலித்திருக்க வேண்டும்.

நீருக்குள் மூழ்கிக் கொண்டிருக்கிற ஒருவனை

கரைக்கு இழுப்பவனின் தீவிரத்துடன்.

கழுத்தெலும்பு உடைபட்ட குதிரையை

கருணைக்கொலை செய்பவனின்

அனுதாபத்துடன்.

முற்றிலும் இலைகள் உதிர்ந்த

ஒரு கருவேலமரத்தைப்போல,

எவரையும் கிழித்துவிடும்

கூரிய வன்மத்தின் முட்களோடு

நான் இருந்திருந்தாலும்,

கனிந்த முகத்தோடு

தனது மேடிட்ட வயிற்றை

பரிவோடு வருடுகிற

ஒரு கர்ப்பிணியைப் போல

நீ என்னைத் தொடர்ந்து நேசித்திருக்க வேண்டும்.

காதலர்களுக்கிடையில் "விழி நோக்குதல்" என்பது காவியங்கள் தோறும் சொல்லப்பட்ட ஒன்று. ஆண்டு கணக்கில் ஒரு சொல்லும் பேசிக் கொள்ளாமல் அத்தனை உறுதியாக ஒருவரையொருவர் நேசிப்பதாக நம்பிய நண்பர்களை அறிவேன். எப்படி சொல்லிட்டீயா? என்றால் சொல்லனுமா பார்த்தாலே தெரியுதே என்று பதில் வரும். அவர்கள் வாழ்வில் இணையும் போது இனிய ஆச்சரியமாக இருந்தது. ஒரு பார்வை அணைக்கும் முத்தமிடும் குளிர்விக்கும் ஒருபோதும் தீரா தழலில் எரியவும் செய்திடும். அமீர் குஸ்ராவின் இந்த வரிகள் மிக பொருத்தமானவை "The only cure for the patient of Love is the sight of the Beloved".

அத்தகைய விழிகள் இங்கு எங்கும் நிறைந்து இருக்கும் ஆகாயத்தின் பகுதியாக நட்சத்திரங்களாக மாறி நோக்கினால் அமைதி உண்டாகுமா? ஆனால் பாடலாக மாறிவிட்டால்.

விண்மீன்கள் உன் கண்களாய் மாறி

என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிற

இவ்விரவில்,

நான் எப்படி அமைதியுறுவேன் சொல்?

அந்தியின் வழி நடந்து

ஆதவன் அடைகிறான்.

நிலவு ஒரு தும்பை பூவைப் போல

வானத்தில் மலர்கிறது.

நீயும் நானும்

காலத்தின் ஓயாத பாடலில்

ஒலிக்கத் துவங்குகிறோம்

செய்வதற்கு ஒன்றும் இல்லாத அல்லது ஆயிரம் இருப்பதாக நம்பினாலும் எதுவும் தோன்றாமல் இயலாமல் இருக்கும்

மதியப்பொழுதுகள் மிக நீளமானவை. இரவின் அமைதியைவிட நண்பகலின் அமைதி கூரியது அலைக்கழிப்பது. வெளியே சற்று தூரத்தில் உலகமே அதிவேகமாக ஓடிக் கொண்டுயிருக்கும் வேளையில் ஒரு அறையில் இருக்க நேரும் பொழுதில் சிதறி பரந்துவிடும் என்னை அங்கே இயங்கிக் கொண்டு இருக்கும் ஏதேனும் ஒன்றுடன் பொருத்திவிடுவேன் அநேக நேரங்களில் மிக மனமுவந்து அந்த பொறுப்பை ஏற்றுக்கொள்ளுவது தலைக்கு மேல் சுற்றிக்கொண்டு இருக்கும் மின்விசிறி தான். என்னை இழுத்து அதனுடன் சுழலவிடுவேன். முதலில் மிக வேகமாக பின் சற்று குறைத்து பின்பு மெல்ல மிக மெல்ல அது கடக்…கடக்..என்று இழுத்து ஒரு கட்டத்தில் நிறுத்தும் வரை இந்த ஆடல் நிகழும்.  பொன்முகலியின் இந்த கவிதையை வாசித்து முடிக்கும் போது கவிதையை அணைத்துக் கொண்டும் அவரின் கைகளை இறுகப் பற்றியும் கொண்டேன். அத்தனை அணுக்கமான ஒன்று.

மின்விசிறி காற்றை வெட்டி வெட்டி வெளியை உண்டுபண்ணுகிறது.

காற்று மின்விசிறியை

வெட்டி வெட்டி

வெளியை உண்டுபண்ணுகிறது.

***

தீபு ஹரி பொன்முகலி தமிழ் விக்கி பக்கம்

***

Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

கவிதை - இந்திய, உலக இலக்கியப்‌ போக்குகள் – 2: க.நா.சு

மனித இனத்தின்‌ முதல்‌ இலக்கிய வடிவம்‌ கவிதையே காவியங்களை பற்றி இவ்வளவு போதும்‌. இப்போது கவிதை என்று பார்க்கலாம்‌. பொதுவாக உலக மொழிகளில்‌ எல்...

தேடு

முந்தைய இதழ்கள்

Labels

அபி (12) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (8) இந்தி (7) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (7) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (201) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (3) சங்க இலக்கியம் (3) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (4) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (6) தேவதேவன் (24) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (5) மரபு கவிதை (8) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (16) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (7) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (12) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (8) இந்தி (7) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (7) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (201) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (3) சங்க இலக்கியம் (3) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (4) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (6) தேவதேவன் (24) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (5) மரபு கவிதை (8) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (16) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (7) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive