டி.அனில்குமார் கவிதைகள்

டி.அனில்குமார் சமகால மலையாள கவிதைகளின் முக்கியமான முகம். நெய்தல் நிலத்தின் வாழ்வைஅதனுள்ளிருக்கும் ஒருவன் வந்து எழுதும்போது மட்டுமே கிடைக்கும் கவித்துவ தருணங்களை இவரது கவிதைகள் மிகச்சரியாக பதிவு செய்கின்றன. இவரது முதல் கவிதைத் தொகுப்பு ‘அவியங்கோரா’ வெளியாகி முக்கியமான கவனத்தைப் பெற்றுள்ளது. 

இறப்பை அல்லது ஒரு பிரிவை குழந்தைகள் அந்த கணத்தில் உணர்வதில்லை.  அது அவர்கள் மனதில் மெல்ல தேங்கி பின் ஒலிக்கும். கு.அழகிரிசாமியின் ‘இருவர் கண்ட ஒரே கனவு’ கதையில் அதனை அத்தனை அழகாக சித்தரித்திருப்பார். 

’இருவர் கண்ட ஒரே கனவு’ கதை போல் டி.அனில்குமாரின் இந்த அவியங்கோரா கவிதையிலும் அந்த குழந்தைகளின் குழந்தைமை வெளிப்படுவதுடன் நின்றுவிடவில்லை. அதன் மேலதிகமாக வாழ்வின் குரூரம் வந்து அமர்கிறது. அந்த குரூரத்தின் எடையை கவிதை மொழி தாங்கி கனக்கிறது.

- ஆனந்த் குமார்

***

அவியங்கோரா

இறுதிச்சடங்கு முடிந்து

பூச்சியாக

ஆன்மா வீட்டிற்கு வந்தது

 

அப்பா.. அப்பா’ என

நாங்கள் ஒன்பதுபேரும்

கூவினோம்

 

எண்ணைப்பூசி

அப்போதுதான் படுத்திருந்த அம்மா

கொண்டையை வாரிச்சுருட்டி

தெறிக்கும் கடல்மொழியில்

நாலு கெட்டவார்த்தைச் சொன்னாள்

 

அப்பா அப்பா

ஓஞ்செறகு ஏன் இப்படியிருக்கு

கல்லறையில் எப்படிக் கெடந்துறங்குவ நீ

நாங்கள் ஒன்பதுபேரும்

முழந்தாளிட்டு கேட்டோம்

 

வலையை எடுங்க மக்களே

ஏறி நடங்க

அவியங்கோரா அள்ளிட்டு

திரும்பலாம்

 

பொழுது ஒளிகொள்ள

ஈரத்துணியுடன்

நாங்கள் பத்துபேரும்

திரும்பி வந்தோம்

 

அம்மா நன்றாக உறங்கிக்கொண்டிருந்தாள்

சீ ! எழுந்திருடீ

அப்பா கூச்சலிட்டார்

 

அவியங்கோரா வெந்த மணம்

மரவள்ளியுடன் உப்பும் மிளகும்

ஏப்பம்விட்டு அப்பா கிளம்பினார்

 

அப்பா அப்பா

எங்கே போற

இங்கேயே இருந்துக்கோ

நாங்க பத்து பேரும்

போயி படுத்துக்கிறோம்

கல்லறையில்

 

                                                                                                                                                        - டி.அனில்குமார்

* அவியங்கோரா – ஒரு சிறிய மீன்

***

தமிழ் இலக்கியத்தில் இன்று வரை குறிஞ்சி, மருத நிலம் பேசப்பட்டது போல் நெய்தல் நிலம் பேசப்பட்டதில்லை. நாவல்களில் ஜோ.டி.குரூஸ் செய்திருக்கிறது. கவிதையில் அவை பெரும்பாலும் பெயர் சுட்டும் ஒரு இடமாக மட்டுமே வந்துள்ளது. அதனை தாண்டி அந்நிலத்தோடு அனுக்கம் என்பது நம் எழுத்தில் மிகக் குறைவே. 

மலையாளத்தின் புதுமுக கவிஞரான டி. அனில் குமார் நெய்தல் நிலத்தில் வளர்ந்தவர். அவரது கவிதைகளை வெறும் அந்நிலத்தின் காட்சி படிமங்கள் என்றே சொல்லத் தோன்றுகிறது. அந்த காட்சியை விரித்து வாழ்வின் கவித்துவமான தருணத்தோடு முடிச்சிட்டு கவிதை புனைகிறார் டி.அனில் குமார்.

இந்த கவிதையில் பிள்ளைகள் விளையாடும் முற்றத்தில் படகில் வந்தமரும் அந்த ஆச்சி யார்? எங்கெங்கோ பயணித்து அந்த வீட்டின் முற்றத்தில் அமரும் மூக்குவத்தி எனச் சொல்லுமிடத்திலிருந்து கவிதை ஆரம்பமாகிறது.


- ஜி.எஸ்.எஸ்.வி.நவின்

***

படகு

 பிள்ளைகள் விளையாடும் முற்றத்தில்

வலை விரித்திருந்தாள் ஒரு ஆச்சி

இப்பதான் வந்தேன்

கரையேறியிருந்த படகைச் சுட்டி

அவள் சொன்னாள்

 

இதுபோன்ற படகு

850 வருடங்கள் பழமையானது

85 வயதுள்ள இந்த ஆச்சி

இதிலெப்போது போய்வந்தாள்

 

அப்போதுதான் தெரிந்தது

அவள் அந்தவீட்டை சேர்ந்தவளல்ல

அவள் ஒரு பயணி

அவள் புறப்பட்டு 850 வருடங்கள் ஆகிறது

அரபியாய்

பிரெஞ்சுக்காரியாய்

டச்சுக்காரியாய்

இப்போது இந்த குடிசைமுற்றத்தில்

ஒரு முக்குவத்தியாக

 

சிறிது நேரம் கழித்து

படகை தள்ளி போகிறாள்

85 வயதுள்ள

850 வருடங்கள் முன்பே புறப்பட்ட

ஒரு ஆச்சி

டி. அனில் குமார்

- தமிழில் மொழிபெயர்ப்பு ஆனந்த் குமார்

***

(‘அவியங்கோரா’ தொகுப்பிலிருந்து)

 அவியங்கோரா வாங்க

 

Share:
Powered by Blogger.

ஆகாய மிட்டாய் - கல்பற்றா நாராயணன் கவிதை

ஆகாய மிட்டாய் ந ண்பனின் மகளின் பெயர் மழை என்று தெரிந்தபோது மனம் தெளிந்தது சாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம் சற்று பிந்தியானால...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive