மினுங்கும் வரிகளும் உணர்வாழமும் - ரம்யா

 (’அம்மாவிற்கு ஒரு கண்ணில் பூ’ கவிதைத் தொகுப்பை முன்வைத்து)

உதிரி சிந்தனைகளை மட்டுமே பகிர்வதற்கு வாய்ப்பமைந்த இன்ஸ்டா, முகநூல், X, யூடியூப் போன்ற தளங்களில் தீவிர இலக்கியமும், எழுத்தாளர்களும், அவர்களின் எழுத்துக்களும் புழங்கும் விதமும் பெரும்பாலும் உதிரிகளாகவே இருப்பதைக் காணலாம். வேறு எந்த இலக்கிய வடிவத்தைவிடவும் இந்த உதிரி வரிகளை அடிக்கோடிட கவிதை என்ற வடிவம் கச்சிதமாக உள்ளது. இந்த ஐந்து வருடங்களில் ‘இன்ஸ்டா கவிஞர்கள்’ என்ற புது வகைமை உருவாகி தனி உலகமாக அவர்கள் பரிணமித்திருக்கிறார்கள். அவை தீவிர இலக்கியத்தில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியதில்லை எனினும் தீவிர இலக்கியம் அதை அழிக்கும் பொருட்டோ அல்லது அதன் புகழ் வெளிச்சத்தில் சற்று பங்கிட்டுக் கொள்ளவோ அதன் ஆயுதத்தையே கையில் எடுத்துக் கொண்டதால் அதைப் பற்றி பேச வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும் சமூக ஊடகங்கள் வழியாக ஒரு தலைமுறை எழுத்தாளர்களை மேற்கோள்கள் உருவாக்க வேண்டிய கருவியாக நிர்பந்திப்பதைப் பார்க்கவும் முடிகிறது. எழுத்தாளர்களுக்கும் ஒரு அழகான போஸ்டர்களில் புகைப்படத்துடன் தனது நல்ல வரியை பார்ப்பது மீது கவர்ச்சி உள்ளது.  

பெரும்பாலும் இந்த ’இன்ஸ்டா கவிதைகள்’ மினுங்கும் வரிகளைக் கொண்ட போஸ்டர்களைக் கொண்டவை. இவற்றின் வழியாக கவிஞரின் ஒட்டுமொத்த ஆளுமையை அல்லது சமகால கவிதைப் போக்கை அறியும் எண்ணம் இந்தத் தலைமுறைக்கு வர வேண்டும் என எதிர்பார்ப்பது அபத்தம் தான். ஒரு நாளில் நாம் பார்க்கும் பல நூறு ரீல்ஸ்கள் மின்னி மறைந்து, கடந்து சென்ற காலத்தின் புதைக்குழிக்குள் செல்வதைப் போல இந்த இன்ஸ்டா கவிதைகளும் மின்னி மறைகின்றன. மினுங்கும் வரிகளைப் போலவே இது மினுங்கி மறையும் உணர்வுகள், உறவுகள், உறவுச்சிக்கல்கள் கொண்ட காலகட்டமும் கூட. மனுஷ்யபுத்திரனின் பிற்காலகட்ட கவிதைகளை இந்த வகைமைக்குள் அடைக்கலாம். அவர் தன் கவிதை வாசகர்கள் என இத்தகைய தன்மையோரை நோக்கி சுருக்கிக் கொண்டதை இக்கவிதைகளில் காணலாம். கவிஞர் சோ.விஜயகுமாரின் கவிதைகளை இதன் நீட்சியாகக் காணும் ஒரு பார்வைக்கோணமும் உள்ளது. இந்த வகைக் கவிதைகள் ஒரு காலகட்டத்தின் சிக்கலிலிருந்து முளைத்தெழுபவை. ஒட்டுமொத்தமாக கவிதையாக பாவிக்க இயலாத ஆனால் இந்த மாதிரி உதிரி வரிகளால் கவிதையென நம்ப நம்மை வற்புறுத்துபவை. இந்த கவிதைதளை இக்காலகட்டத்தின் முகமாக வைப்பது பெரும் சிக்கல் தான். ஆனால் அதற்கு எதிர்த்திசையில் இக்காலகட்டம் இதையும் உள்ளடக்கியது என்று காண்பிக்கும் முகமாகவும் சொல்லலாம்.

உதாரணமாக,

எந்த ஒரு நிராகரிப்பின்போதும்

எனக்கு வலுவான காரணங்கள் தேவை

சமாதானமடைய ஒரு கோபம் தேவை


என் அம்மாவின் பொருட்டுதான்

நான் நிராகரிக்கப்படுகிறேனென

நினைப்பு வரும்போதெல்லாம்

அம்மாவைக் கொல்லத் தோன்றும்


பின்பு நிதானமாக குற்றவுணர்வு

என்னையே சாகடித்துக்கொள்ளச் சொல்லும்

எப்படியாவது அந்த குற்ற உணர்ச்சியைக்

கொல்ல வேண்டும்

பின்னர் சாவகாசமாக

அந்த குற்றவுணர்ச்சியை உருவாக்கியவர்களை


இந்தக் கவிதையில் முன்னும் பின்னும் இருக்கும் மினுங்கும் வரிகள் (italics) முதல் வாசிப்பில் கவிதைக்கான உணர்வைத்தருகிறது. அடுத்த வாசிப்பிலோ அல்லது ஒட்டுமொத்தமாக தொகுத்துக் கொண்டாலோ கவிதைத்தன்மையை அடையாமல் உள்ளது

“…

திக்கற்ற ஆயிரம் அன்னைகளின்

அப்பட்டமான நிழல் என் அம்மை”


“…

கர்ப்பக் காலத்துப் பெண்மணி

ஸ்வெட்டர் நெய்வதைப் போல

நான் ஒவ்வொரு இரவும்

நெய்துகொண்டிருக்கிறேன்

அவள் உடம்புக்குத் தோதான

காடாத் துணியை”


”பாவாடை நாடாவல் இறுக்கப்பட்ட

அரிசி மூட்டையின் வாய்ப்பகுதியெல்லாம்

அவளது அடிவயிற்றுச் சுருக்கங்கள்”


ஆகியவையும் இந்த மினுங்கும் வரிகளுக்கு உதாரணமாகச் சொல்லலாம். இந்தக் கவிதைகள் கவிதை மரபுக்கு எதைச் சேர்க்கின்றன என்ற கேள்விக்கு, ஒன்றுமில்லை என்றே சொல்ல முடிகிறது. கவிஞனுக்கு என்ன சேர்க்கிறது? அங்கும் ஒன்றுமில்லை தான். மாறாக உணர்வுகளை வெளிப்படுத்தும் ஊடகமாக கவிதையை பயன்படுத்திக் கொள்வது மட்டும் நிகழ்ந்துள்ளது. 

உணர்வு வெளிப்பாட்டு ஊடகமாக எந்த இலக்கிய வடிவத்தையும் அணுகலாம் தான். ஆனால் வாசகர் முன் அதை வைக்கும் போது அவருடன் தொடர்புபடுத்திக் கொள்ளும் ஒரு பொதுத்தன்மை இருப்பது அவசியம். அதுவே கவிதைக்கு ஒட்டுமொத்தமாக கவிதைத்தன்மையை அருள்கிறது. 

எழுத்தாளரின் தனிப்பட்ட உணர்வுகள் என்பவை சொந்தப்புண்ணைப் போன்றவை. உணர்வு வெளிப்பாட்டு ஊடகமாக மட்டும் அவற்றைக் கருதுவது சொந்தப்புண்ணை சொறியும் சுகத்தை மட்டுமே அளிக்கும். அது தற்காலிகமானது. அடுத்த கட்டத்தை நோக்கி அந்த உணர்வுகள் செல்வதும், ஆழத்தில் சென்று கூட்டு நனவிலியுடன் தொடர்பு கொள்ளும்போதே அது வாசகருக்கும், ஒட்டுமொத்தமாக இலக்கியப் பரப்பிற்கும் நன்மையைச் சேர்க்கும். சோ.விஜயகுமாரின் ’அம்மாவிற்கு ஒரு கண்ணில் பூ’ என்ற கவிதைத் தொகுப்பில் அத்தகைய கவிதைகளையும் காண முடிகிறது.

“அம்மா” என்ற உறவுடன் மகன் கொள்ளும் உணர்வு வெளிப்பாட்டுச் சாத்தியங்களை கவிதையாக்க முயன்றிருக்கிறார் விஜயகுமார். ஒற்றை உறவு சார்ந்த பொருளில் கவிதைத் தொகுப்பு வருவது புதிய முயற்சி என்றும் சொல்லிவிட முடியாது. தமிழில் அக்கா, அப்பா, அம்மா என குடும்ப உறவுகளை மையமாக வைத்தும் கவிதைத் தொகுதிகள் வந்திருக்கின்றன. இந்த கவிதைத் தொகுப்பை அதன் பேசுபொருள் கொண்டு கவிஞர் வெய்யிலின் “அக்காளின் எலும்புகள்” தொகுப்புடன் ஒப்பிடலாம். ஆனால் அது சமூக-அரசியல்-கலாச்சாரம் என்ற தளத்திற்குள் நகர்ந்துவிடுகிறது. ஆனால் விஜயகுமாருடையது தனித்தலையும் மனத்தின் வலிகள், உணர்வாழங்கள் சார்ந்தவை. இக்கவிதைகளில் ஓர் நிரந்தர அன்பிற்கான ஏக்கமும், நினைவேக்கங்களை மறக்கவே முடியாதளவு வடுக்களை சுமந்து அதை கவிதை வழியாக ஆற்றுப்படுத்திக் கொள்ளும் மனமும், வலிக்கு மாற்றாக இன்னொரு வலியை, தனிமைக்கு மாற்றாக இன்னொரு விதமான தனிமையை எதிர்பார்க்கும் துக்கமான ஆன்மாவும் கவிதைகளில் தென்படுகின்றன.


*

ஒரு தலையின் பாரத்தை

பாதி மடியால் எவ்வளவுதான் தாங்க முடியும்

அம்மா வலிக்கிறது என்பாள்

உடனே எழுந்துகொள்வேன்

தலை சாய்த்தால்

என்னைப் பாதியில் எழுப்பிவிடாத

ஒரு மடியைத்தேடித்தான்

நான் காதலிக்கத் தொடங்கினேன்


*


பருகும் முலைக்குப் பதிலாக

என் விரலை நானே சூப்பத்தொடங்கினேன்

அம்மாவின் மடியிலேயே

என் வலது கையில் தலைவைத்து

ஒருக்களித்துப் படுத்தேன்

என் உடலின் ஒரு பகுதியை

அப்படித்தான்

நான் என் அன்னையாக்கிக் கொண்டேன்


*


இயல்பைவிட அதிகமாக

அம்மாவிற்கு முலையில் பால் சுரந்தது

அவள் முலையருகே செல்லும்போதே

என் முகம் கருத்தது


முலைகளைக் கடிப்பதும்

அதன் காம்புகளில் கண்ணீர் சிந்துவதும்

அதன் வட்டப்பாதையில்

இடையறாது நாக்கைச் சுழற்றுவதும்

இணைக்கு அலுப்பூட்டலாம்


இன்னொரு முலையிலும் 

அதுதான் நடந்தது

இன்னொருவரின் முலையிலும்

அதுவேதான் நடந்தது

புரிந்துகொள்ள முடிகிறது


என்னால் முலைகளை

வெறும் முலைகளாகப் பார்க்கமுடியாது


*


இன்னும் என் பெயரை

முழுதாய் சொல்லித்தான்

அழைப்பாள் அம்மா

உடனே பதில் தராதபோது

எனது செல்லப்பெயர்களை

அப்போதும் வராதபோது

நான் பிறந்தபோது

எனக்காக தேர்வு செய்துவைத்திருந்த

அத்தனைப் பெயர்களையும்

நான் அந்தப் பெயர்களுக்காகவே

எப்போதும் தாமதமாக வந்தேன்


*


அம்மா பெரிய பாத்திரத்திலிருந்து

சர்க்கரையைக் கொஞ்சூண்டு எடுத்து

சிறிய டப்பாவில்

சமையலறையில் வைத்துக் கொள்வாள்

பெரிய அரிசி மூட்டையிலிருந்து

கொஞ்சூண்டு எடுத்து

படியில் அளந்து போடுவாள்

உணவுப் பொட்டலங்களில்

கொஞ்சூண்டு எடுத்து

ருசி பார்த்துக் கொள்வாள்

பரிமாறும்போது சிறிய கரண்டியால்தான்

கொஞ்சூண்டு கொஞ்சூண்டாக பரிமாறுவாள்

கொஞ்சூண்டு கோபம்வந்தாலும்

வலிக்காதவாறு அடிகொடுப்பாள்


கொஞ்சூண்டு கைகளால்

அவ்வளவுதான் எடுக்க முடியும்

அவ்வளவுதான் கொடுக்க முடியும்


*

மினுங்கும் வரிகளிலிருந்து உணர்வின் ஆழத்தை நோக்கியும் ஒட்டுமொத்தமாக கவிதைத்தன்மையை அடையும் கவிதைகளை நோக்கிச் செல்ல வாய்ப்பிருக்கும் கவிதைகள் என இவற்றைச் சொல்லலாம். வெற்று உணர்ச்சிகரத்துடன் நின்றுவிடாமல் மறுவாசிப்பில் வளரும் தன்மையையும் இவை கொண்டிருக்கின்றன.

இக்காலகட்ட கவிஞர்களில் கவிஞர் இசையின் நீட்சியாக இலகுத்தன்மை பறந்தலையும் தன்மை அதிலிருந்து மெய்மையை நோக்கி எழும் ஒரு தரப்பு உள்ளது. அதற்கு எதிர்த்தரப்பில் எதிர்மறையான உணர்வுகளால் அலைக்களிக்கப்பட்டு அத்தனை இலகுவாக இல்லை என்பதைச் சொல்லும் தரப்பும், அறிவார்ந்த தர்க்க விளையாட்டையும், கருத்தியல் சார்ந்தவற்றையும் கவிதையாக்க முயற்சிக்கும் தரப்பும் உள்ளது. இவற்றுக்கு இடையில் ஊசலாடும் தரப்பென உணர்வுப்பூர்வமான ஒரு தரப்பாக விஜயகுமார் கொணர்ந்து நிறுத்தும் கவிதைகளைச் சொல்லலாம். 

இந்தக் காலகட்டத்தின் இன்னொரு சிக்கல் உணர்வுகள் மீது நம்பிக்கையிழந்து தனித்தலையும் தன்மை, உறவுகள் மீது பற்றின்மை. ஆண் பெண் உறவைத்தவிர வேறு உறவுகளைப்பற்றிய பெரிய விவாதங்கள் நிகழ்வதை நம்மால் பார்க்க முடிவதில்லை. பெரும்பாலான உணர்வுச்சிக்கல் பற்றிய உரையாடல் என்பது உடலைப் பகிர்ந்து கொள்ளும் உறவுகளால் வருவதைப் பற்றியும், அதனால் ஏற்படும் மனப்பிரச்சனைகள் பற்றியும் மட்டுமே நிகழ்கிறது. இந்த நிலையில் அம்மா-மகன் உறவு வழியாக அது சார்ந்த உணர்வுகளின் பல பக்கங்களை விஜயகுமார் இயல்பாக கவிதையாக்க முற்பட்டிருப்பது முக்கியமானது. மினுங்கும் வரிகளிலிருந்து கவிதைத் தன்மையை நோக்கி நகர்வதற்கு வாய்ப்புள்ள கவிதைகள் இந்தத்தொகுப்பில் உள்ளன. 

2025ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம்-குமரகுருபரன் விருது பெரும் இளம் கவிஞர் சோ.விஜயகுமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

***



***



Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

கவிதை - இந்திய, உலக இலக்கியப்‌ போக்குகள் – 2: க.நா.சு

மனித இனத்தின்‌ முதல்‌ இலக்கிய வடிவம்‌ கவிதையே காவியங்களை பற்றி இவ்வளவு போதும்‌. இப்போது கவிதை என்று பார்க்கலாம்‌. பொதுவாக உலக மொழிகளில்‌ எல்...

தேடு

முந்தைய இதழ்கள்

Labels

அபி (12) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (8) இந்தி (7) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (8) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (206) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (8) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (3) சங்க இலக்கியம் (3) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (4) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) சோ. விஜயகுமார் (4) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (6) தேவதேவன் (24) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (2) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (5) மரபு கவிதை (8) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (16) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (7) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (12) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (8) இந்தி (7) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (8) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (206) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (8) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (3) சங்க இலக்கியம் (3) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (4) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) சோ. விஜயகுமார் (4) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (6) தேவதேவன் (24) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (2) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (5) மரபு கவிதை (8) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (16) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (7) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive