சில தமிழ் கவிதைகள் - மு. சுயம்புலிங்கம்

 ரசம் அழிந்த கண்ணாடிகள்

அந்த குப்பமேட்டில்

அங்க அங்க

தீ எரிஞ்சிக்கிட்டு இருக்கு.


ஆளுக்க

எது எதையெல்லாமோ பெறக்கி

பத்தரப்படுத்துதாக.


ஒரு சின்னக் கொழந்த

தனியா உக்காந்திருக்காள்.

அவா கைல

ஒரு சானிட்டரி டவல் இருக்கு

அசிங்கமா இருக்குது அது.

அந்த தீட்டுத் துணிய

கைட்டுப் பெசைறா

வாய்ல வச்சிக் கடிக்கிறா.

அந்த வெளையாட்டு

போர் அடிச்சதும்

தீட்டுத் துணியை தூர எறிஞ்சுட்டு

குப்பையை அள்ளி

தல மேல போட்டுக்கிறாள்.

சந்தோசம் தாங்க முடியல அவளுக்கு

குழந்தை குலுங்கிக் குலுங்கி

சிரிப்பாச் சிரிக்கிறது.


அழாமல்

சிரிச்சி வௌயாண்டுக்கிட்டு இருக்கு

கொழந்த.


அலஞ்சி திரிஞ்சி

அந்தப் பெரிய குப்பமேட்டில்

உடைந்த பீங்கான்கள்

பெறக்கிக்கிட்டு இருக்கா

தாய்.

***

எஜமானர்கள்

எங்கவூர் கழுதைகளுக்கு

காதுகள்

அறுக்கப்பட்டிருக்கும்.


உடம்பெங்கும்

சூடு போட்ட

தழும்பு இருக்கும்.


எஜமான்

கழுதைகளுக்கு

இரை போட மாட்டான்

தண்ணீர் காட்ட மாட்டான்.


முதுகில்

ஏற்றி வைத்த பொதிகளை

கண்ணீரோடு சுமக்கும்

கழுதைகள்.


கழுதைகள்

தப்பிச் செல்லமுடியாது.

அவைகளுக்கு

முன்கால்கள்

தழையப்பட்டிருக்கின்றன.


கழுதைகள்

நொண்டி நொண்டி

தானாகவே மேய்ந்துகொள்ளும்.


கழுதைகள்

குடும்பம் நடத்துகின்றன


கழுதைக் குட்டிகள்

அழகாக இருக்கின்றன.

***

பிறந்த ஊர்

வருசம்

போனது தெரியாமல்

போய்விட்டது.


பட்டணத்துக்கு வந்து

நாற்பத்தைந்து ஆண்டுகள்

ஆகிவிட்டன.


பிறந்த ஊருக்கு

புறப்பட்டேன்.

ஒரு வனாந்தரத்தில்

என்னை இறக்கிவிட்டது

பஸ்.


ஐந்து கிலோமீட்டர் நடை

வெயில்

முள்

பனைமரங்கள்

ஒத்தையடிப்பாதை.


மணல் சுடுகிறது

உடம்பு வியர்க்கிறது

தாகம்.


ஒரு முள்மரத்து நிழலில்

இளைப்பாறுகிறேன்,

எனக்கு முன்னே

என்னுடைய கிராமம்.


என்னைப் பார்த்து

நாய்கள் குரைக்கின்றன

பன்றிகள் ஓடுகின்றன

கோழிகளும்

சேவல்களும்

பயத்தில் கெக்கரிக்கின்றன.


சிறுவர்கள்

வேம்படியில்

வேப்பங்கொட்டை

சேகரிக்கிறார்கள்.


தெருவெங்கும்

அடுப்புச் சாம்பல்.

உடைந்து நொறுங்கிய

மண்பானை ஓடுகள்.


ஒரு பாட்டி

ஒரு ஓலையை மடித்து

அதில்

தீக்கங்குகள் எடுத்து வருகிறாள்.


ஒரு அண்ணாச்சி

முறுக்குத் தடியில்

அருவாள்

தீட்டிக்கொண்டிருக்கிறார்.


ஒரு பெண்

தன் குழந்தையை

மடியில்

கிடத்தி

சீழ் துடைத்துக்கொண்டிருக்கிறாள்.


தெருவில்

கால் நீட்டி உட்கார்ந்துகொண்டு

குழந்தை தலைக்கு

தண்ணீர் ஊற்றுகிறாள்

ஒரு தாய்.

குழந்தை உடம்பு முழுவதும் புண்

தண்ணீரில்

மஞ்சள் வேப்பிலை.


கருவாடு சுடுகிற வாசனை

காற்றில் மிதக்கிறது.


ஒரு திண்ணையில்

இரண்டு குழந்தைகள்

கஞ்சி குடிக்கிறார்கள்.


தெருக்கோடி

எங்கள் வீட்டுக்கு முன்னால் வந்து

நிற்கிறேன்.


வீடு இருந்த இடத்தில்

ஒரு குப்பைமேடு

ஒரு பெரிய கருவை மரம்

இரண்டு கழுதைகள்

படுத்துக் கிடக்கின்றன.


தெருவில்

புழுதி

வெயில்.

***

மு. சுயம்புலிங்கம் தமிழ் விக்கி பக்கம்

***

Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

இருப்பின் நெசவு - அஜிதன் நேர்காணல்

புனைவெழுத்துக்கு அப்பால் நீங்கள் கவிதை எழுத முயற்சி செய்தது உண்டா? கவிதையுடனான உங்களது உறவு குறித்துச் சொல்லுங்கள்?  ஆம். நான் முதன்முதலாக ஏ...

தேடு

முந்தைய இதழ்கள்

Labels

அபி (13) அரவிந்தர் (1) அறிமுகம் (1) அஜிதன் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (8) இசை (10) இந்தி (7) இரா. கவியரசு (1) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (3) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (14) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (241) கவிதையின் மத (1) கவிதையின் மதம் (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (2) கார்த்திக் பாலசுப்ரமணியன் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (8) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (4) சங்க இலக்கியம் (4) சசி இனியன் (1) சஞ்சய் சௌத்ரி (1) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்தப்பாடல்கள் (1) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (5) சாரு நிவேதிதா (1) சீர்மை பதிப்பகம் (1) சுகந்தி சுப்ரமணிய (1) சுகுமாரன் (5) சுந்தர ராமசாமி (2) சுனில் கிருஷ்ணன் (1) செல்வசங்கரன் (2) சோ. விஜயகுமார் (4) ஞானக்கூத்தன் (1) டி.எஸ். எலியட் (1) தாகூர் (1) தூயன் (1) தேவதச்சன் (6) தேவதேவன் (28) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நித்ய சைதன்ய யதி (1) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (3) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (3) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (7) மரபு கவிதை (8) மராட்டி (1) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மு. சுயம்புலிங்கம் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (16) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ரமேஷ் பிரேதன் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) ரூமி (1) ரெயினர் மரியா ரீல்க (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) வி. சங்கர் (1) விக்ரமாதித்யன் (8) விவாத (1) வீரான்குட்டி (3) வெய்யில் (1) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷாந்தா ஷேலகே (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (13) அரவிந்தர் (1) அறிமுகம் (1) அஜிதன் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (8) இசை (10) இந்தி (7) இரா. கவியரசு (1) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (3) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (14) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (241) கவிதையின் மத (1) கவிதையின் மதம் (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (2) கார்த்திக் பாலசுப்ரமணியன் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (8) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (4) சங்க இலக்கியம் (4) சசி இனியன் (1) சஞ்சய் சௌத்ரி (1) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்தப்பாடல்கள் (1) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (5) சாரு நிவேதிதா (1) சீர்மை பதிப்பகம் (1) சுகந்தி சுப்ரமணிய (1) சுகுமாரன் (5) சுந்தர ராமசாமி (2) சுனில் கிருஷ்ணன் (1) செல்வசங்கரன் (2) சோ. விஜயகுமார் (4) ஞானக்கூத்தன் (1) டி.எஸ். எலியட் (1) தாகூர் (1) தூயன் (1) தேவதச்சன் (6) தேவதேவன் (28) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நித்ய சைதன்ய யதி (1) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (3) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (3) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (7) மரபு கவிதை (8) மராட்டி (1) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மு. சுயம்புலிங்கம் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (16) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ரமேஷ் பிரேதன் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) ரூமி (1) ரெயினர் மரியா ரீல்க (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) வி. சங்கர் (1) விக்ரமாதித்யன் (8) விவாத (1) வீரான்குட்டி (3) வெய்யில் (1) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷாந்தா ஷேலகே (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive