வாயாடி - மதார்

கவிஞர் சோ.விஜயகுமார் எனக்கு அறிமுகமானது ஒரு கவிதை ரசிகராகத்தான். புத்தகத் திருவிழாக்களின் உயிர்மை அரங்குகளில் 'இங்கு கவிதை வாசிக்கப்படும்' என்ற போர்டு இருந்தால் அங்கு விஜயகுமாரும் இருப்பதாக அர்த்தம். 'கவிதையை வாசித்தல்' என்ற செயல் ஒருவரைக் கவிஞனாக்குமா அல்லது அவரது கவிதையில் தாக்கத்தைச் செலுத்துமா என்றால் அதற்கு விஜயகுமாரை முன்னுதாரணமாகச் சுட்டலாம். அது மட்டும் போதுமா என்றால் இல்லை. கவிஞனுக்கேயுரிய மனம் அமையப் பெற்றிருத்தல் வேண்டும். விஜயகுமாரிடம் இயல்பாகவே திரண்டிருந்த அம்மனம் 'கவிதையை வாசித்தல்' என்கிற செயலின் வழியாக கவிதையை நோக்கித் திரண்டது என்று கூறலாம்.  மேலும் கவிதை வாசிப்பில் மெளனமாக வாசிப்பது, சத்தமாக வாசிப்பது என்று இரண்டு உள்ளது. இதற்கும் கவிதைக்கும் என்ன சம்பந்தம்,இந்த வாசிப்பு முறை ஒருவரின் கவிதைக்குள் செல்வாக்கு செலுத்துமா என்றால் 'ஆம்' என்பதை நங்கூரமாக இடலாம். ஒரு கவிஞனின் எந்த செயலும் அவன் கவிதையை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றும். கவிஞனின் செயல் அவன் ஆளுமையால் ஆனது. கவிதை அதிலிருந்து பிறப்பது தான். விஜயகுமார் கவிதைகளை சத்தமாக வாசிக்கும் பழக்கம் கொண்டவர். அதுவே  அவரது ஆரம்பகால கவிதை வடிவத்தையும், கருப்பொருளையும் வடிவமைப்பதில் முக்கியப் பங்காற்றியது எனலாம். அந்தத் தன்மையின் முகடாக 'அம்மாவிற்கு ஒரு கண்ணில் பூ' தொகுப்பையும் குறிப்பிடலாம். அம்மாவை சத்தமாக வாசித்தல் என்பதே அத்தொகுப்பின் சாராம்சம். ஆனால் அபூர்வமாக வடிவக் கச்சிதமும், மெளனமும் கூடிவந்த தொகுப்பாகவும் அதைப் பார்க்கலாம். பொதுவாகவே கவிதையை நீட்டி வாசிக்கும்போது அது வழக்கத்தை விட கொஞ்சம் கூடுதலாகப் பேசும், வாயாடியாகும். சமீபத்தில் பட்டாம்பி கவிதை முகாமிற்குச் சென்றிருந்தபோது அங்கு தமிழ்க் கவிதைக்கும் மலையாளக் கவிதைக்குமான வேறுபாடாக கவிதையின் இந்தப் பண்பே விவாதிக்கப்பட்டது. மலையாளத்தில் வாசிப்பு ஒரு கலை. அது ஏற்படுத்திய தாக்கம் மலையாளக் கவிதைகளில் அதிகம். கொஞ்சம் அதிகம் பேசுவது மலையாளக் கவிதைகளுள் வந்தது அப்படித்தான். தமிழில் அதற்கு நேர் தலைகீழ். இந்த இரண்டிலும் சாதக பாதகங்கள் சமமாக உண்டு என்பதே அந்த விவாதத்தின் முடிவில் அங்கு எட்டப்பட்டது. 'அம்மாவிற்கு ஒரு கண்ணில் பூ' ஒரு மனநிலையை நீட்டி எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு. 

தினசரியின் கவிதைகள் குறித்து தேவதச்சன் ஒரு நேர்ப்பேச்சில் இவ்வாறு சுட்டினார் :  'வாளியில தண்ணீ நெறயும்போது ஒரு பதட்டத்தோடவே இருக்குற மாதிரிதான் கவிதை எழுதுறதும். எப்போ முடியும் அப்படின்னுதான் தோணிட்டே இருக்கும். இதனாலயோ என்னவோ நீள்கவிதைகள்ள என்னோட மனம் இயங்கல". 'அம்மாவிற்கு ஒரு கண்ணில் பூ' நீண்ட கயிறின் மேல் நடந்து செல்வதைப் போலத்தான். நீண்ட அம்மனநிலையை கவிதையாக்குவதில் எழும் பிரச்சினை வடிவம் குவியாமல் சிதறுவதுதான். இந்தத் தொகுப்பின் கவிதைகள் அந்தச் சிக்கல் இன்றி வடிவக் கச்சிதத்துடன் எழுதப்பட்டுள்ளன.

அம்மாவிற்கு தினமும்

தலையை வாரிவிடவேண்டும்

அவள் தலையில்

பேன்பார்த்து பேன்பார்த்துத்தான்

பாட்டி தன் கோபங்களைத்

தீர்த்துக் கொண்டாள்

அம்மாவிற்கு பூத்தொடுத்து

பூத்தொடுத்துத்தான்

அப்பா நிதானத்தைப் பழக்கினார்

அவளுக்கு தலைவாரி தலைவாரிதான்

தங்கை பெரியவளானாள் 

கவிதையின் வடிவக் கச்சிதத்திற்கும் கவிஞனின் நிதானத்திற்கும் தொடர்புண்டு. இந்த நீண்ட கயிற்றில் நிதானமான நடையை விஜயகுமார் மேற்கொள்கிறார். 

படையலுக்கும்

அம்மாவிற்கும் இடையே

எப்போதும் ஒரு விளக்கு இருக்கிறது

அதை ஏற்றித்தான் அவள்

அந்தச் சுவரில் உள்ள படங்களை

எங்களுக்குத் தெய்வமாக்கினாள் 

கவிஞர்கள் மனுஷ்யபுத்திரன், வெய்யில் இருவரையும் தனது முன்னோடிகளாக விஜயகுமார் குறிப்பிடுகிறார். இருவரது தாக்கங்களையும் விஜயகுமாரின் கவிதைகளில் காணமுடிகிறது.

அம்மாவின் சாதனைகள்

ரகசியமானவை

அவளது வெற்றிப் பட்டியல்

சற்றே நீளமானது

அவளது ஒழுங்கற்ற மீசை முடிகளில்

பூசிப்பூசி மஞ்சள் தோற்றது

அவள் பற்களின் மாத்திரைக் கறைகளிடம்

பற்பசைகள் தோற்றன

அவளுக்கு சிகிச்சையளித்து சிகிச்சையளித்து

தொலைதூர ஊரின் மருத்துவர் தோற்றார்

வலிப்பின்போதான அலறல்களில்

கடவுளின் செவி தோற்றுப்போனது

நான் அவளுக்காக பிரார்த்தனை செய்தபோது

கடவுள் தோற்றுப்போனார்

அவளது வலியை கொஞ்சமேனும்

தீர்க்க முடியாமல்

நாங்கள் அன்றாடம் தோற்றுப்போனோம்

இத்தகையை நீண்ட கவிதைகளில் கவிஞனின் ஆளுமையும் கவிதையினூடே பயணிப்பது அந்தக் கவிதைகளுக்கு கூடுதல் தகுதி. அதுவும் இந்தத் தொகுப்பில் நிகழ்ந்துள்ளது.

பருகும் முலைக்குப் பதிலாக

என் விரலை நானே சூப்பத்தொடங்கினேன்

அம்மாவின் மடியிலேயே

என் வலது கையில் தலைவைத்து

ஒருக்களித்துப் படித்தேன்

என் உடலின் ஒரு பகுதியை

அப்படித்தான்

நான் என் அன்னையாக்கிக்கொண்டேன்

அந்தந்த தருணங்களின் கவிஞராக விஜயகுமார் வெளிப்படுகிறார். அவரது சில கவிதைகளின் பிண்ணனியாக ஒரு பதட்டம் இழையோடுவதையும் பார்க்கலாம். இந்த வாயாடி இன்னும் இன்னும் அதிகமாக இன்னும் இன்னும் கூர்மையாகப் பேசவேண்டும். 2025 ஆம் ஆண்டின் விஷ்ணுபுரம் - குமரகுருபரன் விருதுபெறும் கவிஞர் சோ.விஜயகுமார் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

***

சோ. விஜயகுமார் தமிழ் விக்கி பக்கம்

சோ. விஜயகுமார் நூல்கள் வாங்க...

***

Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

கவிதை - இந்திய, உலக இலக்கியப்‌ போக்குகள் – 2: க.நா.சு

மனித இனத்தின்‌ முதல்‌ இலக்கிய வடிவம்‌ கவிதையே காவியங்களை பற்றி இவ்வளவு போதும்‌. இப்போது கவிதை என்று பார்க்கலாம்‌. பொதுவாக உலக மொழிகளில்‌ எல்...

தேடு

முந்தைய இதழ்கள்

Labels

அபி (12) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (8) இந்தி (7) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (8) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (206) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (8) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (3) சங்க இலக்கியம் (3) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (4) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) சோ. விஜயகுமார் (4) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (6) தேவதேவன் (24) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (2) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (5) மரபு கவிதை (8) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (16) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (7) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (12) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (8) இந்தி (7) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (8) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (206) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (8) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (3) சங்க இலக்கியம் (3) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (4) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) சோ. விஜயகுமார் (4) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (6) தேவதேவன் (24) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (2) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (5) மரபு கவிதை (8) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (16) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (7) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive