சலவைக்கல் - ஆதில் மடத்தில்

மலையாளத்தின் மிக இளம் கவிகளில் முக்கியமான முகம் ஆதில் மடத்தில். 2020-ல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு ‘வலியபள்ளி ரோடு’ வெளிவந்து முக்கியமான கவனத்தை பெற்றதுஇஸ்லாமிய பின்புலத்தில் இவரது கவிதைகள் உறவுகள்நிலம்ஆன்மீகம் என பயனிக்கும் மொழியும் பார்வையும் மலையாள சமகால கவிதைகளுக்கு அத்தனை புத்துணர்ச்சி அளிக்கிறது.

ஒரு படிமம் வந்து அமரும் போதே கவிதையாகி விடுகிறது. அந்த ஒரு படிமம் மட்டுமே அந்த கவிதையின் அழகு. அது மிகாமலும், குன்றாமலும் சரிவிகதத்தில் வந்து அமரும் போதே கவிதை ஆகிறது.

ஆதில் மடத்தில் இக்கவிதை, சலவைக்கல்லை பற்றி மட்டுமே பேசுகிறது. அதிலிருந்து ஒவ்வொரு குறியீடாக, அர்த்தங்களாக நம்மை விரித்து செல்ல வைக்கிறது. நான் வாசிக்கும் போது என் இளைமைப் பருவத்தில் என் வீட்டில் சலவைக்கல்லாய் அமர்ந்திருந்த என் பாட்டியை நினைத்துக் கொண்டேன்.

- ஆனந்த் குமார்

***

சலவைக்கல்

நதிக்கரையில் நனைந்து காயும்

சலவைக்கல்.

நனைந்து

நுரைத்து

நனைந்து.

 

வண்ணாத்திப் பெண்கள் சென்றபின்

ஒழுகும் நீர் நடுவில்

தனிமையில் கொதிக்கும்.

ஒட்டிய சோப்பு

வறண்டு காயும்.

 

நதி வெயிலின் பெருமூச்சில்

அலைகள் பெருக,

ஆழத்தில் முளைக்கும்

குளிர் குமிழிகளை

இழுத்துப் போர்த்தும்.

 

அந்தியில் திரும்பும் பெண்கள்

நனைத்து உலர்த்தும்வரை

வியர்வையில் குளித்திருக்கும்.

 

அவர் சென்றபின்

வந்தமர்ந்து

வாலாட்டும் கிளியொன்று

இரவு பகலை பிரிக்கும்

 

நட்சத்திரங்கள் ஒளிரும்

இருண்ட சலவைக்கல்

 

                                                                                                                                                       -  ஆதில் மடத்தில்

(வலியபள்ளி ரோடு’ தொகுப்பிலிருந்து)

Share:
Powered by Blogger.

சதீஷ்குமார் சீனிவாசன்

இருள் வெளியில் எரியும் சொற்கள் 1 - கடலூர் சீனு

2023 ஆண்டுக்கான குமரகுருபரன் விஷ்ணுபுரம் இலக்கிய விருது இளம் கவிஞர் சதீஷ்குமார் சீனிவாசன் அவர்களுக்கு அறிவிக்கப்பட்ட பிறகு, இதுவரையிலான முதல...

தேடு

Labels

அபி (10) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (1) ஆனந்த் குமார் (7) இசை (3) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) க. மோகனரங்கன் (2) கட்டுரை (5) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (93) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) குன்வர் நாராயண் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (1) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சபரிநாதன் (2) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (1) ஞானக்கூத்தன் (1) தேவதச்சன் (3) தேவதேவன் (12) தேவேந்திர பூபதி (1) நகுலன் (2) நேர்காண (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) போகன் சங்கர் (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (2) மரபு கவிதை (5) மோகனரங்கன் (1) யுவன் சந்திரசேகர் (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) லட்சுமி மணிவண்ணன் (1) லதா (1) லாரா கில்பின் (1) விக்ரமாதித்யன் (5) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1)

Most Popular

Labels

அபி (10) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (1) ஆனந்த் குமார் (7) இசை (3) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) க. மோகனரங்கன் (2) கட்டுரை (5) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (93) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) குன்வர் நாராயண் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (1) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சபரிநாதன் (2) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (1) ஞானக்கூத்தன் (1) தேவதச்சன் (3) தேவதேவன் (12) தேவேந்திர பூபதி (1) நகுலன் (2) நேர்காண (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) போகன் சங்கர் (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (2) மரபு கவிதை (5) மோகனரங்கன் (1) யுவன் சந்திரசேகர் (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) லட்சுமி மணிவண்ணன் (1) லதா (1) லாரா கில்பின் (1) விக்ரமாதித்யன் (5) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1)

Blog Archive