ஆறாவது நாள்
மகத்தான
தன் குட்டிக் கை கால்கைள
ஆட்டிக் கொண்டு
உற்று நோக்குகிறது ஒரு
பிரபஞ்ச நிகழ்வு பேரின்மையில்
இசைக்கப் படுகிற வீணையின்
நாதத்துக்கு
தன் விரல்கைள ஒப்புக் கொடுத்தபடி
எங்கெங்கோ நிலைத்திருந்த
அவ்விழிகள்
கருணையோடு பார்கின்றன
தனக்குள் தான்
சிக்கிய மடிப்பெல்லாம் பிரிய
மீண்டும் ஒளிர்கிறது
சிறு பொறி
நான் என
***
சமத்துக் கொடம்!
குட்டியாக எதைப் பார்த்தாலும்
பிடிக்கிறது பாட்டிக்கு
தன் கொள்ளுப் பேரனைப் பார்க்கும்
அதே சிரிப்புதான்
சிறுவிரல் போன்ற குட்டி கேரட்டுக்கும் ஏலக்கிப்
பழத்துக்கும்
கொட்டைப் பூசணிய பலாப்பிஞ்சை
பிறந்த குழந்தையின் தலைபோல என்பாள்
இன்று அவள் கண்ணில்பட்டது
ஒரு பித்தளைத் தோண்டி
வாடீயென் குஞ்சலமே
என்று கையில் எடுத்துக் கொண்டாள்
அதுவும் கண் விழித்து
சற்றே சிணுங்கிவிட்டுத்தான்
அவளிடம் போனது
- சங்கர் கணேஷ்
***







0 comments:
Post a Comment