நள்ளிரவில் இயேசு இளம்பெண்ணை அழைத்துச் செல்கிறார் - விக்ராமதித்யன்

நள்ளிரவில் இயேசு 

இளம்பெண்ணை

அழைத்துச் செல்கிறார்


வெளியூரிலிருந்து

ஏதோ காரணம்

வந்த பேருந்து வழியில் பழுதடைந்திருக்கலாம்

அல்லது தன் மகனை அவ்வளவு

லேசில் பிரிய மனமில்லாமல்

தூங்கிய பின் கிளம்பியிருக்கலாம்

அல்லது கணவனுடன் சண்டையிட்டு 

வைராக்கியத்தில் நேரம் பாராமல் 

புறப்பட்டிருக்கலாம்


ஆட்கள் அடங்கிய நடமாட்டமில்லாத

நிலைய நள்ளிரவில்

பேருந்தை விட்டு இறங்குகிறாள்

நகரத்திலிருந்து

கிராமத்துக்குச் செல்பவளாக

அதன் பாதையில்

பயந்தும் துணிந்தும் நடந்தவள் தன்னைத்

திரும்பிப் பார்த்தவாறு

கடக்கும் சைக்கிள்காரனிடம் தன்னை

அமர்த்திச் செல்லுமாறு மன்றாடுகிறாள்


ஏற்றிக்கொண்டவுடன்

பெருமூச்சு விட்டு

இயேசு வந்தீர்கள் என்கிறாள்


நீங்கள்

கூட

பார்த்திருக்கலாம் 

நள்ளிரவில்

கிராமத்துச் சாலையில் 

தன் சைக்கிளின் பின்புறத்தில் 

இயேசு 

ஓர் இளம் பெண்ணை 

அமர்த்திச் செல்வதை.

('காலத்தின் முன் ஒரு செடி' தொகுப்பு, பக்கம்: 58, 59)

ஸ்ரீ நேசன்

புதிய தலைமுறைக் கவிஞர்களுள் முக்கியமான ஒருவர், ஸ்ரீநேசன். அவருடைய நல்ல கவிதைகளுள் ஒன்று இது. இதற்கும் எந்த விளக்கமும் வேண்டியதில்லை. கவிதை, நேரடியாகவும் எளிமையாகவும்தான் இருக்கிறது. எனில், வாழ்வின் நுணுக்கமான ஓர் அம்சம் இதில் அருமையாகப் பதிவாகியிருப்பதுதான் சிறப்பே.

காட்சிகளின் வழியே விவரிக்கப்பட்டு, ஒரு சிறுகதைபோல வடிவமைக்கப்பெற்று, ஒரு தன்மையான கவிதையாக நிறைவு கொள்ளும்படியாக உள்ளது.

கவிஞரே சொல்வதுபோல, நாம்கூட இதுமாதிரி பார்த்திருப்போம்தாம். நள்ளிரவில், பேருந்துநிலையத்தில் வந்து இறங்கும் பெண் ஒருத்தி; இது ஒரு காட்சிச் சித்தரிப்பு. அப்படிப் பிந்தி வர நேர்ந்ததற்கு மூன்று காரணங்கள் யூகமாகச் சொல்லப்படுகின்றன. “இருக்கலாம், இருக்கலாம்” என்று மூன்று அடுக்குகள்.

"பயந்தும் துணிந்தும்” எனும் வார்த்தைகளைக் கவனியுங்கள். இந்தச் சொற்கள், அந்தப் பெண்ணின் மனநிலையை எவ்வளவு துல்லி யமாகக் காட்டி நிற்கின்றன. அது அவ்விதம்தான் இருக்கும். தன்ன ந்தனியே, நடு இரவில், இளம்பெண்ணாக இருப்பவள் எப்படி வழி நடந்து கிராமத்துக்குச் செல்ல என்பதில் பயம். ஆனால், எப்படியும் சேருமிடத்துக்குச் சென்றடைந்தாக வேண்டும் என்று துணிச்சல்.

ஆணுக்கேகூட இப்படி ஆகலாம். பெண்ணுக்கு அப்படியானது சகஜம்தான்.

முதல் வரி, “வெளியூரிலிருந்து எனத் தொடங்குகிறது. டுப

அடுத்த அடி, “ஏதோ காரணம்!" என்றிருக்கிறது. ஆரம்ப வரியின் தொடர்ச்சியாக ஒன்றைச் சொல்ல வருகிறது அடுத்தடுத்த வரிகள் யூகங்களாக, பிறகுதான் விஷயமே முன்வைக்கப்படுகிறது. சிறப்பான உத்தி இதுபோல ஒன்றை இப்படிச் சொல்வதே சரி.

தொடர் வரிகளில் அவள் நிலைமையும் செயல்பாடும் பிறகு, உதவிகேட்டு நிற்பது. பின்னே நிம்மதிப்பெருமூச்சும் அவள் கூற்றும் கடைசியாக, கவிவாக்கு கவிதை வடிவுகொண்டு விடுகிறது.

பேருந்துநிலையத்தில் வந்து இறங்குவது ஒரு காட்சி; நகரத்திலிருந்து கிராமத்துப் பாதையில் நடத்து செல்வது இன்னொரு காட்சி; திரும்பிப் பார்த்தபடி கடக்கும் சைக்கிள்காரனிடம் அமர்த்திச் செல்லுமாறு மன்றாடுவது மூன்றாவது காட்சி; சைக்கிளில் ஏற்றிக்கொண்டவுடன் ஆசுவாசம் கொள்வது நான்காவது காட்சி. இளம்பெண் ஒருத்தியின் ஒரு வாழ்வுநிலையே நான்கு காட்சிகளால் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதுவே கவிதை உருவாக்கமாகவும் தோற்றுகிறது.

“இயேசு வந்தீர்கள்" என்று அந்தப் பெண் சொல்லியிருப்பதைப் பார்த்தால், கிறித்துவசமயம் சார்ந்தவளாக இருக்கலாம் என்று கருத வேண்டியிருக்கிறது. இந்த ஆறுதல் வார்த்தைகளிலிருந்தே - இன்னும் சரியாகச் சொல்வதானால், 'இயேசு' என்ற ஒற்றைச் சொல்லிலிருந்தே ஓர் அற்புதமான புனைவு உண்டாக்கப்பட்டிருப்பதைக் குறிப்பிட்டுச் சொல்லிவேண்டும் சைக்கிளில் அமர்த்திச் செல்லும் அந்த சாதாரண மனுஷனையே இயேசுவாக்கி விடுகிறார் கவிஞர். உண்மைதான் ஓர் உயிரிடம் பரிவு காட்டுகிற யாருமே இயேசுதான்; நிராதவராய் நிற்பவர்களுக்கு ஆதரவளிப்பவர் எவராக இருந்தாலும் இயேசுதானே.

இத்தக் கவிதை குறித்து இன்னும்கூட எவ்வளவோ சொல்ல வேண்டியிருக்கிறது. முதன்முதலில், இதன் செய்திறன். குறிப்பாக, தொடக்க அடிகள் ஒன்பதும், தேரடியாக அல்லாமல், ஏதோ ஒன்றைச் சொல்வதுபோல அமைத்திருக்கும். பிறகுதான் கவிதையின் மையம் அல்லது பாடுபொருளின் மையம்.

அதற்கடுத்தாற்போல, அந்தப் பெண்ணின் அடுத்த காரியம் முதல் காரியம், நேரங்கெட்ட நேரத்தில் பேருந்துநிலையத்தில் வந்து இறங்குவது என்றால், இரண்டாவதாக அவள் போய்ச்சேரும் இடத்துக்குத் தயக்கத்துடன் நடந்து செல்வது. மூன்றாவதாக, வழியில் எதிர்படும் சைக்கிள்காரனிடம் தன்னை(யும்) ஏற்றிக்கொண்டு போகும்படிக் கேட்டு மன்றாடுவது. நான்காவதாக, சைக்கிளில் அவன் அமர்த்திக்கொண்டவுடன் கொள்ளும் நிம்மதி. நான்கு காட்சிகள்; ஒரு முழுச் சித்திரம். கவிதை உருக்கொண்டு விடுகிறது, சரியாக, எளிமையாகவும் நேரடித்தன்மையிலும்கூட ஒரு நல்ல கவிதை அமையலாம் என்பதற்கும் ஓர் எடுத்துக்காட்டாக உள்ளது இந்தக் கவிதை. இஃது ஒரு சிறப்பம்சம். எல்லாவற்றையும் இணைத்துத் தெரிவிக்கும் விதத்தில் ஒரு தலைப்பு. ஆக மொத்தத்தில் ஓர் அருமையான கவிதை.

கவிதை, சீரிய கட்டமைப்புக் கொண்டிருப்பதைச் சொல்லாமல்விட முடியாது. அநேக வரிகள் மடக்கிப் போடப்பட்டிருப்பது, கவிதைக்கு, கவிதை விஷயத்துக்கு அனுகூலமாகவே இருப்பதையும் சுட்ட வேண்டும்.

முதல் பார்வையிலேயே உள்ளம் கவர்ந்து விடும் இக்கவிதை, திரும்ப ஊன்றிப் பார்க்கையிலும் மனசில் தங்கிவிடுவதாகவே உள்ளது. ஸ்ரீநேசன் சிறந்த கவிஞர்தான் என்பதற்கு இந்த ஒரு கவிதையே போதுமான சான்று. வாழ்வை அவதானித்துக் கவிதைக்குள் கொண்டு வருபவன் நல்ல கவிஞனாகத்தானே இருக்க முடியும்.

பெண் ஒருத்தியின் இக்கட்டான நிலையையும். அந்நிலையில் உதவிபுரியும் ஆண் ஒருவனின் பெருந்தன்மையையும், காட்டுகிற இந்தக் கவிதை முற்ற முழுக்க வாழ்வியல் கவிதையே ஆகும். இதனாலேயே இஃது அழியாத கவிதையாகிவிடுவதை கவிதை ஆர்வலர்கள் அவசியம் கண்டுகொள்ள வேண்டும். மேலும், பெண் கவிஞர்கள் இதுபோலக் கவிதைகளைப் போற்றிப் புகழவும் படித்துக்கொள்ள வேண்டும்.

***

ஶ்ரீநேசன் தமிழ் விக்கி பக்கம்

விக்ரமாதித்யன் தமிழ் விக்கி பக்கம்

***

Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

Poetic Angst - ஜெயமோகன்

உதிர்ந்த ஒரு பழுப்பு இலை மிதந்து தவிழ்ந்து என்றேனும் உங்கள் மடி வந்தமரக் கூடும். எடுத்து தடவி முத்தமிட்டு மறுபடி காற்றில் விடுங்கள். ஞானத்து...

தேடு

முந்தைய இதழ்கள்

Labels

அபி (13) அரவிந்தர் (1) அருண் கோல்ஹட்கர் (1) அறிமுகம் (1) அஜிதன் (1) ஆ. அமிர்தராஜ் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (3) ஆவுடையக்காள் (1) ஆனந்த் குமார் (9) இசை (11) இந்தி (7) இரா. கவியரசு (1) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (3) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஸ்ரா பவுண்ட் (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (18) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கண்டனம் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கருத்தரங்கு (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (5) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (276) கவிதையின் மத (1) கவிதையின் மதம் (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (2) கார்த்திக் பாலசுப்ரமணியன் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (8) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (4) சங்க இலக்கியம் (4) சங்கர் கணேஷ் (1) சசி இனியன் (1) சஞ்சய் சௌத்ரி (1) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்தப்பாடல்கள் (1) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (5) சம்யுக்தா மாயா (6) சாரு நிவேதிதா (1) சார்லஸ் சிமிக் (1) சீர்மை பதிப்பகம் (1) சுகந்தி சுப்ரமணிய (1) சுகுமாரன் (6) சுந்தர ராமசாமி (2) சுனில் கிருஷ்ணன் (1) செல்வசங்கரன் (2) சோ. விஜயகுமார் (4) சோலைக்கிளி (1) ஞானக்கூத்தன் (1) டி.எஸ். எலியட் (1) டி.ஏ. பாரி (1) தாகூர் (1) தாஸ் வைத்ய் (1) தி.சோ. வேணுகோபாலன் (1) திரிகூட ராசப்ப கவிராயர் (1) தூயன் (1) தேவதச்சன் (8) தேவதேவன் (29) தேவேந்திர பூபதி (1) ந. பிச்சமூர்த்தி (1) ந. ஜயபாஸ்கரன் (1) நகுலன் (3) நித்ய சைதன்ய யதி (1) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (3) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) புதுமைப்பித்தன் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (3) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (10) மரபு கவிதை (8) மராட்டி (3) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மு. சுயம்புலிங்கம் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (17) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யாக்கூப் (1) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ரமேஷ் பிரேதன் (1) ராமாயணம் (1) ராஜமார்த்தாண்டன் (1) ரியோகான் (1) ரூமி (1) ரெயினர் மரியா ரீல்க (1) லட்சுமி மணிவண்ணன் (3) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) வி. சங்கர் (2) விக்ரமாதித்யன் (14) விவாத (1) வீரான்குட்டி (3) வெய்யில் (1) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (7) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) வேணு வேட்ராயன் (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (3) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஶ்ரீநேசன் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷங்கர்ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷாந்தா ஷேலகே (2) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (13) அரவிந்தர் (1) அருண் கோல்ஹட்கர் (1) அறிமுகம் (1) அஜிதன் (1) ஆ. அமிர்தராஜ் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (3) ஆவுடையக்காள் (1) ஆனந்த் குமார் (9) இசை (11) இந்தி (7) இரா. கவியரசு (1) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (3) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஸ்ரா பவுண்ட் (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (18) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கண்டனம் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கருத்தரங்கு (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (5) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (276) கவிதையின் மத (1) கவிதையின் மதம் (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (2) கார்த்திக் பாலசுப்ரமணியன் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (8) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (4) சங்க இலக்கியம் (4) சங்கர் கணேஷ் (1) சசி இனியன் (1) சஞ்சய் சௌத்ரி (1) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்தப்பாடல்கள் (1) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (5) சம்யுக்தா மாயா (6) சாரு நிவேதிதா (1) சார்லஸ் சிமிக் (1) சீர்மை பதிப்பகம் (1) சுகந்தி சுப்ரமணிய (1) சுகுமாரன் (6) சுந்தர ராமசாமி (2) சுனில் கிருஷ்ணன் (1) செல்வசங்கரன் (2) சோ. விஜயகுமார் (4) சோலைக்கிளி (1) ஞானக்கூத்தன் (1) டி.எஸ். எலியட் (1) டி.ஏ. பாரி (1) தாகூர் (1) தாஸ் வைத்ய் (1) தி.சோ. வேணுகோபாலன் (1) திரிகூட ராசப்ப கவிராயர் (1) தூயன் (1) தேவதச்சன் (8) தேவதேவன் (29) தேவேந்திர பூபதி (1) ந. பிச்சமூர்த்தி (1) ந. ஜயபாஸ்கரன் (1) நகுலன் (3) நித்ய சைதன்ய யதி (1) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (3) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) புதுமைப்பித்தன் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (3) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (10) மரபு கவிதை (8) மராட்டி (3) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மு. சுயம்புலிங்கம் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (17) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யாக்கூப் (1) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ரமேஷ் பிரேதன் (1) ராமாயணம் (1) ராஜமார்த்தாண்டன் (1) ரியோகான் (1) ரூமி (1) ரெயினர் மரியா ரீல்க (1) லட்சுமி மணிவண்ணன் (3) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) வி. சங்கர் (2) விக்ரமாதித்யன் (14) விவாத (1) வீரான்குட்டி (3) வெய்யில் (1) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (7) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) வேணு வேட்ராயன் (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (3) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஶ்ரீநேசன் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷங்கர்ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷாந்தா ஷேலகே (2) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive